தீபத் திருநாள்!
திருவண்ணாமலை மகிமை
அண்ணா மலையாய் திகழ்ந்திடும் தலம்
ஆதியும் அந்தமும் இல்லாதான் தலம்
இருள் நீக்கும் ஜோதி வடிவான தலம்
ஈடற்ற பெருமைகள் பல பெற்ற தலம்
உண்ணாமுலை உடனுறைந்திடும் தலம்
ஊழ்வினை அகற்றும் புண்ணிய தலம்
எங்கள் திருவண்ணாமலை தெய்வீக தலம்
ஏகமனதுடன் நினைத்தால் முக்தி தரும் தலம்
ஐயம் நீக்கி சிந்தை தெளிவிக்கும் தலம்
ஒப்பற்ற சித்தர்கள் பலர் வாழ்ந்த தலம்
ஓயாது மூலிகைக் காற்று தாலாட்டும் தலம்
ஔவைக்கு பிரியமான சண்முகநாதனும்
அருணகிரிநாதருக்கு அருளிய தலம்
அஷ்ட லிங்கங்களையும் கிரிவலம் வந்தால்
அல்லல்கள் யாவும் அகன்று ஓடிடும்
கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள்
காணும் இடமெங்கும் தீபங்கள் ஜொலிக்கும்
ரமணர் சேஷாத்திரி போன்றோரால் தான்
சிறப்புகள் பெற்றது நம்முடைய தலம்
அண்ணா மலையை அனுதினம் நினைப்போம்
அல்லல்கள் மறைந்து அவனியில் நிலைப்போம்
சித்ரப்ரியங்கா ராஜா
திருவண்ணாமலை.