மத்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

0

பவள சங்கரி

வரும் நாட்களில் கோடையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கப்போகிறது. இருக்கும் வெப்பத்தைவிட உணரக்கூடிய வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளை களைவதற்கு அனைத்து மாநிலங்களும் உடனடி நடவடிக்கைகள் எடுத்து அரசு மருத்துவமனைகளில் இதற்கென தனியாக சில படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என்றும் அவை நல்ல காற்றோட்டத்துடனும், குளிர் சாதன வசதி கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவே ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் போன்ற மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டன. ராஜஸ்தான், ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் இதுவரை இதற்கான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.. சென்ற 5 ஆண்டில் மட்டும் 25,000 பேர் இதனால் உயிரிழந்துள்ளார்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விசயம். இதுபோல நடவடிக்கைகள் எடுத்ததால் ஆந்திர மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டில் 2112 பேர் இறப்பு குறைந்து 2016 இல் 1000 ஆகியுள்ளதையும் கருத்தில் கொள்ளத்தக்கது

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *