சி. ஜெயபாரதன், கனடா
பல்கலைக் கழகம் பகட்டுப்
பணச் சந்தை ஆனது !
பள்ளிக்கூடம்
பணக்கூடம் ஆனது !
கல்விக்கூடம்
காசுக்கூடம் ஆனது !
மடி நிறையப் பணமிருந்தால்
மகளுக்குப் படிப்பு !
வாரிக் கொடுத்தால் தான்
பட்டம் கிடைக்கும் !
படிப்புக்கும், பதவிக்கும்
லஞ்சமா ???
வள்ளுவரைப் படிக்கவும், ஆங்கிலத்தில்
ஷேக்ஸ்பியர் படிக்கவும்,
வரதட்சணை வழங்க வேண்டுமா ?
வழி தவறிய தமிழ்நாடே !

Leave a Reply