கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

பாரங்கே பர்த்தனே, போர்ரதம் காத்திருக்கு
யார்கண்கள் பட்டதோ யாமறியோம் -தேரின்
கொடியுச்சி நீலகண்டர்(அனுமார் ருத்திரன் அம்சம்) கொக்கரிப்புகரிப்பு வெற்றி!
மடியுச்சி கொண்டதேன் மண்டு….!
”கலக்கம் உறாதே விலக்கொணா கர்மம்
நிலத்தில் பிறப்பும் இறப்பும் -இலக்கணம்
பார்க்க இதுகவிதை இல்லைகாண் பார்த்தனே
பார்த்தால் புசிக்கும் பகை”….கிரேசி மோகன்….!