வருக வருகவென வாழ்த்தி வரவேற்கிறோம்!

2

கவிஞர் அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர். தமது இன்னிசைப் பாடல்களால் தமிழ்த் திரைப்பட இரசிகர்களைக் கவர்ந்தவர். கவிஞர் அறிவுமதியின் இயற்பெயர் ‘மதியழகன்’. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவரின் தமிழ் இலக்கியத்தின் மீது இருந்த விருப்பத்தைக் கண்டு கவிஞர் மீரா கவிஞர் அப்துல் ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். மறைந்த திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் ஏழு படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
2016 ஆம் ஆண்டில், தமிழ் பிறந்தநாள் பாடல் எழுதி, அரோள் கரோலி இசையமைத்து, உத்ரா உன்னிகிருஷ்ணன் இனிமையாகப் பாடி, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2016 மாநாட்டில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது . சிறுவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பரவலாகப் பாடப்படும், ‘Happy birth day to you’ என்ற ஆங்கிலப் பாடலுக்கு இணையாக எழுதி பரவலாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்த நாள் பாடல்

லாலா லாலா லாலா
லா லா லாலா லாலா லாலா

லாலா லாலா லாலா
லா லா லாலா லாலா லாலா

நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்

வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்

நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்

வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பரிவு வேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பரிவு வேண்டும்

எட்டு திக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

எட்டு திக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத் தாளில் எழுத வேண்டும்

உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத் தாளில் எழுத வேண்டும்

சர்க்கரைத் தமிழள்ளி,
தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்

பிறந்த நாள் வாழ்த்துகள்
பிறந்த நாள் வாழ்த்துகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 

கவிஞர் அறிவுமதி அவர்கள் நம் வல்லமை இணையத் தளத்தில் மனமுவந்து தமது படைப்புகளை அளிக்க முன்வந்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.  உளமார்ந்த வாழ்த்துகள் கவிஞர் அவர்களே!

பாலைவனத்திற்குக் கவிஞர் அறிவுமதியின் புதிய விளக்கம் இங்கே:

இது.. புதுக்கோட்டை..அறந்தாங்கிச் சாலையில் இன்று பார்த்த ஓர் ஊரின் பெயர்.


பாலைவனம்..என்பதற்கு DESERT என்றே ஆங்கிலத்தில் பெயர்க்கும் பொதுப் பழக்கம் நம்மிடையே உள்ளது. அது தவறு.

‘பாலை’..என்ற வெப்பாலை என்றும் சொல்லப்படுகிற ஆங்கிலத்தில் WRIGHTIA TINCTORIA… என்கிற மரங்கள் மிகுதியாய் வளர்கிற நிலப்பகுதி… என்பதே இந்தப் ‘பாலைவனம்’..என்பதற்கான சரியான பொருளாகும்.

தமிழ்நாட்டில் பாலைவனம்… என்பது கேரளாவில்.. பாலக்காடு.. பாலைக்காடு என்று தூய தமிழில் இன்றும்!

தமிழ்நாட்டில் சூர சம்ஹாரம்..என்பது கேரளாவில் சூரன் போர்.. என்று இன்றும்
புழங்குதல் போல்தான் இதுவும்!

பாலைவனம் பெயர்ப் பலகையின் கீழ், பூக்களோடு உள்ளதுதான் பாலை மரம்.

அறிவுமதி
ஆவுடையார்கோவில்
29.9.18

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வருக வருகவென வாழ்த்தி வரவேற்கிறோம்!

  1. அருமையான சிந்திக்கத்தக்க பாலைச் சொல் பதிவு. கவிஞருக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *