வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சனிசாந்தி ஹோமம் நடைபெற்றது

0

unnamed (5)

unnamed (6)

பெரும்பாலான ஜாதகருக்கு சனிதிசை, சனிபுக்தி, சனி அந்தரத்தினாலும் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளச்சளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைதன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 01.07.2017 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சனி ப்ரீத்தி ஹோமம் காலதோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெற்றது இந்த ஹோமம் பித்ரு தோஷ நிவர்த்திக்காகவும், ஆயுள் அபிவிருத்திக்காகவும் நடைபெற்றது இந்த யாகத்தில் கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நெல்பொரி, நல்லெண்ணைய், வெல்லம் வன்னி, சமித்து போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு காலசக்கர பூஜை பைரவர் பூஜை சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை சுதர்சன ஜயந்தியை முன்னிட்டு மஹா சுதர்சன ஹோமம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். பெற்றது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.