மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
எனக்குப் பரிசெதுவும் தருவ தில்லை
என்னினிய காதலி !
நாட்டுப் புறத்து நங்கை இல்லையென
நான் அறிவேன்.
என்றென்றும் அன்பை அள்ளித்
தருபவள் அவள்.
எனக்குப் பரிசு தரமாட்டாள்
என் காதலி !
தனிமையில் வாடினால் என்னைத்
தாலாட்டுவாள் அவள் !
பாசாங்கு செய்கிறாள் என்பார்
பக்கத்தில் இருப்பவர்.
அப்படி அவள் இல்லை என்று
அறிந்தவன் நான்.
தன்னை ஓர் ஆடவன் உற்று நோக்க
இடம் தராதவள் !
நான் அழுவதைப் பார்த்தால்
மனம் உடைவாள் !
பூரித்து போவாள் நானவளை
ஒருபோதும்
பிரிய மாட்டேன் என்றால் !
எனக்குப் பொறாமை உண்டாக்கத்
துணியாதவள்.
என்னைப் புரிந்து கொண்டவள்;
தன் காதலனை மட்டும்
என்றும் நேசிப்பவள்.
தன் காதலை, நேரத்தை எல்லாம்
தருவது எனக்குத் தான் !
ஏனென்று கேட்காதே !


Leave a Reply