கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
இன்று பார்க்க ‘’தன்வந்த்ரி” போலிருக்கார், உடுப்பி கிருஷ்ணர், அமிர்த கலஸ ஹஸ்தராய்….!
—————————————————————————————————————————————-
‘புண்வந்(து) அரித்து புரையோடிப் போனாலும்
தன்வந் திரியிருக்கார் தீர்வுக்கு: -மண்வந்த
எல்லோர்க்கும் உண்டு எமபயம், தன்வந்த்ரி
கொள்வார்க்கு என்றுமவர் காப்பு”….கிரேசி மோகன்….
’’பானைக்குள் பாற்கடல், த்வாபர(துவாபர -த்வார) பாலகன்,
ஆனைக்கா அய்யன் அகிலாண்ட -மோனே(மலையாளம்)
எதுகையாய் வந்தோன் யதுகுல அண்ணன்
முதுமை இலாமுகுந்த(மூவா முகுந்தர்க்கு இளையவளே-அபிராமி அந்தாதி) மால்’’….கிரேசி மோகன்….!

