கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
சிந்தை வெளிகடந்து மந்தை வெளிபுகுந்து
கந்தல் உடையணிந்து கன்றுகளை -தந்தையாய்,
அன்னையாய்க், காத்து அறுகம்(புல்) அளித்திடும்
கண்ணனை நெஞ்சே கருது….!
பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
காயாம்பூ வண்ணனே காப்பு….கிரேசி மோகன்…..!