ஸ்ரீரங்கநாதரைப் பற்றி(திருச்சி நாடகம் சென்றபோது ஸ்ரீரங்க தரிசனம் ரெயிலில்….ரெயிலில் எழுதியது….!)
———————————————————————————————————————

201612231141081644_srirangam-temple-vaikunta-ekadasi-festival-preparations_secvpf

நாரா யணாவுந்தன் பேரா யிரம்கூறி
ஆரா தனைசெய்(து) அறிகிலேன் -போறாத
வேளையில் கூப்பிட்டால் தோளைக் குலுக்காதே
காளையே கன்றெனைக் கா….

சூடிக் கொடுத்தவளை நாடிக் கரம்பிடித்து
ஜோடிப் பொருத்தமான சீரங்கா -பாடித்
தொடுத்திடுவேன் வெண்பா தமிழாய்நீ என்பால்
கொடுத்திடுவாய் கார்முகிலா க….

அடைக்கலம் நேசம் அரவணைப்பு பாசம்
கடைவிரித்தக் காட்சியாய்க் காதல் -நடைபிணமாய்
காரங்க வண்ணன் கழல்கண்டு சேவிக்க
சீரங்கம் சென்றோர்க்கு சீர்….

பாம்புல பட்டுப் படுக்கை விரிச்சதுல
சோம்பலா தூங்குற சொஸ்த்தமா -ஆம்புள
சிங்கமே அன்னிக்கு சின்னபய சொன்னதுக்கு
எங்கிருந்தோ வந்த(து) எவரு….

நாதா திருவரங்க நாதா தரணிகுரு
நாதா ரமாப்பிராண நாதாவி -னோதா
துயறருக்கும் பாதாம் புயம்மறந்தேன் தீதாம்
மயர்வறுக்க நீதான் மருந்து….

பொன்னையும் பூமியையும் முன்னை மணக்கையில்
திண்ணமாய்க் கட்டினாய்த் தாலியை -தன்னையே
தாலியாக்கி உன்னைத் தழுவி மணந்துனக்கு
வேலியான பொன்னியுன் வாழ்வு….(111)….7-2-2009

முன்விழித்துப், பின்விழித்துப் பொன்மகள் பார்த்திருக்க
கண்விழிக்கா யோகமா? கற்பனையா? -தென்னிலங்கை
பக்கம் தவித்திருக்கும் பத்தினியாள் ஞாபகமா?
துக்கமென்ன சொல்லிவிட்டு தூங்கு….

களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில்
மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய்
கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின்
பள்ளிகொண்ட ரங்கனைப் பாடு….

ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
கருத்தநிறக் கண்ணா கோட்டை – திருச்சியில்
மாது பிளஸ்டூவில் சாக்லேட் கிருஷ்ணாவில்
தாதவிழ் பூவாய் மலர்….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *