ஏவுகணைகள் – சிஏஜி அறிக்கை
பவள சங்கரி
தலையங்கம்
சிஏஜி யின் அறிக்கையின்படி நமது ஏவுகணைகள் எட்டுவித காரணங்களால் தரம் தாழ்ந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகளைக்கொண்டு சீனாவோடு போர் மூண்டால் அதிக காலம் போரில் நிலைத்து நிற்பது சிரமம் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இன்று பாகிசுதானில் அந்நாட்டு பிரதமர் தவறு செய்துள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டு பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதோடு இனி வாழ்நாள் முழுவதும் அரசு மற்றும் அரசியலில் பங்குகொள்ள இயலாதவாறு செயல்படுத்தப்படுகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை குறுகிய காலம் நிர்ணயிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணைகளைப் பொறுத்தவரை தரக்கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தின் (DRDO) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டும் சிஏஜி யால் தரம் குறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டால் தவறு எங்கே நடந்துள்ளது என்று கண்டறியப்பட்டு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். பாதுகாப்பு விசயத்தில் மெத்தனம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.