கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”நூறைநீ வென்றிட ஈரே(ழு) உலகாள்வாய்
மாரில் கணைதைத்து மாளுங்கால் -வீராநீ
சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுந்திரு
தர்கம் புரிதல் தவிர்”….
”நாணை இழுத்திட நாணாதே நண்பனே
ஆனை படுத்தால் அசுவமட்டம் -சேனைக்
களம்நீங்க செல்லாத காசாவாய், வேந்தருன்
உளம்நோக வைப்பார் உவந்து”….
”ஈங்கிதனைக் கேட்டோய் இதன்பெயர் கேண்மக்கள்
சாங்கியம் என்போர், இனியடுத்து -தாங்கிய
கர்மத் தளைகளின் கட்டவிழ்க்கும் யோகத்தின்
மர்மம் உரைப்போம் உமக்கு”….கிரேசி மோகன்….!