கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஆடுகின்றார் கண்ணன் அசோதை கடையலுக்கு
பாடுகிறார் பாரதப் பாடலை -நாடுகின்றார்
உண்டான வெண்ணையை உள்ளங்கை நெல்லியாய்
கொண்டோ ளிடம்கீதை கேட்பு’’…கிரேசி மோகன்….!
‘‘தா’’வென்று வெண்ணையை தாமோதர் கேட்டிட,
’’தோ’’வென்று மாற்றான்தாய் தேவகிக்கு , -’நா’வென்ற
கீதையை மத்தால் கடைந்து கண்ணனுக்கே,
பாதையைக் காட்டும்அம் பா(யசோதை ஆச்சி)’’….கிரேசி மோகன்….!