அவ்வைமகள்

தலைப்பின்னல் எனும் மருத்துவச்  சூட்சுமம்

அந்த இராணுவ அதிகாரிக்கு, தலைமுடி பற்றி, சிலபல நல்ல கேள்விகள் இருந்தன. அவற்றுள் முதலாவதாக மிக முக்கியமானதாக எதை எடுத்துகொள்ளலாம் என அவரையே கேட்டேன். “தலைப் பின்னல்” என்றார்.

அவர் சொன்னார்: நான் பொதுவாகக் கேள்விப்பட்டது அல்லது வலைத்தளத்தின் மூலம் தெரிந்துகொண்டது என்னவென்றால் பின்னல் சடை போடுவது என்பது உங்களது பாரம்பரிய பழக்கம் என்று. ஏறக்குறைய எங்கள் நாட்டுப் பூர்வீக இந்தியர்கள் கூட நீள்முடி உள்ளவர்கள் – அவர்களில் பெண்கள் ஏன் ஆண்களும் கூட, உங்களைப்போலவே பின்னல் சடை போட்டுக் கொள்பவர்கள். உங்கள் இருவருக்கும் இவ்விஷயத்தில் உள்ள ஒற்றுமை ஆச்சரியப்படவைக்கிறது. ஆப்பிரிக்கப் பெண்களும் பின்னல் போட்டுக் கொள்கிறார்கள் – அவை உங்கள் இரு இந்தியர்களின் பின்னலில் இருந்து மாறுபட்டது. அவர்கள், சிறுசிறு பின்னல்களை பல எண்ணிக்கையில் போட்டுக் கொள்கிறார்கள்.

இந்தத் தலைப்  பின்னலின் பின்னணிதான் என்ன? காரணம் இல்லாமல் பின்னல் ஒரு பண்பாடாக வர வாய்ப்பில்லை என்பது என் கருத்து என்றவர், கொஞ்சம் இழுத்துப் பேசலானார்.

ஆனால், தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள் உங்கள் பெண்களுக்கு  இப்போது இந்திய சாயல் குறைந்து கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. குட்டைமுடியும் விரித்த கூந்தலும் அதிகம் இருக்கிறது, ஆங்காங்கே சில பின்னல் தலைகள் காணப்படுகின்றன அவ்வளவே. அந்தக் குறைந்த பின்னல் தலைகளில் பிரெஞ்சு மாடல் பின்னல்களை அடிக்கடிக் காணமுடிகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்தியப்பெண்கள் இப்போது ஐரோப்பிய சாயலில் தெரிகிறார்களே தவிர இந்தியர்களாகத் தெரியவில்லையே என்றார்.

நீங்கள் சரியாகவே எங்களை நோட்டம் விட்டிருகிறீர்கள். Modernism – நவீனம் என்ற பெயரில் எங்கள் சமுதாயம், பாரம்பரிய கலாச்சாரத்திலிருந்து கொஞ்சம் வேகமாகவே விலகுவது வெளிப்படையாகவே தெரிவது உண்மைதான். ஆனால், நன்மை தரக்கூடிய கலாச்சாரப் பழக்கங்களைத் தவிர்ப்பதுதான் வருத்தமான விஷயம் என்றேன்.

அப்படி என்றால், நான் கருதியது சரிதான்! நீங்கள், தலைப் பின்னல் என்பது நன்மை தரும் வழக்கம் என்று சொல்வதாக உணர்கிறேன் அதைக் கொஞ்சம் விளக்குங்களேன்.

உங்கள் பூர்விக இந்தியர்களையும் – இந்தியாவின் இந்தியர்களான எங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தது மிகவும் சரியே. பல்வேறு விஷயங்களில் நாங்களும் அவர்களும் ஒருவரே. ஒற்றைப்பின்னல் மட்டுமல்ல; இரட்டைப் பின்னல், எசஸ்கட் மடித்துக் கட்டுதல் என பல்வேறு ஒற்றுமைகள் எங்களுக்கு உண்டு. குழந்தைகள வளர வளர, அவர்களது பருவத்துக்குத் தேவையான படி, பின்னல்கள் மற்றும், கட்டுக்கள் அமைப்போம். அதே போன்ற பழக்கம் செவ்விந்தியர்களிடமும்  இருக்கிறது. பின்னலை, நார் அல்லது பருத்தி நூற்கயிறு,  அல்லது பட்டு நூற்கயிறு போட்டு கட்டும் பழக்கமும் இரு இந்திய வகையினரிடமும் இருக்கிறது (இப்பொழுதெல்லாம் பாலிஎஸ்தர் ரிப்பங்களுக்கும் ரப்பர் பாண்டுகளுக்கும் மாறியாயிற்று) என்று தொடர்ந்தேன்.

உங்கள் பூர்விகக் குடிகளான இந்தியர்கள் செவ்விந்தியர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்பதற்கு சிலபல விளக்கங்கள் இருந்தாலும், ஒரு சில வரலாற்று நூல்களில், எம் சமுகமான, தமிழ் சமூகத்திற்கும், செவ்விந்தியர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது காட்டப்படுள்ளது என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். எடுத்துகாட்டாக, வில்லியம் ப்ரெச்காட் (William Prescott ) 1847, எழுதி வெளியிட்டிருந்த “The Conquest of Mexico and Peru” புத்தகத்தில், இதுபற்றிப் பேசியிருப்பதாக நான் அறிந்ததுண்டு. இதனை நினைவு கூர்ந்து, 2014ல் எங்கள் மொழியில் வெளிவந்திருந்த ஒரு முகநூல் (Horror – அமானுஷ்யம்) கட்டுரையும் உண்டு.

எங்கள் தமிழ்ச் சமூகத்தின் தொன்மையைப் பற்றிக் கூறுபவர்கள், “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்குடி என்பார்கள்!”

அமரிக்க இந்தியர்கள் சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறியதாகக் கணக்குண்டு. எங்கள் சமூகத்தினர், பன் நெடுங்காலமாகவே, கடல் கடந்து, உலகெங்கும்,  எங்கெங்கோ பரவிப்போய் ஆட்சிகள் அமைத்தும் குடியேறியும் வாழ்ந்ததாகப் பேச்சு உண்டு. இந்த வரலாறுகள் பல எழுதப்படாமலேயே அழிந்ததும், எழுதியும் அழிந்ததும் உண்டு என்பர். வரலாற்றில், பாண்டித்தியம் இல்லாதவள் என்பதால் இதுபற்றி இப்போது அதிகமாகப் பேசும் தகுதி எனக்கில்லை.

ஆனால், இங்கு நான் கவனித்த, படித்த, மற்றும் கேட்ட விஷயங்களிலிருந்து மிகப்பல்வேறு ஒற்றுமைகள் எங்கள் இரு இந்தியர்களுக்கும் இருக்கிறது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியும்.

 

 

 

 

 

 

 

   Superstock.com, saved by Pinterest

https://www.pinterest.com/pin/474355773230225719/

Pinterest saved by Zarina Jenae

இங்கே, இரண்டு தற்காலப் பெண்களின் படங்களைப் பார்ப்போம். இடது படம் – செவ்விந்தியப் பெண்ணின் பின்புறம்; வலது புறம் உள்ளது தமிழப் பெண்ணின் பின்புறம். தலைமுடியின் நிறம் மற்று அமைப்பு, பின்னும் விதம், ஆகியன ஒன்றே போல் இருக்கின்றன அல்லவா?

அடுத்து, இரு இந்திய சமூகங்களுக்கும், தலைமுடி பற்றியுள்ள சிந்தனைகள் மற்றும் அவர்களது, தலைமுடி சார்ந்த பழக்கவழக்கங்கள் பால் நம் கருத்தைச் செலுத்துவோமேயானால், ஆச்சரியத்தக்க ஒற்றுமைகள் இருப்பது உண்மையே.

இரு இந்திய சமூகங்களுக்குமே தலைமுடி என்பது மிகப் புனிதமான பொருள். அது எத்தனைப் புனிதமானது என்றால், கடவுளுக்காகக் காணிக்கையாகத் தரப்படும் மிக உயர்ந்த தகுதியுடைய ஓரே உடற்பகுதி என்பது அவர்களுடைய கருத்து.

என் அம்மாவின் பாட்டி, நான் சின்னஞ்சிறு பெண்ணாக இருந்தபோது, எனக்குத் தலை பின்னிக்கொண்டே ஒரு நாள் சொல்லியிருக்கிறாள், “தலைமுடிங்கறது – ஒடம்போட முக்கியமான உறுப்பு – ஒவ்வொரு முடிக்கும் தெய்வீக ஆற்றலால, உணர்வு இருக்கு –  கண்ணிருக்கு.  ஒவ்வொரு முடியும் – நீ தூங்கறபோது கூட முழிச்சிகிட்டே இருந்து ஒன்னச் சுத்தி என்ன நடக்குதுன்னு பாத்துக்கிட்டே இருக்கும். தூங்கற போது ஆபத்துலேர்ந்து ஒன்னைக் காப்பாத்தும். நீ தூங்கிக் கிட்டிருக்க, அப்ப, யாரோ வெளி ஆளுங்க உன்னை நோக்கி வராங்கன்னா, நீ திடுக்குனு எழுந்துடுவ – அதுக்கு முடி தான் கரணம்.”

“அப்ப, நம்ம முடிக்கு நம்ம வீட்டு ஆளுங்க யாரு – வெளி ஆளுங்க யாருன்னு தெரியுமா?” பாட்டி என்று கேட்டேன். ஆமாம், நீ என்ன பண்றே – மத்தவங்க ஒன்னச் சுத்தி என்னென்ன பண்றாங்கன்னு அது போட்டோ பிடிச்சு வச்சிக்கும்! அதனாலத்தான் முடிக்கு மதிப்பு கொடுத்து பத்திரமா பாதுகாத்து வச்சுக்கணும்.”

“தலையை நல்லப் படிய வாரி, பின்னல்போட்டு நுனியை மடிச்சிக் கட்டணும், இல்லைனா உடம்புல இருக்க சக்தியெல்லாம் உடம்புலேர்ந்து வெளியே போயிடும்!” என்று சொன்னாள் என்றேன்.

அந்த ராணுவ அதிகாரி குறுக்கிட்டார்: “தலைமுடி ஒரு உடல் உறுப்பு போன்றதா? கேட்கவே வேடிக்கையாய் இருக்கிறது! நகத்தைப் போல வெட்டி வீசக்கூடிய ஒரு பொருள் – உயிரற்ற ஒரு உதிரிப்பாகம் – முடி இல்லாமலேயே உயிர்வாழவும் முடியும் – அதுவே உதிர்ந்து வேறு கொட்டுகிறது. இப்படியிருக்க, தலைமுடியை ஒரு புனிதப்பொருள் என்று நீங்கள் கூறுவது ஒரு மூடநம்பிக்கை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.” அதே போன்று, தலைமுடிக்கு உணர்வு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவே முடியாது என்றார்.

தலைமுடி பற்றிய சிலவற்றைப் பார்த்து விட்டு தலைமுடி புனிதமானது என்கிற, இந்தியர்கள் கருத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பார்ப்போமே என்றேன். அவரும் உடன்பட்டார். தொடர்ந்தேன்.

இப்போது, செவ்விந்தியர்களைக் கவனிப்போம்: “தலை முடி என்பது உடலின் மைய நரம்பு மண்டலத்தின் வெளிப்புறத் தொடர்ச்சி” என்கின்றனர் அவர்கள். இந்தக் காணொளிகளைப் பாருங்கள் என்று காண்பித்தேன்.

https://www.youtube.com/watch?time_continue=18&v=hxl9PgKGTX4&feature=emb_logo

அவர் அக்காணொளியைக் கண்டபின், செவ்விந்தியர்களின் கூற்றில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் – அதற்கு முன்பாக, இந்த இரண்டு படங்களைக் காட்டுகிறேன் – அவற்றையும்  பார்த்தபின்பு நீங்கள் உங்கள் முடிவைச் சொல்லல்லாம் என்றேன். நமது மைய நரம்பு மண்டலத்தின் இரண்டு படங்களை, அவருக்கு வலைதலத்திளிருந்து இரண்டு படங்களை எடுத்துக் காண்பித்தேன். (அவை இங்கே தரப்பட்டுள்ளன).


https://www.aplustopper.com/nervous-system-sense-organs-icse-solutions-class-10-biology/

https://www.pnas.org/content/107/48/20610

அந்த இருபடங்களைப் பார்த்த வினாடி, உணர்ச்சி ததும்ப, மொழி மறந்து, கடவுளே! உன் கைவண்ணத்தின் அற்புதம் தான் என்னே (Lord! What a marvelous handiwork!)  என்றார். ஆமாம்! உங்கள் அம்மவின் பாட்டி என்ன சொன்னார் என்று சொன்னீர்களோ, அதையே அந்த செவிந்தியரும் சொல்கிறாரே! நமக்குள்ளே ஏற்படும் உள்ளணர்வுக்கும் தலைமுடிக்கும் தொடர்பு உண்டு என்று அவர் ஆணித்தரமாய்ச் சொல்லுகிறாரே! தலைமுடியை பக்தி சிரத்தையோடு மதிக்கவேண்டும் என்கிறாரே!  என்று பூரித்தார் .

அவருக்கு நன்றி செலுத்திவிட்டு, இப்போது. இந்தக் காணொளியில் இன்னொரு செவ்விந்தியர் கூறுவதைக்  கேளுங்கள் – குறிப்பாக, 9.26 – 11.45 என்றேன்.

https://www.youtube.com/watch?v=OKZI-4GExQk

பார்த்தார். உண்மையாகவா? நம் தலைமுடியை, நம் நேரடிக் குடும்பத்தினரைத் தவிர, பிறர் தொடுவதை அனுமதிக்கக் கூடாதா? அத்தனை சுயமான விஷயமா முடி? என்றவர். இவ்வாறெல்லாம் சொல்வதைப் பிறர் நம்ப மாட்டர்களே அறிவியல் சான்று இல்லாமல் என்றார்.

ஒருவரது தலைமுடி, அவருக்கென பிரத்யேகமாக கடவுள் தயாரித்து அனுப்பி இருப்பதை இப்போது அறிவியல் உலகம் உறுதிப் படுத்திவிட்டதே என்றேன்.

விளக்கமாய் சொல்லுங்களேன் என்றார்.

குற்றவியல் அறிவியல் தட நிபுணர்கள், தலைமுடியை, மைக்ராஸ்கோப்பின், கீழ் வைத்துப் பார்த்து, அந்த முடி எந்த இனத்தவரின் முடி என்று டக்கென்று சொல்லிவிடுவார்கள். தலைமுடியை வைத்துப் பார்த்தால் உலகத்தில் மொத்தம் மூன்றே மூன்று இனங்கள் தாம் உண்டு: வெள்ளையர்கள், ஆப்பிரிக்கர்கள, மங்கோலிய ஆசியர்கள் (அல்லது ஐரோப்பிய ஆசியர்கள்) என்று.

இவ்வாறு தலைமுடி, தடவியலில், ஆட்களின் இனத்தை அடையாளம் கண்டு பிடிக்க உதவி வந்து கொண்டிருந்த நிலையில், விஞ்ஞானிகள், இன்னொரு படி மேலே போய் புதியதொரு தலைமுடி உபாயத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்னவென்றால், ஒருவரது முடியின் வேரில் உள்ள டி என் ஏ வைப் பரிசோதித்தால் அந்த நபரது மரபணு புரிந்துவிடும் என்று.

இதனால் என்ன லாபம் என்று கேட்டீர்கள் என்றால், இனிவரும் காலத்தில் மரபணுப் பரிசோதனைக்கு, இரத்தம் தேவை இல்லை. முடியின் வேர் போதும். (சமீப காலமாக, இரத்த மரபணுப் பரிசோதனைகளில் சில சிக்கல்கள் எழுந்தமையால் மரபணுப் பரிசோதனைக்கென மாற்று வழிகளைக் காணும் நிர்ப்பந்தம் உண்டாகியிருக்கிறது). இந்த இணைப்பைப் பாருங்கள் என்று அவரிடம் பகிர்ந்தேன்.

https://www.mynewlab.com/blog/why-hair-analysis-could-become-an-alternative-to-dna-testing/

நன்றி தெரிவித்தவர், அதற்கு அடுத்து கேட்டார்: அந்த இரண்டாவது காணொளியில், அந்தச் செவ்விந்தியர் சொன்னது என் கவனத்தை கவர்ந்தது. இனிப்புப் புல் சேர்த்து அவர்கள் தலைப் பின்னல் பின்னிக் கொள்கிறார்கள்  என்று – அது போன்ற பழக்கங்கள் உங்களுக்கும்  உண்டா என்றார்.

ஆமாம்! வாழைமட்டையில், பூக்களைத் தைத்து, ஜடை தயாரித்து பின்னலின் மேல் தைத்துக் கொள்வது, தாழைமடல்களைக் கொண்டு பின்னலுக்கு மேலே உறை தைப்பது, பின்னலுக்கு மேலே, மூளைப் பகுதியில், நறுமணமும், குளிர்ச்சியும் தரக்கூட்டிய பூக்களையும், தவனம், மரிக்கொழுந்து போன்ற வாசனைச் செடிகளையும் நெருக்கமாகத் தொடுத்து அணிந்து கொள்வது – இவை எல்லாம் எங்களது பழக்கம். நங்கள் வாழும் தட்பவெப்ப நிலை செவ்விந்தியர்களின் தட்பவெப்ப நிலையை விட அதிகம் என்பதால், நாங்கள் இன்னமும் ஒரு படி மேலே போய் தலைமுடியைப் பாதுகாக்கிறோம்.

மேலும், குஞ்சம் வைத்து, தலைப்பின்னலைப் பின்னி விசேஷ நாட்களில் அணிந்து கொள்வது எங்கள் இளம் பெண்களின் பழக்கம். இவ்வாறு செய்யும்போது, குஞ்சம் சரியாக, இடுப்பில், பிட்டத்திற்கு மேல் இடித்து நிற்கும். முதுகுத்தண்டு வளையாமல், கழுத்துக்கு பலம் சேர்த்து நிமிர்த்தும்  ஒரு எளிய அழகுப் பயிற்சி இது. குட்டையான தலைமுடி உள்ளவர்கள் கூட சவுரி எனப்படும் செயற்கை முடி நீட்பான்களை உபயோகித்து, குஞ்சம் சேர்த்து இவ்வாறு, பின்னலை நீட்டி, பின் இடுப்பின் பள்ளத்தில் இடிக்குமாறு அழகு படுத்திகொள்வார்கள்.  ஒரு தலைமுறைக்கு முன்பு வரையிலும் கூட, இது சர்வ சாதாரண பழக்கமாய் இருந்தது. என்றேன்.

அப்படியென்றால், உங்கள் பின்னலில் மருத்துவச் சூட்சுமம் உண்டு என்று சொல்லலாமா? என்றார்.

– (மேலும் பேசுவோம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *