கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”கொட்டும் மழைக்குக் குடையாகக் குன்றினைச்
சுட்டு விரலால் சுமந்தவா -திட்டம்
உனக்குண்டோ என்னை உருப்படியாய் ஆக்க
குணக்குன்றே கொள்ளுந்தன் கீழ்”….கிரேசி மோகன்….!
’’நட்டுவாங் கம்செய்தார், நாகத்தின் மேலன்று:
கட்டுவா ளங்கம்தாய்க்(யசோதை) கண்ணியின்(ஏரார்ந்த கண்ணி) -விட்டலடி(விட்டல் திருவடி),(OR) எட்டடியில்(எட்டானவர் கண்ணன்)-
அட்டாங்க யோகமாய் ஆழ்ந்துறங்கு, சேய்க்கன்னுக்
குட்டியாய்க் காலில் கிட’’….கிரேசி மோகன்….!