பெருமாள் திருப் புகழ்…. திருவள்ளுர் வீர ராகவ பெருமாள்

0

கிரேசி மோகன்

திருவள்ளூர் திரு.என்.சி.ஸ்ரீதர் அவர்களின் உபயத்தால் ஒரு அம்மாவசையில், அவர் துணை திரு.நாராயணன் அழைத்துச் செல்ல ‘’வீர ராகவப் பெருமாளை’’ தரிசித்தேன்(மாளைய அம்மாவசை ஸ்பெஷல்)….!ஆஹா ஏரிகாத்த ராமர்”எவ்வுள்” எனக் கேட்க ,சாலிஹோத்ர ரிஷி காட்டிய அவ்வுள்ளில் காட்டில் நடந்த களைப்பும் ,ராவணனைக் கொன்ற சோர்வும் தீர…. (திரு +எவ்வுள்+ஊர்-திருவள்ளூர்) ….வீர ராகவ பெருமாள் சாலியர் மீது கரத்தை வைத்து கிடந்த சயனக் கோலத்தில் காட்சி தருகிறார் என்பது ஸ்தல புராணம்….

பெருமாள் திருப் புகழ்….
திருவள்ளுர் வீர ராகவ பெருமாள்
———————————————————–

தய்யான தான தானன தய்யான தான தானன
தய்யான தான தானன -தனதான

“பொல்லாத நோயில் வாடிட தள்ளாது தேகம் ஆடிடும்
செல்லாத காசு ஆகுவை -அதனாலே,
அவ்வேளை சோணை மாமலை உள்ளுறும் தீயில் ஸ்நானம்செய்
வல்லானவ் ஆல வாய்மகன் -ரமணேசர்

சொல்லாத மோன பாஷையை அவ்வாறே நானும் பேசிட
செவ்வேளின் தாயின் சோதர -அருள்வாயே
செய்யாளின் மீது ராவண ஒவ்வாத காம மோடுயிர்
கொய்யேவு வாளி வீசிடும் -ரகுராமா

கல்லேறி சாபம் தீரவும் ,முள்ளேறி பாதம் நோகவும்
கள்ளுறும் கேச ஜானகி -இளையோனும்
அய்யாவுன் கூட ஏகினும் ,மெய்யான போதும் மானுட
பொய்யான மாய மேனியில் -தளர்வாகி

புள்ளுர்தி ஆழி நாகணை செல்லாழி சோழி யாவையும்
கொள்ளாது ஒய்வு காணவும் -புயமாளும்
வில்லோரம் வீசி சாலியர் நல்லோரின் மீது ஊணிடும்
வள்ளுரின் வீர ராகவ -பெருமாளே”….கிரேசி மோகன்….!

புள்ளூர்தி -கருட வாகனம்….ஆழி நாகணை -பாற்கடல் பாம்பு மெத்தை….!
செல்லாழி -சுதர்சன சக்கிரம்….சோழி -வெண்சங்கு….
————————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *