“ரமண வசனாம்ருதம்”
கிரேசி மோகன்
———————————
‘’எண்ணும் எழுத்துமிரு கண்ணென்று கூறுவர்,
எண்ணாதோர் உச்சி எழுத்தினை, -அண்ணா,
மலைரமணர் சொல்லிய மார்க்கம் புகுந்தால்,
இலைகாய் மறைக்கா இனிப்பு’’….!
—————————————————————————————————————-
”அதுவேண் டுமென்றும், இதுவேண் டுமென்றும்
எதுவேண் டினாலும்நீ ஏழை, -புதுவிதமாய்,
ஆடுஓ நாய்க்காய் அழுமோ! அதுநனைய!,
’’மேடருணை செல்மன மே’’….!கிரேசி மோகன்…..
மேடருணை -மேடு(மலை)+ அருணை….
