’’பெருமாள் த்வாதஸ நாமத் துதி
கிரேசி மோகன்
’’பெருமாள் த்வாதஸ நாமத் துதி….இன்றைய மூன்று ‘’வாமனாய, ஸ்ரீதராய, ரிஷிகேசாய’’….!
“சிறைவசு தேவகி கருவச மாகிட
இரவினில் ஏகினன் கோகுலமே
கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன்
தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும்
குடுமியின் உச்சமும் பூமணமாய்
குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற
களபலி சேய்வளர் வாமனனே ….(7)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
“இலைமரு தாணியின் மணமுறை மேனியள்
திருமகள் பூணிடும் சீதரனே
அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி
மலைசிவ சங்கரி சோதரனே
அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும்
சிலைபரு தண்டமும் கண்டவுடன்
விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும்
விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
“அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
அழியச ராசரம் வந்தவனை
தசவித வேஷனை முனிமன வாசனை
தவரிஷி கேசனை வந்தனம்செய்
தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
ரகுபதி ராகவ ரூபமெடு
தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!