படைப்பின் வழிப்பயணம்!
-கவிஞர் பூராம் (முனைவா் ம.இராமச்சந்திரன்)
புதிராய் ஈா்க்கும் மிளிரொளி வானத்தின்
பாய்ந்து வரும் தூசியில்
ஆண்டுகள் கோடியின் அணுத்தவம்
மௌனத்தின் பேரோசையில்
கேட்பாரற்றுப் பரவெளி
கிடக்கிறது பரந்து!
அணுக்கள் அணுக்கமாய்
அந்நியமில் அண்டவெளியில்
மூலாக்கினியாய் ஓங்காரம்
உறங்கிக் கொண்டிருக்கும்
அணுவின் ஆற்றலாய்
அவள்!
ஓசையில்லாமல் மாலை நேரத்துக்
குயில் பாடலோடு மஞ்சள் வெயிலோடு
அமைவதில்லை எதுவும்!
அணு பிளந்து
பாறை உடைந்து
ரத்தமும் சதையுமாக
நூற்றாண்டு வரலாற்றின்
புதைபொருளாக உள்ளிருந்து
வெளிப்படும்
பிரபஞ்சத்தின் அனைத்தும்
ஒரு துளி நீரில்!