’சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு’’….!
“இங்கல்பம் யாவுமே இந்திரியம் மூலமாய்
சங்கல்பம் ஆகிட சஞ்சலம் -பொங்குது ,
ஆகவே ஆசை அறுமின் ,அகந்தைப்பேய்
சாகவே ஆன்மன் ஜனிப்பு”….கிரேசி மோகன் ….!
‘சூரி நாகம்மாள்’’ ‘’ஸ்ரீரமணாஸ்ரம லேகுலு’’(கடிதங்கள்)….குருவின் கண்ணசைவுக்குக் காத்திருக்கும் சீடனின் திருஷ்டியை வேதாந்த பரிபாஷையில் ,வானர லக்ஷியத்திற்கு உவமானமாக சொல்கிறார்கள்….இதைத்தான் ZEN SATORI என்கிறது….விவேகானந்தரின் ‘’விழிமின்! எழுமின்!’’….!
”செத்தமனம் வேண்டும் சகஜ சமாதிக்கு,
புத்தமனம் பூர்ண பிரஞ்ஞைக்கு, -மொத்தமனம்,
வேண்டுமே லக்ஷியமாய் வானரம்போல், கைவல்யம்
தீண்டுமே உன்னைத் தொடர்ந்து’’….கிரேசி மோகன்….!