பெருமாள் துதி!
அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….இன்று 3 நாமங்கள் ’’கோவிந்தாய, விஷ்ணவே, திரிவிக்ரமாய’’….!
“அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை
அடைத்திடத் தொட்டனை ஏழுமலை
பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய்
புகல்ஜர கண்டியில் வாழயிலை
துளசியை மென்றிட குறையிலை என்றிடும்
நிலைதர நின்றிடும் கோவிந்தா
அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில்
வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
“செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்
முகநுனி தாரணி கொண்டவனே
சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்
விதவித பந்தியில் உண்டவனே
விதையுழு ராமனும் மழுமுனி ராமனும்
தொழுரகு ராமனும் பாகவதக்
கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும்
சதைவுயிர் விஷ்ணுவின் சாகசமே”….(5)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
“அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
உணர்குரு சுக்கிரர் கட்டளையை
பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
வடிவினில் திக்கது தொட்டனனே
புலனுரு வாமனம் பழகிட நீமனம்
பெருகுவை ஆணவ கந்தையிலே
சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
சரணடை கோவண சந்நிதியில்”….(6)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!
