(  எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

 

வீரமொடு கல்விசெல்வம் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை

பார்மீது வாழுதற்கு பலருக்கும் தேவையிவை

ஊரெல்லாம் யாவருமே கொண்டாடி மகிழுமிந்த

உயர்ந்த நவராத்திரியை உணர்வுடனே கடைப்பிடிப்போம் !

 

வீரமொடு கல்விசெல்வம் வீணாகிப் போவதனை

பாரினிலே பார்க்கையிலே பதைபதைப்பே வருகிறது

ஊருக்கும் உதவாமல் உழைத்தவர்க்கும் சேராமல்

சேராதவிடம் சேர்ந்து செயலொடுந்து போகிறதே !

 

முச்செல்வம் பெறுவதற்கு முத்தேவிதனைத் துதிக்க

இத்தரையில் நவராத்ரி இப்போது நடக்கிறது

அத்தேவி அனைவரையும் அகமார வேண்டிநாம்

சித்தமுடன் துதித்துநின்று சிந்தனையைத் திருத்திடுவோம் !

 

உயர்ந்தசெல்வம் எதுவென்று உரத்தகுரல் எழுப்பிநின்று

பட்டிமன்றம் போடுவதில் பலனெதுவும் இல்லையப்பா

துட்டகுணம் உள்ளோரின் கைசேர்ந்த செல்வமெலாம்

தூய்மைபெற வேண்டுமென்று துதித்திடுவோம் தேவியிடம் !

 

கல்வியில்லார் கரயேறக் காட்டிடுவோம் நல்லவழி

காசில்லார் வாழ்வதற்குக் கண்டிடுவோம் புதியவழி

வீரமதை  விவேகமுடன்  விதைத்திடுவோம் மனமெல்லாம்

மலைமகளும் அலைமகளும் கலைமகளும் மகிழ்ந்திடுவார் !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *