நெஞ்சுக்குள் உன்னை அடைப்பேன்

0

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

 

 

 

 

 

 

தனித்துப் போய் விட்ட நான்

நகர்ப் புறத்தே உலவினேன் !

எதைக் காணப் போனேன்

என்றெ னக்குத் தெரிய வில்லை ?

அடுத்த பக்கம் போனேன்,

அங்கு வேறினத் தவனைக் கண்டேன் !

அப்போது திடீரெனப் பார்த்தது  

உன்னைத் தான் !

சொன்னேனா என்றாவது,

உன்னை நான் அடைய விரும்புவதை ?

 

ஓவ்வோர் நாளும், எந்தன் வாழ்வில்

உடனாய் நீ  இருக்கத் தேவை.

ஓடிப் போக வில்லை நீ !

பொய் உரைக்க வில்லை நீ !

உன்னைக் கட்டி அணைக்க  

ஓடிச் செல்லும் என் கைகள் ! ஆயினும்

ஒதுங்கிப் போனாய் நீ !

உள்ளத்தில் உணர்வாய் நீயும், அதை

உரைத்தேன் நானும் அன்று

மீண்டும் சந்திப் போம்  !

 

என்னருகில் நீ இருக்க வேண்டும் !

என் குரலை

நீ கேட்க வேண்டும் !

ஒவ்வோர் நாளும்

ஒன்றாக நாமிருக்க வேண்டும்

என்று  நீ சொல்வாய் !

என் நெஞ்சுக்குள் அடைப்பேன்

உன்னை !

 

என்ன செய்வேன்  அதற்கு ?

என்ன வாக மாறுவேன் நான் ?

உன்னோ டிருக்கும் இடமே நான்

தங்க விரும்பும் இல்லம் !

சத்திய சீலன் நான் என்றால்

உன்னைப் பிரிய மாட்டேன் !

ஒரு வேளை நாம்

பிரிய நேர்ந்து விட்டால்

தெரியும் வழி எனக்கு !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *