துக்கை ஆண்டான்

மீன்பிடி வலையரான முத்தரையர்களின் தீண்டாமை விலக்கு நிகழ்வுகளை பழங்காலச் சமூக வரலாற்று நோக்கில் காண்டிட, உள்ளது உள்ளபடி காட்டும் காலக் கண்ணாடியாக இருப்பவை இதில் இடம்பெறும் சில புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள்.

பிறப்பு சார்ந்த சாதீயத் தீண்டாமை என்பது கண்ணிற்கு புலனாகாத வேலியும் சுவரும் போன்ற ஒரு திறந்தவெளிச் சிறைக் கட்டமைப்பு ஆகும் என்பது புரிதல். இந்தத் தீண்டாமை தமிழ்நாட்டில் எப்போது? எந்த வடிவில்? அறிமுகமானது. இதற்கு தாக்குண்ட சமூகங்கள் யாவை? என்பதை பார்ப்போமானால் இக்காலத்தே பலராலும் பரவலாக மேடையிலும், எழுத்திலும் விவரிக்கப்படுவது போல் ஊருள் நுழையவிடாமை, பொதுக் குளத்தில் நீர் மொள்ளத் தடை, எச்சில் துப்பத் தடை, வேட்டியை குறிப்பிட்ட முறையில் கட்டத் தடை போன்றதாக இருந்திட வில்லை. மாறாக, தொழில் சார்ந்து பிணம் தீண்டாமை என்ற வகையில் தான் அது முதன்முதலில் 15/16 ஆம் நூற்றாண்டில் தான் அறிமுகமாகின்றது. அதே நேரம் சாதீயத் தீண்டாமை இன்னும் பிற்பட்ட காலத்தில் 17/18 நூற்றாண்டுகளில் தான் அறிமுகமாகி இருக்க வேண்டும் என்ற ஊகக் கருத்திற்கு தக்கவாறு தான் தமிழ்நாட்டில் பறையர்கள் ஊருள் குடியிருக்க சுதந்திர உரிமை பெற்றிருந்ததையும், உயர் அரசு பதிவிகளில் இருந்ததையும்  புதுக்கோட்டை கல்வெட்டுகள் நமக்கு இயம்புகின்றன. சாதீயத் தீண்டாமைக்கு எடுகோளாக அம்பேத்கர் மனுதர்மத்தில் இருந்து வைக்கும் குறிப்புகள் பிணத் தீண்டாமையைப் பற்றி தான் பேசுகின்றனவேயன்றி சாதீய தீண்டாமை பற்றி பேசவில்லை.

X  50 குறிப்பை எடுத்துவிட்டதால் இது பிணம் கையாள்வோரை பற்றியது என்பது படிப்பவருக்கு தெரியவராது

//Ambedkar > Manu smriti says:

  1. 50. Near well-known trees and burial-grounds, on mountains and in groves, let these (tribes) dwell, known (by certain marks), and subsisting by their peculiar occupations.
  2. 51. But the dwellings of the Chandalas and the Shvapakas shall be outside the village, they must be made Apapatras and their wealth (shall be) dogs and donkeys.
  3. 52. Their dress (shall be) the garments of the dead,(they shall eat) their food from broken dishes, black iron (shall be) their ornaments and they must always wander from place to place.
  4. 53. A man who fulfils a religious duty, shall not seek intercourse with them; their transactions (shall be) among themselves and their marriages with their equals.
  5. 54. Their food shall be given to them by others (than an Aryan giver) in a broken dish; at night they shall not walk about in village and in towns.
  6. 55. By day they may go about for the purpose of their work, distinguished by marks at king’s command, and they shall carry out the corpses(of persons) who have no relatives; that is a settled rule.
  7. 56. By the King’s order they shall always execute the criminals, in accordance with the law, and they shall take for themselves the clothes, the beds, and the ornaments of (such) criminals. . (தூக்கில் இட்டால்  அங்கே குற்றவாளிகளின் பிணம்தான் விழும்) //

X  50 குறிப்பை நீங்கிவிட்டால் இது பிணம் கையாள்வோரை பற்றியது என்பது படிப்பவருக்கு தெரியவராது.

இக்கால் இந்தியாவில் 1108 சாதிகள் ஒடுக்கப்பட்ட அட்டவணை சாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுகூட மனுதர்மத்தால் சுட்டப்படவில்லை. மாறாக, பிணங்களை கையாளும் வெட்டியான் சாதியான சண்டாளர் பற்றி தான் குறிப்பு உள்ளது. இந்தியாவில் அத்தனை ஒடுக்கப்பட்ட சாதியரும் பிணத்தை கையாள்வதில்லை என்பது ஈண்டு கருதற்பாலது. ஆனால் கடந்த 125 ஆண்டுகளாக மேலை வரலாற்று ஆசிரியர் முதல் இக்கால தலித்திய இயக்கங்கள் வரை எல்லோரும் பிணம் கையாளும் வெட்டியான்களுக்கான இந்த மனு தர்மக் கருத்தை அத்தனை ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதும் திணித்துத் தவறாகக் காட்டி சாதீயத் தீண்டாமைக்கான உண்மையான மூல காரணத்தை, காரணகரை பிறர் அறியவிடாமல் செய்துவிட்டனர், செய்தும் வருகின்றனர். நெய்தல், குறிஞ்சி, முல்லை நில மக்களில் சாதீய தீண்டாமை அறவே இல்லாமல் இருக்க வயல் சார்ந்த மருத நிலத்தில் மட்டுமே இந்த 1,108 சாதிகள் இருக்கக் காரணம் என்ன? என்று இதுவரை எவரும் சிந்திக்கவில்லை. சிந்தித்தால் உண்மையான காரணகர் பிடிபட்டு விடுவார்கள். பின் மதமோ, பிராமணரோ, மனுதர்மமோ அதற்கு காரணம் அல்ல என்பது விளங்கிவிடும். கீழ்காணும் கல்வெட்டுகள் இதற்கு வலுவான சான்றுகளாக உள்ளன. ஊன்றிப் படிப்பவருக்கு இதில் அறிவுவெளிச்சம் கிட்டும்

இனி புதுக்கோட்டை கல்வெட்டுகள்

எண் 847. 21 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், புல்வயல், ஈசுவரன் கோவிலில் சுவாமி கோவிலின் மேற்புரச் சுவரில் உள்ள கல்வெட்டு.

_ _ த்து சாகாத _ _ _ _ மேல் செ / ல்லாநின்ற  விக்கிறம வருசம் சித்திரை / 1445_ [4] நாள் வயலகநாட்டு புல்வயல் / ம _ _ ம ஊர் ஆக இசைந்து ஊரவ / ரோம் இவ்வூர் வலையரில் கடை _ / த _ _ ற்றில் கடம்பராய முத்தரைய / ர் [எ]ழுந்தராமை வென்ற முத்தரைய _ / பனையன் உள்ளிட்டாற்கும் உலகப்ப _ / யன் உள்ளிட்டாற்கும் நடுவிற்கூளபெ _ / ந[ச]ரதிருவன் உள்ளிட்டாற்கும் சயிரன் / உள்ளிட்டாற்கும் மேலைக்கூவ தேவே / ந்திர முத்திரையன் வகை  மணவாளர் / காத்தான் உள்[ளி]ட்டாற்கும் வள்ளி பெரி / யான் உள்ளிட்டாற்கும் ஆக இந்த மூன்று / வலையற்கும் கல்வெட்டிக்குடுத்தப / டி இவர்கள் திம்மைக்குச் செய்யுந் தொழில்பாடுகளில் நம்முடைய ஊற் / குள் பெண்டுகள் அல்லவானால் வலைச்சி முக்காட்டு இட்டுச்சவத்துக்கு மு / க்காட்டு இட்டு சவத்துக்கு முன்னே வயானத்துக்குக் கூட்டிப்போகிறதும் சவம் / அடிக்கினால் மற்றா நாள் தண்ணீர் சொரிஞ்சு காடு ஆற்றுகிறதும் இந்த இரண் / டு தொழிலுங் (தொழிலுங்) கழித்து குடுத்தமைக்கு ஊரவ / ர் சொற்படிக்கு தென்னவதரையர் எழுத்து.

வயானம் – இடுகாடு; அடிக்கி – அடக்கம்; கழித்து – ஒதுக்கி; தின்மை –அமங்கல சடங்கு: வலைச்சி – மீனவத்தி.

விளக்கம்: சக ஆண்டு 1445 (1523 AD) வயலக நாட்டு புல்வயல் ஊர் சபையோர். இவ்வூர் வலையரில் கடம்பராய முத்தரையர், எழுந்தராமை வென்ற முத்தரையர், பனையன் உள்ளிட்டார்,  உலகப்பனையன், நடுவிற்கூள திருவன், சயிரன், மேலக் கூவ தேவேந்திர முத்திரையன், மணவாளர் காத்தான், வள்ளி பெரியான் உள்ளிட்ட இம்மூன்று வலையர் மக்களுக்கும் கல்லில் வெட்டிக் கொடுத்த உரிமை யாதெனில் அமங்கல தொழில்பாடுகளில் நம்முடைய ஊரில் பெண்டுகள் இல்லாது போனால் வலைச்சியர் முக்காடு இட்டுக் கொண்டு பிணத்திற்கு முக்காடு இட்டு  பிணத்திற்கு முன்னே சென்று இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லவும், அடக்கம் செய்த மறுநாள் தண்ணீர் தெளித்து தோட்டம் ஏற்படுத்துவதுமான இரு தொழிலையும் ஒதுக்கிக் கொடுத்த ஊர்ச் சபையோரின் சொல்லை ஏற்று ஆமோதித்த தென்னவதரையர் எழுத்து.

இக்கல்வெட்டு மூலம் ஈமத்தொழில் வலையர்க்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்பது தெளிவு. விளைவுகள் இதன் பின் தான் தெரியவரும்.

எண் 926. 11 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், குடுமியாமலை, சிகாநாத சுவாமி கோவிலில் சுவாமி கோவிலின் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

ஸுபமஸ்து மன்மத ஆண்டு ஆனி மாதம் 8 நாள் நயினார் குடுமியார் நயினார் ஸ்ரீ பண்டாரக் காரியத்துக்குக் கடவார் / விசலூர் கோனாட்டு முத்திரையன் செலிந்திவன முத்திரைன் உட்பட்டாற்கு கல்வெட்டிக் குடுத்த / படி இவர்கள் பட்டடை காத்தும் பிணத்தின் முன்னே முக்காடு இட்டும் நடந்தபடியினாலே இவர்களை / பிறவூர் வலையர் சாதி நீக்கி இனம் பண்ணினபடியினாலே இவர்கள் குடி போயிருக்கையில் மல்லப்ப / னாயக்கர் பல்லவராயர் பண்டார உத்தாரமாக பட்டடை காவலும் முக்காடு இடவும் வேண்டாம் என் / று  கட்டளையிட்டபடியினாலே இந்தபடி இ சந்திராதித்தவரையும்  நடத்தக் கடவோமாகவும் இது காரியத்துக்கு / யாதாம் ஒருத்தர் அகுதம் பண்ணினால் கெங்கைக்கரையிலே கராம் பசுவைக் கொன்ற பாவத்திலே போக / கடவதாகவும் இப்படிக்கு தானத்தார் பரமேசுரர் பட்டர் எழுத்து. சைவ[ப்]பிறகாச பட்டர் எழுத்து / சீகாரியஞ் செய்வார் எழுத்து. கோயில் கணக்கு கோனாட்டு வேளார் எழுத்து. மல்லப்ப / னாயக்கப் பல்லவராயர் காரியத்து இ கடவார் தையலாபிள்ளை எழுத்து. விசலூர் வெள்ள எழுத்து. / மருங்கூ,ர் சேவகமுத்தரையன் பிடாரன் எழுத்து.

பண்டாரம் – கோயில் நிர்வாகம்; உத்தாரம் – துணையாக, ஆதராவாக.

விளக்கம்: 1415 AD மற்றும் 1475 AD இல் நிகழ்ந்த மன்மத ஆண்டுகளில் ஒன்றில் ஆனி மதம் 8 நாள் இக் கல்வெட்டு வெட்டப்பட்டிருக்க வேண்டும். கோவில் பணிக்குச் செல்லும் விசலூர் கோனாட்டு முத்திரையன், சிலந்திவன முத்திரையன் உட்பட்டாருக்கு கல்வெட்டு மூலம் தெரிவிப்பதாவது இவர்கள் பட்டடை காத்தும் பிணத்தின் முன் முக்காடு இட்டு நடந்து சென்றதால் பிறவூர்  வலையர்கள் இவர்களை சாதி நீங்கி ஈனம் செய்துவிட்டனர். அதனால் இவர்கள் குடிபோன இடத்தில் மல்லப்ப நாயக்கரான பல்லவராயர் கோவில் உத்தாரமாக இவர்கள் பட்டடை காவலும் முக்காடும் இடுவதற்கு தடைபோட்டார். இதாவது, கோவில் பணியை அனுமதித்து பிணப் பணியை தடை செய்துவிட்டார். அதன்படியே சந்திராதித்தர் வரை நடந்துகொள்ள வேண்டும் என்றும் இந்தக் கட்டளையை எவரேனும் மீறினால் அவர் கங்கைக் கரையில் கரவை மாட்டைக் கொன்ற குற்றத்தை சம்பாதித்தவர் ஆகுவார் என கோவில் ஸ்தானத்தார் (பொறுப்பாளர்) பரமேசுவர பட்டர், சைவப்பிரகாச பட்டர், திருப்பணி செய்வார், கோயில் கணக்கு கோனாட்டு வேளார், பல்லவராயர் பணியாளர் தையலாப் பிள்ளை, விசலூர் வெள்ளாளர், விசலூர் சேவக முத்திரையன் பிடாரன் ஆகியோர் கையெழுத்து இட்டனர்.

இதன் மூலம் பிணத் தீண்டாமை சாதி விலக்கு பரவி பிணம் தீண்டலுக்கு எதிரான சமூக எதிர்வினை ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிகின்றது.

எண் 906. 17 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், குடுமியாமலை, சிகாநாத சுவாமி கோவிலில் சுவாமி கோவிலின் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

விக்கிறம ஆண்டு வைசாக மாதம் 25 நாள் குடுமியார்மலை நயினார் ஸ்ரீ பண்டார / திருவாசல் காரியத்துக்கு கடவர் தானத்தாரோம் மேற்படியூர் / வலைக்குன்[று] சூழ்நாட்டு முத்திரையன் கோனாட்டு முத்தி[ரை]யந் உள்ளிட்டாற்கு பிடிபாடு பண்ணிக் குடுத்தபடி பின்னுக்கு யி / ந்த ஊரிலே சாவு செத்தால் கட்டையும்மிட்டு முக்காட்டுமிட்டுத் தீ / ச் சட்டியுங் கொண்டு சுளுந்துங் கொளுத்தப் போய் சவங்காத்து / நின்று சுட்டு நடக்[கை]யில் யிக்காரியம் [செ]ய்ய யின வகையாது என்று / (கும்) போய்யிருக்கையில் யிந்தக்காரியம் மட்டும் வேண்டாம் என்று[ங்] /  கட்டளையிடுகையில் மற்றபடி[க்]கு நன்மைக்கு பந்தல் சுளுந்து கழங்க / யிலை  தகறற்றுஞ் செய்ய[வு]ம் குறைவறுப்பஞ் செயவும் நன்மைக்கு உண் / டான முறைமை எல்லா[ஞ் செ]ய்யவும் கொளம் ஏரி கரும்ப யிறையம் / யிராசகரமட்[ட]ம்மைப்பாடும்(ப்) பண்ணி தானத்தா(த்து)ற்கும் ஊராற்கும் / உள்ள காட்சி பல சு[வ]ந்தரமுண்டான சுவந்தரமுஞ் செய்து சுகத்திலே யிரு[க்]க கடவராகவும் யிற்படிக்கு / அதிகாரம் சிவந்தெழுந்தார் எழுத்து. பரமேசுவரபட்டர் எழுத்து. /  சிபப்பிறகாச பட்டர் எழுத்து. சிகாரிய[ஞ்] செய்வார் எழுத்து. கோயில் கண(கு)க்கு குடுமிகோநாட்டு வேளாந் எழுத்து.

கட்டை – ஈம விறகு, உயிற்ற உடல்; சுளுந்து – தீப்பந்தம்; பண்டாரம் – கோயில் மேலாண்மைக் குழு; நன்மை – மங்கல நிகழ்ச்சி.

விளக்கம்: மேலேகண்ட கல்வெட்டு எண் 847 இல் தந்த பிணத்தொழில் உரிமைக்கு ஏற்பட்ட எதிர்வினை இது. 1523 AD வைகாசி மாதம் 25 ஆம் நாள் வெட்டி கல்வெட்டு. குடுமியான் மலை சிகாநாதர் கோவில் திருவாசல் பணிசெய்யும் பொறுப்பாளர்கள். குடுமியான்மலை வலைக்குன்று சூழ்நாட்டு முத்திரையன், கோனாட்டு முத்திரையன் உள்ளிட்டார்க்கு பிடிபாடு (behavioural guidelines) வழங்கியதாவது. இனி இந்த ஊரில் சாவு விழுந்தால் பிணத்தை பாடையில் வைத்து, முக்காடு இட்டு, தீச்சட்டியை ஏந்தி சுளுந்து கொளுத்தி, பிணம் காத்தும் எரித்தும் வந்த வேலையை இனியும் செய்ய வகையில்லை என்பதால் இந்த அமங்கல வேலையை கைவிட்டு நன்மையான மங்கல வேலைகளான பந்தல் இடுதல், சுளுந்து (தீப்பந்தம்), கழங்கஇலை, இப்படி எல்லா வகை மங்கல வேலைகளையும்; குளம், ஏரி, கரும்பஇறை வேலை ஆகியன மட்டும் செய்து கோவில் பொறுப்பாளர்க்கும் ஊர் சபையோருக்கும் இடர் இல்லாமல் காணும்வண்ணம் உரிமையோடு செய்து ஊர்த்தடை இன்றி உரிமையுடன் சுகமாக வாழ்ந்துவர வேண்டும் என்று, இப்படிக்கு அதிகாரம் சிவந்தெழுந்தார், பரமேசுவர பட்டர், சிவப்பிரகாச பட்டர், ஸ்ரீகாரியம் செய்வார், கோயில் கணக்கு குடுமிகோநாட்டு வேளான் ஆகியோர் ஓலையில் கையெழுத்திட்டனர்.

எண் 945. 7 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், திருவேங்கவாசல், வியாக்ரபுரீசுவரர் கோவிலில் மடப்பள்ளிக்கு வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

பிலவங்க ஆண்டு புரட்டாதி மாதம் 8 அந்தியது ஆவு / டைய பல்வராயர் திருவேங்கைவாசல் / வலையற்கு வரக்காட்டின காரியம் தாங்கள் / கோயில் சூலம்  போட்டபடியினாலே போiன / [னா]ர்கள் சூளக்காறர். சொன்னார்கள் எங்களுக்கு / சூலமும் வேண்டாம்மென்று. கட்டளையிட்டு கல் / லு வெட்டிப்  போடுகிறோம், தாங்கள் ____

சூலக்காரர் – சூலம் பொறித்தோர்.

விளக்கம்: பல்லவரான பல்லவராயர் புதுக்கோட்டையை ஆண்ட பின் மறைந்து அழிந்தபடியால் தொண்டைமான்கள் இராமநாதபுரம் சேதுபதி இசைவுடன் அங்கு அரசு பொறுப்பிற்கு வந்தனர், 17 ஆம் நூற்றாண்டில். தமிழ்வேந்தர் ஆட்சி இழப்பிற்கு பின்னும் நாயக்கர் ஆட்சிக்கு முன்னுமான இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த 1427 AD மற்றும் 1487 AD பிலவங்க ஆண்டுளில் ஏதோ ஒன்றில் புரட்டாசி மாதம் 8 ம் தேதி இக்கல்வெட்டு வெட்டப்பட்டது. கிழமை குறித்திருந்தால் நல்ல தெளிவு ஏற்பட்டிருக்கும்.

ஆவுடை பல்லவராயர் திருவேங்கைவாசல் வலையரை வரவழைத்து எடுத்துக் கூறிய செயலாவது நீங்கள் கோயில் சூலம் இட்டபடியால் அந்த சூலக்காரர் சினந்து சொன்னார்கள் எங்ளுக்கு சூலமும் வேண்டாம் பிறிதும் வேண்டாம் என்று போய்விட்டார்கள். அதனால் கட்டளையிட்டு  கல்வெட்டிப் போடுகிறோம், இனி நீங்கள் என்று செய்தி முற்றுப் பெறாமல் விடுபட்டுள்ளது. பிற கல்வெட்டுச் செய்திகளை ஒப்பிட்டால் இவர்கள் பிணத் தொழிலை கைவிட வேண்டும் என்பதாகவே இருக்கும் என்று மட்டும் ஊகிக்க முடிகின்றது. 

எண் 948. 3 வரி கல்வெட்டு. திருமெய்யம் வட்டம், தேக்காட்டூர், அகத்தீசுவரர் கோவிலில் தர்மசமர்த்தினி அம்மன் கோவிலின் கீழ்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

  1. சவுமிய வருஷம் ஆடி மாதம் 26 நாள் கானனாட்டுத் தெற்காட்டுர் ஊர்கமைந்த ஊரவரோம் மேற்படியூர் புறஞ்சேரியிலிருக்கும் பறையற்குப் பிடிபாடு பண்ணிக்குடுத்தபடி, இவர்கள் முன்னுக்கு களஞ் செதுக்குகையில் இப்போ களஞ்செதுக்க_ _ _ _ _ ங்களு
  2. க்கு ஆற்றாதென்கையில் பின்பு ஊராகக் கூடிப் பறையரைக் களஞ் செதுக்க வேண்டாமென்று கட்டளையிட்டுக் குடுத்த (யிட்டுக் குடுத்த) படியிலே சந்திறாதித்தவரை செல்ல முன்னுண்டான சுவந்திரமும் பற்றி ஊருலே குடியிருக்கவும் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டி
  3. க் கொள்ளக்கடவாராகவும் _ _ _  வாணாதராயர் எழுத்து. தெற்காட்டூர் வேளார் எழுத்து. சொல்லி ஆடுவார் எழுத்து நாட்டுக் கணக்குத் தென்னவரையன் எழுத்து. இந்த _ _ _ _ மந்திருமே _ _ _ _ ம்பான் மூளி பெரியான் உள்ளி[ட்]டாரு.

பிடிபாடு – வழிகாட்டு நெறி (Behavioral guidelines): களம் – வயல்;

விளக்கம்: விசயநகர ஆட்சி உண்டான பின் 60 ஆண்டு குறிப்பு தமிழ்க் கல்வெட்டுகளில் இடம் பெற்றது. நாயக்கர் ஆட்சி என்றால் வேந்தர் பெயர், ஆட்சி ஆண்டு தமிழ்வேந்தர் காலத்தில் இருந்தது போலவே குறிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அல்லாமல் இக்கல்வெட்டு சௌமிய ஆண்டு ஆடி 26 ஆம் நாள் என்று வெட்டப்பட்டுள்ளது. எனவே இது கம்பண்ணர் படையெடுப்பிற்கு பின்னான நிகழ்வு எனக் கொண்டால் 1429 AD அல்லது 1489 AD இல் வெட்டப்பட்டிருக்க வேண்டும். இதில் கிழமைக் குறிப்பு இருந்திருந்தால் சரியான ஆண்டை நம்மால் குறிக்க வியலும். அப்படி இதில் கிழமை ஏதும் குறிக்க இல்லை.

கான நாட்டின் தெற்காட்டூர் ஊரூக்கு அமைந்த ஊர் சபையோர் இவ்வூரின் கண் உள்ள புறச்சேரியில் வாழும் பறையர் குல மக்களுக்கு பிடிபாடு (behavioural guidelines) ஏற்படுத்துகின்றனர். இவ்வூரில் முன் போல வயல்களை செதுக்க இயலாது என்று பறையர் கூறிவிட்டபடியால் ஊரார் ஒன்றுகூடி இனி பறையருக்கு வயல் செதுக்கும் பணியைத்தரக் கூடாது என்று முடிவெடுத்து கட்டளையிட்டபடி சந்திராதித்தர் வரை நடைமுறைப்பட வேண்டும். அதே வேளையில் முன்பிருந்த உரிமை போலவே (சுதந்திரம்) இப்போதும் இவர்கள் ஊருள்ளே குடிஇருப்பதற்கு கல்லிலும் செப்பேட்டிலும் எழுத்திலும் வடிக்கும் உரிமையை தந்தனர். அதை அரசர் வாணாதராயர் உள்ளிட்ட ஆட்சிப் பொறுப்பாளர்கள் ஆதரித்து கெயெழுத்திட்டனர்.

ஊருக்குள் முன்னைப் போல் உரிமையோடு குடிபுக உரிமை இருப்பதை இக் கல்வெட்டு காட்டுவதால், குறிப்பாக தீண்டாமை நடைமுறைகளான காலில் செருப்பு அணியாமை, ஊர் குளத்தில் தண்ணீர் மொள்ளாமை, ஊருள் சில தெருக்களில் நடந்து போகாமை, வேட்டியை இந்த முறையில் தான் கட்ட வேண்டும், எச்சில் துப்பக் கூடாது என்பன போன்ற செயல்கள் இல்லாமையை காட்டுவதால் 15 ஆம் நூற்றாண்டும் அதற்கு முன்பும் தமிழகத்தில் சாதி தீண்டாமை ஒடுக்குமுறை இருந்ததே இல்லை என்பதற்கான பொன்னான சான்றாகும் இக்கல்வெட்டு.   

எண் 956. 3 வரி கல்வெட்டு. திருமெய்யம் வட்டம், தேக்காட்டூர், அகத்தீசுவரர் கோவிலில் சுவாமி கோவிலின் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

  1. ஆனந்த ஆண்டு ஆவணி மாதம் 5 நாள் தெற்காட்டூராக அ[மை]ந்த ஊரவரோம் [மேற்படி] யூர் பள்ளற்கும் பறைய[ற்கும்] _ _ _ _ _ _ பள்ளற்கு தவிலும் முரோசும் சேமக்கல  
  2. மும் நன்மை தின்மை பெருவினைக்குங் கொட்டி போக கடவராகவும். பறையர் அஞ்சு கா _ _ _ _ _ கடவ _ _ _ _ _ _ சந்திராதித்தவரை செல்ல[வு]ம் வீராண
  3. இந்தப்படி நடக்க கடவராகவு இற்படிக்கு வாணாதராயர் எழுத்து. வேளார் எ.ழுத்து. _ _ _ _ _ _ _ ழுத்து.

விளக்கம்: 15 ஆம் நூற்றாண்டில் 1434 AD மற்றும் 1494 AD ஆகிய ஆண்டுகளில் ஆனந்த ஆண்டு நிகழ்கின்றது. அதில் கிழமை குறிப்பிடாத ஆவணி மாதம் 5 ஆம் நாள் தெற்காட்டூர் ஊர் சபையோர் அவ்வூரின் கண் வாழும் பள்ளர் பறையர்க்கு இடையே எழுந்த உரிமைப் போரில் மங்கல அமங்கல பெருவினைகளில் பள்ளர் தவிலும், முரசும் கொட்டிக் கொள்ளவும் சேமக்கலசம் கொண்டு செல்லவும் உரிமை வழங்கப்படுகின்றது. பறையருக்கான உரிமை பற்றிய கல்வெட்டு பகுதி சிதைந்துள்ளதால் அறியமுடியாமல் போய்விட்டது. இதை வாணாதராயர் உள்ளிட்ட சில அரச அதிகாரிகள் கட்டளையாக கையெழுத்திட்டு ஒப்புகின்றனர்.

எண் 198. 32 வரி கல்வெட்டு. _ _ _ _ வட்டம், கீரனூர், உத்தமநாதசுவாமி கோவிலின் சுவாமி கோவில் வடபுறச்சுவர் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராச இராச தேவற்க்கு யாண்டு 28 ஆவதின் எதிராமாண்டு இரட்டைபாடி கொண்ட சோழவளநாட்டு உற[த்]தூர் கூற்றத்து

ஊராய் இசைந்த ஊரோம் என நீண்டு நீர், நிலம், வயல், குளம் குறித்துக் குறப்பிடும் இக்கல்வெட்டில் பல அரையர்கள் இணைந்து இறைவருக்கு திருநாமத்துக்காணி, நாச்சியாருக்கு அமுதுபடி ஆகியவற்றுக்கு கல்வெட்டுப் பிரமாணம் கொடுத்தனர். பூசையும் திருப்பணியும் செய்ய கல்வெட்டிக் குடுத்தோம் என்று சில அரையர்கள் கூறுமிடத்து 26 ஆம் வரி தொடர்ச்சி

  1. வான் எழுத்து அஞ்ஞூற்று பரையன் எழுத்து தொண்டமனாடாழ்வன் எழுத்து. இராசாக்கியரையன் எழுத்து.எதிரிலிச் சோழன் நாடாழ்வான் எழுத்து. கொல்லத்தரையன் எழுத்து.
  2. மாணிக்கராயன் எழுத்து. கிடாரங் கொண்ட பரையன் எழுத்து. காங்கை நாடாழ்வான் எழுத்து. செம்பிய நாடாழ்வான் எழுத்து. உப்பிலிக் குடியில் ஈழங் கொண்டு நாடாழ்

என்று 32 வரியில் அரையரும் பிறரும் கையொப்பமிட இக் கல்வெட்டு முற்றுகிறது.

விளக்கம்: மூன்றாம் இராசராசனின் 28 ஆம் ஆட்சி ஆண்டிற்கு அடுத்து வந்த ஆண்டில் (1245 AD) வெட்டப்பட்ட கல்வெட்டு இது. இறைவர்க்கு திருநாமத்துக் காணியும் இறைவிக்கு அமுதுபடியும் குறித்து விவரம் தந்த பின் இதற்கு கையொப்பமிட்ட அதிகாரப் பொறுப்பில் இருந்த பறையர் அரசர், நாட்டுக் கிழான் பதவிகளில் இருந்தது பற்றி குறிக்கின்றது இக் கல்வெட்டு. அடுத்து வரும் கல்வெட்டுகள் அதற்கு மேலும் வலுச்சேர்க்கின்றன.

எண் 421. 15 வரி கல்வெட்டு. திருமய்யம் வட்டம், விராச்சிலை பில்வவனேசுவரர் கோவிலில் சுவாமி கோவிலின் வடபுரச் சுவரில் உள்ள கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீமத்கி[தி](தி)க்குமேல் கோச்சடை(ச்சடை)பன்மரான  த்ரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு நாலாவது கும்ப நாயற்று பூர்வபக்ஷத்துத் துதிகையும் வியாழக்கிழமையும் பெற்ற மிருஹஸீர்ஷத்து நாள் காநாடான விருதராஜ பயங்கர வளநாட்டுக் கானாட்டுப் படைப்பற்று விரையாச்சிலை ஊராக இசைந்த ஊரோம்

அடுத்து நிலம், வயல், குளம், திசை போன்ற செய்தி உடைய வரிகள். 14 ஆம் வரி தொடர்ச்சி

  1. _ _ _ டயான் மக்கணாயன் தற்குறியும், கண்டன் பொருளன் தற்குறியும், அரசர் மக்களின் பரிமன விளா _ _ _ இராசாங்க நாடாழ்வார் தற்குறியும் இப்படிக்கு பிள்ளான் இராசநான இராசிங்க தேவன் எழுத்து. இப்படி[க்]கு பிறந்தான் சேவகநான கானாட்டுக் பரையன் எழுத்து. இப்படி[க்]கு வளத்தானான அரசர் மீகாமப் பரையன் எழுத்து. இப்படிக்கு நம்பி அஞ்நூற்றுவப் பேரரயன் தற்குறியும் அவையன் உலகுடையா
  2. ற்குறியும் வெள்ளூர் பெரயன் பொப்பாண்டான் தற்குறியும் அழகன் _ _ [ம்]பாண்டன் தற்குறியும் இந்த அனையர் தற்குறியும் இட்டு _ _ _ _ பிரமாணம் எழுதினேன் இவ்வூர் கணக்கு _ _ _ _ _ பெருமாள் எழுத்து. இப்படிக்கு இக்கோயில் சிவப்பிராமணரில் துக்கைபட்டர் சொக்கபட்டன் தற்குறியும் இட்டு சிவபாதகயார் வில்லியார் எழுத்து  _ _ _ _ _ மறமாணிக்கலயினார் எழுத்து. 

விளக்கம்: சுந்தரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டு (1280 AD மே 2). கானாட்டு விரையாச்சிலை ஊராக அமைந்த ஊரின் ஊர்ச்சபையோர் கோவிலுக்கு நிலம் வழங்குதல் பற்றி கூறும் செய்திகளில் ஈறாக நாட்டுக் கிழான், அரையன் பதிவிகளில் இருந்த பறையர்கள் சான்று ஒப்பம் இடுகின்றனர். இதன் மூலம் பறையர் உயர் அதிகாரப் பொறுப்பில் இருந்ததை அறிய முடிகின்றது. இதாவது, பிற்பட்ட காலத்தில் ஒடுக்கப்பட்டோர் முற்பட்ட ஒரு காலத்தில் ஒடுக்குதலுக்கு ஆட்படாமல் வாழ்ந்தது உண்மை என்பதற்கு இக் கல்வெட்டு ஒரு சான்று. அப்படியானால் மதமும், பிராமணரும், மனுஸ்மிருதியும் இவர்களை ஒடுக்கி இருக்கவில்லை என்று தானே பொருள். உண்மையில், பின்னாளில் இவர்களை ஒடுக்கியது அரசியல் அதிகார அமைப்பு என்று தானே கொள்ள முடிகின்றது.

எண் 393. 18 வரி கல்வெட்டு. திருமய்யம் வட்டம், விராச்சிலை பில்வவனேசுவரர் கோவிலில் சுவாமி கோவிலின் மேற்புரச் சுவரில் உள்ள கல்வெட்டு. எண் 393.

  1. ஸ்ரீ மேற்க்கித்தி[க்]குமேல் கோமாறுபன்மரான  திரிபுவனச் சக்கரவத்திகள் எம்மண்ட[லமுங் கொண்ட]ருளிய ஸ்ரீ குலசேகர தேவற்கு யாண்டு 15 வதின் எதிராமாண்டு கற்கடகநாயற்று பூர்வபக்ஷத்து வா_ஸியும் புதன்கிழமையும்
  2. பெற்ற மூலத்துநாள் கேரளசிங்கவளநாட்டு மட்டியூரான நிருபசேகர_ _ _ மங்கலத்து வரகுணீஸ்வரமுடைய நாயனார் திருமடைவிளாகத்துப் பெரிய திருக்கூட்டதுத்  தவணை முதலியார் மாணிக்க வாசகர் ஆளை

இதன் பின் நிலம், வரி செய்திகள் இடம் பெறுகின்றன. இனி 15 ஆம் வரி தொடர்ச்சி

  1. படி சந்திராதித்தவற் செல்வதாக இன்னாயனார் திருக்கோயில் திருக் க[ற்]றளியிலே கல்வெட்டிக் குடுத்தோம் கோயில் வாசகப்பிச்ச முதலியாற்கு அரசு மக்களும் மறமுதலிகளும் இ[வ்வ]னைவோமும் இப்படிக்கு நாட்டான் கொண்டன் எழுத்
  2. து மங்கலநாடாழ்வான் எழுத்து. உய்யவந்த தேவன் எழுத்து. அஞ்நூற்றுவ தேவன் எழுத்து. கொண்டன் நாட்டான் எழுத்து வீரசிங்கப் பெரையன் எழுத்து. அஞ்நூற்று பரையன் எழுத்து. இராசசிங்க நாடாழ்வானும் பெருந்துறை
  3. ப் பெரையனும், பொற்கள் நெருங்கிப் பெரையனும், அரசமீகாமப் பெரையனும், நிலமை அழகியநாடாழ்வானும், கொண்டானும் இவர்கள் கைந்தர[யு]ம் இட்டு இவர்க[ள்] சொல்ல இப்ரமாணம் எழுதினேன் இவ்வூற் கணக்கு வயஸகமுடை
  4. யான், உய்யவந்தான் உலகுடையான் எழுத்து. இது பன்மாஹேஸ்வர் ரக்ஷை.

விளக்கம்: குலசேகர பாண்டியனின் 15 ஆம் ஆட்சி ஆண்டிற்கு அடுத்து வந்த ஆண்டில் (1283 AD சூலை 7) இல் வெட்டப்பட்ட கல்வெட்டு இது.  வரகுண ஈசுவரருக்கு நிலக்கொடை வழங்குவது பற்றிய விவரத்தை கூறி, அதற்கு அடுத்து உயர் அதிகாரப் பதவிகளான அரையன், நாட்டுக் கிழான், படைத் தலைவர் பதவிகளில் இருந்த பறையர்கள் சான்று ஒப்பமிடுகின்றனர். கல்வெட்டு எண் 421 இல் இடம் பெறும் சில பெயர்கள் இதிலும் இடம் பெறுகின்றன. எனவே தீண்டாமை இவர்களை தமிழ்வேந்தர் ஆட்சியில் அண்டவேயில்லை, மாறாக இவர்களால் அயல்மொழியர்க்கு பயன் எதும் இல்லை என்று ஆகிவிட்ட 16/17 ஆம் நாற்றாண்டில் தான் அயல் மொழியர் ஆட்சியில் தான் இந்த ஒடுக்குமுறை ஏற்பட்டிருக்கலாம். ஆட்சி அதிகார மாற்றம் இவர்களுக்கு இந்த தாழ்ந்த நிலைமையை ஏற்படுத்தி இருக்க பின் ஏன் தேவையின்றி மனுஸ்மிருதி, பிராமணர், சைவ வைணவ மதங்களை இந்த இழுக்கிற்காக சாட வேண்டும்? இது அடுத்த தலைமுறையை, வருங்கால சமூகத்தை தவறாக வழிநடத்துவது அன்றோ?

எண் 960. 44 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், குடுமியாமலை, சிகாநாத சுவாமி கோவிலில் இரண்டாம் கோபுர வாசலில் வலப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

நள வருஷம் ஆவணி மாதம் 12 தி கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழவள / நாட்டு குன்றுசூழ் நாட்டுப் பரம்பை [ஊர்] செருந்தா நம்புசெய்வாரும் பாண்டியனார் மகன் வன்னி / யர் உள்ளிட்டாரும் திருச்சிராப்ப[ள்]ளி  உடையார் அங்கிஷத்துக்கு கடவ உதை[யப் பெருமாளும்] / இன்மூவர் உள்ளிட்டாரோம் இன்னாட்டுப்ப[கை]த் தலைப்பாடி காவலான கீழைக்குறச்சி ஊராளிகளில் / வழித்துணையான மாவலிவாணாதராயன் உள்ளிட்டாரும் சோழகோன் பரையர் மகன் சூறாண்டாற்கும் பகை தீ / ந்து காவமுறி குடு[த்]த பரிசாவது மு[ன்]னாளிலே செய்யான் மாவலிவாணாதராயன் பள்ளர் பசகள் ஓடிப்போ நெருஞ்சிக் / குடியீலே இருக்கையில் இவர்க[ளூர்] மாடும் அ[ழி]த்து இந்த பள்ளரையும் பிடித்துக் கொண்டு வருகச்சிதே இந்த / நெருஞ்சிக்குடி ஊரார் பரம்பை ஊருலே கூப்பிட்டு வரு[கை]யில் கூப்பி[ட்]டு படைக்கச் சென்று சிற்றண்ணல்வாசலில் / செங்குளத்திலே சென்று முட்டி செய்யான் மாவலிவாணாத[ராயன்] உடனே படையாய் நம்புசெய்வார் மகனார் பண்டியனா / ர் படுகைஇல் இப்பழி கேட்பதாக சிற்றம்பலவரான நம்புசெய்[வா]ர் [இரண்]டு கரைநா[ட்டை] யுங்குவித்து ஒருமை மு[றி]யும் இட் / டு இவனை எழச் செய்வதாக இவன் வாசலிலே படையாய் பொரு[கச்சே] சிற்றம்பலவரான நம்புசெய்வாரும் இவர் மகனா _ _ _ _ ருச்சி / ராப்பள்ளி உடையாரும் பட்டு இ

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *