எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

 

 
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று நடத்திய
உத்தமராம் காந்திமகான்
உயர்வுபெற்று நிற்கிறார்
சத்தியத்தை மனதிலேற்றி
சாதனைகள் செய்திட்ட
உத்தமராம் காந்திமகான்
உலகம்போற்ற வாழ்கிறார் !

உணவைமாற்றி உடையைமாற்றி
உள்ளமதை உறுதியாய்
தெளிவையூட்டி சிறப்பைக்காட்டி
சிந்தனையை ஊட்டினார்
அழிவில்லாத வழியைக்காட்டி
அன்புகருணை பேசியே
அகிலவுலகும் போற்றும்வண்ணம்
அண்ணல்காந்தி வாழ்கிறார் !

உண்ணாநோன்பை உலகம்வியக்க
உத்தமரும் காட்டினார்
மண்ணின்மாண்பை வியந்துநின்று
மகான்காந்தி போற்றினார்
தன்னைபெற்ற தாயைக்காந்தி
தலைவணங்கி நின்றிட்டார்
தரணிபோற்றும் மனிதராக
காந்தியின்று வாழ்கிறார் !

அடக்குமுறை வெள்ளையரை
அஹிம்சையாலே வென்றிட்டார்
அன்புகொண்டு காந்திமகான்
அனைவரையும் அணைத்திட்டார்
அரக்ககுணம் காந்திமுன்பு
அழிந்தொழுந்து போனதால்
அண்ணல்காந்தி உலகமெங்கும்
அன்புருவாய் வாழ்கிறார் !

சாந்தி சமாதானம்காண
காந்திமகான் உழைத்திட்டார்
சக்தியெலாம் ஒன்றுசேர்த்து
சரித்திரமே படைத்திட்டார்
நீதியினைத் தெய்வமாக்கி
நெஞ்சமதில் நிறைத்திட்டார்
நீங்காமல் உலகமெங்கும்
நின்றுகாந்தி வாழ்கிறார் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.