kesav

சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு)
அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப்
பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில்
இறந்தில்லை யாவதேன் இங்கு….!

எதற்கென்ற கேள்வி முதற்கொண்டு மாயை
உதிக்கின்ற ஞானமே எல்லாம் -மதித்துத்
துதிக்கின்ற நானும் விதிக்கின்ற நீயும்
நதிக்கரை நாணல்நீர் நட்பு….!
அமுதா, அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்
சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.