-கவிஞர் பூராம்

உடல்பூத்து மலர்ந்த நாளொன்றில்
காற்றின் இருத்தலைப் போலக் காமம்
வாடையின் காற்று உள்ளத்தை உருக்குலைக்க
இரவுகள் இங்கிதம் மறந்தொழிய
ஊற்றெடுக்கும் உள்ளொளியில் துணைதேடி
கனவுகளோடு நானும்

தொடுதலின் வெற்றுக் கற்பனைகளில்
பண்பாட்டுப் பாறையின் சுமையில்
நிறம் மாறிய ஓவியமாக மனம்!

துணையின் தேவையில் கண்டடைந்த
வாழ்க்கையில் காத்திருக்கிறேன்
முதல் காமமுத்தத்திற்காக!

அவனோடு வாழ்ந்துவிட
துணிந்துவிட்ட துணிச்சலில் சிறு உடைப்பு
உதடுகளின் உரசலில் நாசியில்
மோதிச் சென்ற வாசனை
தன்னிலை இழந்த வயிறும் மனமும்

காமத்தின் தேவையில்
சேர்த்துவைத்த பொக்கிஷங்கள்
கேட்பாறற்றுக் குப்பைத்தொட்டியில்
முகச்சிரிப்பில் உடல் பூரிப்பில்
கடந்துசெல்லும் ஒவ்வொரு இரவிலும்
நகும் காலம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *