கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

”கண்ணாடி பார்க்கின்றாள், கன்னி இராதைப்பெண்
முன்னாடி கண்ணன் முதுகிலே -தன்னாடி(தன் ஆடி(கண்ணாடி))
பிம்பத்தில் கண்ணன் பிரதிபலிக்க ,ஓய்ந்தனள்,
சம்பத்தாய்(செல்வமாய்) மார்பிலே ஸ்ரீ(மகாலஷ்மி தாயார்)….!
கனிச்சுவை ராதை கமலஇதழ் கவ்வி
துணிச்சலுடன் முத்தம் திணித்து -அனிச்ச
மலராள் அலறும்முன் மன்னிப்பு கேட்பான்
தளரான் எதற்கும் துணிந்து….கிரேசி மோகன்….!