தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த -தனதான
————————————————–
பெருமாள் திருப் புகழ்….!
————————————————————

“சிவனார் கொடுத்த சிலைநா ணிழுத்து
சிலைஜா னகிக்கு -மணமாலை
இடுரா மபத்ர ரகுவீ ரகத்ய
மறைதே சிகர்க்கு -பரிவான,
அவமா னமுற்று அரியே யெனக்கை
அணிசே லைவிட்டு-அவள்கூவ
சரணா கதிக்கு பதிலாய் உடுத்த
வளர்சே லைகொட்டி -அருள்வோனே
கவணால் விரட்ட பரண்மேல் இருக்கும்
குறமா தணைக்க -மயலேறி
கிழவே டமுற்று வருவே லவர்க்கு
முறைமா மசக்தி -அபிராமி
சிவகா மிசுத்த பரிபூ ரணிக்கு
வெகுநே சமுற்ற -முதியோனே
அலைபாற் கடற்குள் விடசே டமெத்தை
வளர்யோ கநித்ரை -பெருமாளே”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *