-மலர் சபா 

மதுரைக் காண்டம் – அழற்படு காதை

பவளம் போன்ற சிவந்த நிற மேனியுடையவன்;
ஆழமான கடல்சூழ் உலகை
ஆள்கின்ற மன்னனைப் போல
முரசு, வெண்கொற்றக்குடை, வெண் சாமரம்,
நெடுங்கொடி, புகழ்வாய்ந்த அங்குசம்,
வடிவேல், வடிகயிறு
இவற்றைக் கையில் ஏந்தியவன்;           king-2

எண்ணில் அடங்காத
பகை அரசர்களைப்
போரில் புறமுதுகிட்டு ஓடச் செய்தவன்;
இந்நிலவுலகம் முழுவதையும்
தன் குடையின்கீழ்க் கொண்டுவந்து
செங்கோல் செலுத்தி,
தீவினைகளை அகற்றி,
வெற்றிகள் கொண்டு,
தன்பெயரை நிலைநிறுத்தும் வண்ணம்
புகழினை வளர்த்துக்
குறிஞ்சி, முதலிய நானிலம் காத்துப்
பெரும்புகழும் சிறப்பும் வாய்ந்த
‘நெடியோன்’ என்னும் பெயர்கொண்ட
பாண்டியனை ஒத்த
அரச பூதங்களுக்குத் தலைவனான
வெல்வதற்கு அரிய
சிறந்த ஆற்றலையுடைய அரச பூதமும்…

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *