கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

மாலை(திருமாலை) இராதைப்பொன் மாலையில்(சாயங்காலம்) சந்தித்து
மாலையாய்(பூ மாலை) சங்கை(சங்குக் கழுத்தை) மருவிடும்(தழுவிட) -வேளையில்,
அக்காள்(இராதை -ஆவின் சக்களத்தி) வருகையில் அக்காரக்(தித்திப்பு) கண்ணபிரான்
அக்கால் கிடையாதம் ‘மே’(பொறாமைக் கனைப்பு)…..கிரேசி மோகன்