கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’கண்டேன் அனுமனை”….!
————————————————-
எஜமானன் ராமனுக்(கு) என்றும் பணிந்த
நிஜமான பக்தன் அனுமான் -புஜத்தில்
வடைமாலை சார்த்தி வணங்கி உறங்க
விடிகாலை காண்போம் வியப்பு….
சினத்தீ இராவணன் சீர்மல்கு தீவில்
கணத்தில்தீ வைத்து கொளுத்தி-(அசோக)வனத்தில்
கணையாழி தந்தன்னை கண்ணீர் துடைத்தோய்
வினையாழி தாண்டிட வை….கிரேசி மோகன்….!