சேஷாத்ரி பாஸ்கர் 
—————

கே ஜே எஸ் மணி பற்றி சொல்ல வேண்டும் . எல்லோர்க்கும் அவர் மணி சார் . நான் பணி புரிந்த காலத்தில் ஏற்பட்ட சிநேகம்.முதல் நாள் வேலை விஷயமாய் பார்க்க போன போது அவர் தான் என்னை அழைத்து உட்கார சொன்னார் . முதல் நாள் ஒரு அலுவலகத்தில் உட்காரும்போது மிக பூரிப்பாகா இருந்தது .அவர் நெற்றியில் பெரிதாய் பழனி சித்தநாதன் விபூதி . அவர் பேச பேச கொஞ்சம் கொஞ்சமாய் உதிர்ந்து அவர் கருப்பு ப்ரேம் கண்ணாடியில் விழுந்தது .அவ்வப்போது துடைத்து பேச வாசனை அந்த அறை முழுதம் வியாபித்தது .

எங்கேந்து வர ?
மயிலாப்பூர் சார்
இங்க என்ன வேலைன்னு சொன்னாங்களா ?
இல்லை சார்
இந்த டிப் டாப் டிரஸ்லாம் கொஞ்சம் இந்த வேலைக்கு அதிகம் . அதென்ன பெல்ட்ல கழுகு?
ஜுக்னு சார் .
அப்படினா ?
சினிமா சார் .
என்ன கருமமோ .
கார்த்தால ஒன்பது மணிக்கு டாண்ணு வரணும்
சைக்கிள் ஓட்டுவியா ?
ம் தெரியும் சார்
முதல்ல எல்லார்க்கும் காப்பி கொடுக்கணும்.உனக்கும் உண்டு
பத்து மணிக்கு மேல லாரி ஆபிசுக்கு போகணும்
ஏதான சரக்கு இருந்தா கொண்டு வரணும்
கமிஷன் ஏதும் அடிக்க கூடாது .
சரி சார்
நடுவில் பேங்க் வேலை பாக்கணும்
பேரு என்ன சொன்ன ?
பாஸ்கர்
முதல்ல கௌரவம் பாக்க கூடாது .சாயந்திரம் நான் சொன்னபுறம் தான் போகணும்
கையில என்ன .
சர்டிபிகேட் சார் .
பேப்பர் மாதிரி இருக்கு
ஆமா சார் . எக்ஸ்பிரஸ் பேப்பர் .அதுவுள்ள வச்சிருக்கேன் .
பேப்பர்லாம் படிப்பியா ?
ஆமா சார். எக்ஸ்பிரஸ் ..நான் வாங்கிடுவேன் .
சம்பளம் என்ன தெரியுமா , இரு நூத்தி எழுபத்தி அஞ்சு .
சரி சார் .
அப்புறம் பாகிங் பண்ணனும்.செக்போஸ்ட்ல ஏதான பிரச்சனைனா போகனும் .இன்னொன்னு இங்க கட்டை வண்டி இருக்கு . வண்டிக்காரனுக்கும் ஹெல்ப் பண்ணனும் . கூட மாட தள்ளனும் .
செய்வேன் சார் .
உன் வயசு என்ன
இருப்பத்தி அஞ்சு .
வீட்ல போன் இருக்கா ?
இல்ல சார் .எப்ப சார் சேரனும்
இன்னிக்கே ?
சார் நாளைக்கு தீபாவளி .
ஏன் வெடிக்கனுமா ?
இல்ல சார் . வெடிக்கரத பாக்கணும் .
சரி .அப்ப்ளிகஷேனை எழுதி கொடு.
தோ சார்
.கச்சேரி ரோட்ல சாரதா ப்ளாஸ்க் தெரியுமா ? .
தெரியும் சார் . பழைய போஸ்ட் ஆபிஸ் பக்கத்துக்கு அடுத்த பில்டிங்.
சரி போய் உட்கார் .
சரியாக ஒரு மணி கழித்து அவர் திரும்ப வந்தார் .
இந்தா . இந்த பிளாஸ்கை அங்கு கொடுத்துட்டு ரிப்பேர் பில் வாங்கிக்கோ
அஞ்சு ரூபாய் வச்சுக்கோ .ஏதான பப்பிர்மின்ட் வாங்கி சாப்பிடு .நாளான்னைக்கு வா .
வெளியே வந்து சைக்கிளை எடுத்து பிளாஸ்கை தோளில் மாட்டிய பிறகு எனக்கு எந்த வெடி சப்தமும் கேட்கவில்லை .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *