கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’சனிக்கிழமை ஆவின் சுரத்தலை ஏற்று
மணிக்கணக்கில் நின்றார் மாலர், -தணிக்கை
ஏதுமின்றி, ஏழுமலை ஃபாதர்க்கு(FATHERக்கு) கோமாதா
கீதகோ விந்தக் கறப்பு’’….!
“அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
காட்டிய கேசவ் கவி”….!
“ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயண
மால்ஏழ் மலையப்பர் மார்”….கிரேசி மோகன்….!