ஜவுளித் துறையின் அவல நிலை..
பவள சங்கரி
தலையங்கம்
விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியதும், ஏற்றுமதி, உள்நாட்டு சந்தை போன்றவைகளால் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெருமளவில் உறுதுணையாக இருக்கக்கூடியதுமான ஜவுளித்துறைக்கு பாதகம் ஏற்படும் வகையில் 70 ஆண்டுகளாக இல்லாத வரி விதிப்பை தவிர்த்து பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற அரசு வழி வகுக்கவேண்டியது அவசியம். ஜவுளித் துறையினர், அனைத்திந்திய அளவில் போராட்டங்கள் நடத்தி வரும் இந்த மூன்று நாட்களில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பும், பொருளாதார இழப்பும் சந்தித்துள்ளனர் என்பது வேதனையான செய்தி. நமது நிதி அமைச்சர் இதனைக் கருத்தில்கொண்டு, மேற்கொண்டு பல ஆயிரம் கோடி பண இழப்பு ஏற்படாமல் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.