’குமார சம்பவம்’
கிரேசி மோகன்
——————————–
மடித்து தொடையில் மிடுக்காய்ப் பதித்த
அடித்தா மரையை அகற்றி – வெடுக்கென
ஆசன பீடத்தை அங்கீ கரித்தூன்றி
பேசினான் மாரனைப் பார்த்து….(134)
உச்சரித்தக் கீர்த்திகள் நிச்சயமே நண்பனே
அச்சுறுத்தல் நீங்கி அகமகிழ்ந்தேன் -வச்சிரத்தை
ஒத்தவனே, உன்படைதான் சித்தமகா யோகியையும்
தத்தளிக்க வைத்திடும் தைத்து….(135)
பூமியை சேடன் பொறுத்தல் திறன்கண்டே
நேமியன் நாடினான் நீள்துயில் -பூமய
வில்லாளி நண்பா விறலில் எனையொத்த
வல்லானுன் வாளிக்கு வாய்ப்பு….(136)
காளையார் மீது கணைவிட்(டு) அவர்தவச்
சோலையை சாய்ப்பதாய் சொன்னதற்கு -வேளைபார்
வந்தது மன்மதா நொந்திருக்கும் எங்களின்
அந்தரங்க ஆசி அதற்கு….(137)
ஆவலாய் தேவர்கள் அவ்வீசன் சேய்சேனைக்
காவலாய் வாய்த்திடக் காத்துள்ளார் -ஏவுவாய்
ஓரம்பால் வேதங்கள் ஆரம்பம் ஆகிடும்
வேரின்பால் ஆசை விதைத்து….(138)
காரியன் நான்முகன் காரணன் ஈசனின்
வீரியம் தாங்கும் வலுவுடையாள் -கூறினன்
பார்வதி என்றே புலனடக்கம் பெற்றவளால்
பார்அவதி உந்தன் பணிக்கு….(139)….கிரேசி மோகன்….!