எம்.ரிஷான் ஷெரீபின் நூலுக்கு இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது

0

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம், 11 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ‘அரச இலக்கிய விருது வழங்கல் – 2018’ பிரமாண்டமாக நடைபெற்றது.

 

இந்த விழாவில் இலங்கை ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் நூலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியத்துக்கான அரச சாகித்திய இலக்கிய விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த 2300 நூல்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுள் சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *