கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

”குண்டு கிருஷ்ணவிஷ்ணு,”வை குண்டம்” வஸிப்பதைக்
கண்ட திருவில்லிக் கோதையார், -தெண்டனிட்டு,
செப்பிய முப்பதை சொல்வோர்க்(கு) எமனேது,
இப்புவியில் கொள்ளார் இறப்பு(இறவா வரம்தரும் இறை)’’….கிரேசி மோகன்….!
‘’மாலே மணிவண்ணன் மீதுகந்த முப்பதும்,
நீலோத் பலர்ஆலில் நீந்தியோன் -தாலேலோ,
தாலாட்டுப் பாடல், துயிலெழுப்பி வைகுண்ட,
மேலோட்ட மாய்செல் மழை’’….கிரேசி மோகன்…