பவள சங்கரி

தலையங்கம்

நீட் தேர்வில் தமிழகத்திலிருந்து 80,000 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள் 15,000 மாணவர்கள். இதில் அதிக மதிப்பெண்களைப்பெற்ற 25 மாணவர்கள் பட்டியலில் ஒரு தமிழ் மாணவர்கூட இடம் பெறவில்லை. நமது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவைச் சார்ந்த மாணவர்கள் 8 இடங்களைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த மதிப்பெண்களில் நமது தமிழக மாணவர்கள் சராசரியாக 50% மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளனர் என்பது வருத்தமான செய்தி.

நேற்று சட்டசபையில், தமிழகக் கல்வி வழியில் நீட் தேர்வில் கலந்துகொண்ட மாணவர்களில் 85% மாணவர்களுக்கு நமது மருத்துவக் கல்லூரிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் மூலமாக பயின்ற 15%  மாணவர்களுக்காகவும் ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்பே நமது உச்ச நீதி மன்றம், உயர்நீதி மன்றங்களில் இதற்கு விலக்கு அளிக்க மறுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பானது சட்ட அங்கீகாரத்தைப் பெறுமா என்பது ஐயமே. அரசு அடுத்த ஆண்டிற்கு இப்போதிருந்தே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பது போல நீட் தேர்வுகளுக்கும் தமிழகம் முழுவதும் சிறந்த பயிற்சி அளிக்க ஆவண செய்யவேண்டியதே அவசியமாகும். அதைவிடுத்து குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பளித்தாலும் அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் என்பதே நிதர்சனம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *