Tag: முகில் தினகரன்

  • ‘உப்பு’…..கவிதை

    முகில் தினகரன்

    கடல் காடு பூத்த கசப்பு மலர்!
    காலங்கள் கரைக்காத கண்ணீர்ச்சுவை!

    தூத்துக்குடி மக்களின்
    சோத்துப் பசி தீர்க்க
    சமுத்திரக் கன்னி வழங்கிய
    சாத்துக்குடி சாறு!

    நீரில் பிறந்து நீரில் சாகும்
    சர்க்கரையின் சக்களத்தி!

    இது குறைந்து விட்டால் எப்பண்டமும்
    குப்பைத் தொட்டிக்கு உறவு!

    இது எகிறி விட்டால் எம்மனிதனும்
    சவப்பெட்டிக்கு உறவு!

    ரத்த அழுத்த ரவுடிக்கும்
    கிட்னி ஃபெயிலியர் கில்லாடிக்கும்
    வெண்சாமரம் வீசும் சைவ சண்டியர்!

    வாலிப வயதில் உன்னுடன்
    வரைமுறையின்றி உறவு கொண்டோர்க்கு
    முதுமை இரவில்
    சப்பை உணவையே
    சிம்னியாக்கி விடுகின்றாய்!

    சாவுக்கு சம்மன் அனுப்பும்
    சாகரத்தின் விழுதே!..நீ
    கம்யூனிசத்தில் கரிசனம் கொண்டவனோ?

    பணங்கொழுத்த முதலைகளின்
    பாவ உடம்பில் உப்புச் சத்தாய்
    ஒட்டிக் கொள்கிறாய்!
    உறவாடி உயிர் கொல்ல!
    அனால்
    உழைக்கும் ஏழையின்
    ஊதுபத்தி மேனியிலிருந்து
    வியர்வையாய் வெளியேறிவிடுகிறாயே!

    இலவசங்களில் இளைப்பாற
    ஓட்டுப் போட்டு…ஓட்டுப் போட்டு
    ஒட்டுக் கோவணம் இழந்தும்
    உணர்ச்சியற்று நிற்கும்
    மனித ஒட்டடைகள் நாங்கள்!
    எங்களுக்கு ரோஷ நகம் வளர
    உப்புப் போட்டு உண்ணணுமாம்!
    அடப் போங்கய்யா!
    மொத்தக் கடலையே குடித்தாலும்
    ரோஷம் வெடிக்காது!…
    சூடு பிறக்காது!
    சொரணை இருக்காது!
    நாங்கள்தான் மலட்டுக் கொசுக்களின்
    மழுங்கிய ஊசிகளாச்சே!

    இறுதியாய்
    உப்பிட்டவரை உள்ளளவும்
    நினைத்தல் வேண்டுமாம்!
    முன்னோர் சொன்னார்…
    ஒரு சந்தேகம்..
    எது உள்ளவரை?
    உப்பா?…உயிரா?

    Share
  • காவிரிக்கு ஒரு கடிதம்

    முகில் தினகரன்

    (1)   காவிரிக்கு ஒரு கடிதம்
    அன்புள்ள காவிரியே!
    என் நினைவின் பக்கங்களில்
    மறைத்து வைத்திருக்கிறேன்
    நீ
    தளும்பித் தளும்பிச் சிரித்த
    அந்தக் கருப்பு வெள்ளைக் காட்சிகளை!

    உன்னில் மூழ்கிக் குளித்து
    உவகை ஊஞ்சலாட
    நயாகரா நீர்வீழ்ச்சியே
    விண்ணப்பமிட்ட காலமுண்டு!

    புது வெள்ளக் காலத்தில்
    பூப்படைந்த பெண்ணாய்
    நாணம் பொங்க நீ நளினத்தோடு
    வளைந்து நெளிந்து
    வருவதைப் பார்த்த இந்தக் கண்கள்

    இன்று நீரற்று
    வெள்ளச் சேலை கட்டிய விதவையாய்…
    மொட்டையடித்து நீட்டிப் படுத்திருக்கும்
    உனைக் கண்டு சிந்திய கண்ணீர்
    எப்போதோ உன்னிடம் பருகிய நீரின் எச்சம்!

    உன் கரையில் நடந்து போகும்
    உல்லாசத்திற்காக மட்டுமே
    நாள் தவறாமல் பள்ளிக்குப் போனவன் நான்!

    காவிரியே…
    எங்களுக்கு நீதான்
    எகிப்தின் நைல்..லண்டனின் தேம்ஸ்…
    நியூயார்க்கின் ஹட்ஸன்…ஆக்ராவின் யமுனை!
    ஆம்!
    சங்கத் தமிழனின் பெருமை நீ
    எங்கள் பழைய வாழ்க்கையின்
    மிச்சம் நீ….ஆனாலும்

    இந்த ஊரை விட்டுப் பலர் வெளியேற
    உன்னோட வறட்சியே காரணமானதுதான்
    இதயத்தைப் பிழியும் ரண காவியம்!

    எங்கள் விவசாய இல்லங்களில்
    விடிவிளக்காய் இருந்து விட்டு
    இன்று
    வறுமை இருட்டை அவர்களுக்கு
    வாழ்க்கையாக்கி விட்டாயே..

    எந்தப் பாவத்திற்கான பழி தீர்ப்பு இது?
    ஓ…இங்கிருக்கும் சில
    அரசியல் அகத்தியர்கள்
    தங்கள் சுயநலக் கமண்டலத்தில்
    உனை அடைத்து விட்டாரென்ற
    கோபத்திற்கா?

    இறுதியாய் காவிரி..
    எனக்கு நம்பிக்கை இருக்கின்றது
    மீண்டும் பொங்கிப் பெருகி நீ வருவாய்!
    தளும்பித் தளும்பி நீ சிரிப்பாய்!
    அப்போது..

    உன் கரையிலிருக்கும்
    ஏதேனுமொரு சுடுகாட்டில்
    என் உடல் எரிந்து கிடக்கும்
    ஆனாலும் நான் மகிழ்வேன்!

    (2)    எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்.

    தொல்காப்பியம் தந்த தொன்மைத் தமிழுக்கு…
    வள்ளுவம் வழங்கிய வண்டமிழுக்கு….
    இதிகாசங்கள் ஈந்த இயற்றமிழுக்கு….
    குறள்நெறி கண்ட தெய்வீகத் தமிழுக்கு….
    எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!……….
    ஆம்!

    கன்னித் தமிழும் கணிணித் தமிழும்
    கைகோர்த்து நிற்க,

    அறிவியல் தமிழும் ஆட்சித் தமிழும்
    அரவணைத்து நடக்க,

    சட்டத் தமிழும் மருத்துவத் தமிழும்
    சம காலத்தைச் செழிப்பாக்கிட,

    சென்னைத் தமிழும் செட்டிநாட்டுத் தமிழும்
    மட்டிலாக் காப்பியமாய் மலர்ந்திருக்க,

    தஞ்சைத் தமிழும் நெல்லைத் தமிழும்
    தலைமுறை தாண்டித் தத்துவம் பொழிய,

    மதுரைத் தமிழும் மலையகத் தமிழும்
    மணிப்பிரவாளமாய் மாண்பு காட்ட,

    கொங்குத் தமிழும் குமரித் தமிழும்
    செங்கோலேந்தி சிம்மாசனம் அமர,

    செந்தமிழ் சீர் பெற..
    தனித்தமிழ் தரம் பெற…
    நற்றமிழ் நயம் பெற…
    முத்தமிழ் முழங்கியெழ…
    எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!……….

    ஆற்றுப் படைகளை
    சேற்றுப் படைகளாக்கி
    அந்தாதிகளைப் பந்தாடி
    ஏலாதிகளை ஏலம் கூவி
    நிகண்டுகளை நிர்வாணமாக்கும்
    சொத்தைச் சமூகத்தின் சுயம் தொலைத்த
    வித்தைத்தமிழரை விரட்டியடித்து
    வீரத் தமிழரின் விலாசங் கூற
    எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!……….

    சொல்லை அறிந்து…அதன்
    பொருளை அறிந்து!
    தூய்மை அறிந்து….இடத்
    தன்மை அறிந்து!
    பயனுறுத்தும் பாவலரும்
    நயனுறுத்தும் நாவலரும்
    தனித் தமிழ் ரதத்தில் தடையின்றி உலா வர…
    எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!………… .

    அஹிம்சை வேதத்தால் அவனியழுக்கை
    அமைதியாய்க் கழுவிய அண்ணல் காந்தியும்!
    அன்புத் தேனை ஆன்மீகச் சங்கில்
    வார்த்துத் தந்த வள்ளலாரும்!
    எழுதுகோலில் நெருப்பை நிரப்பி
    கனல் கவி கக்கிய பாரதியும்!
    மரணிக்காது உலவும் மாத்ரு பூமி வேண்டும்!……

    படத்திற்கு நன்றி:

    http://www.nivalink.com/orangecounty/

     

    Share
  • கூர் வாள்

    முகில் தினகரன்
    கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட வீடியோக் காமிராக்கள் லென்ஸ் கண்களால் அந்த பெட்டியை விழுங்கிக் கொண்டிருக்க, பதினைந்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கை நிருபர்கள் அந்த ஆவேசப் பேச்சைக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, ஊழல்…லஞ்சம்….அதிகார துஷ்பிரயோகம் போன்ற சமூக அவலங்களைத் தன் வார்த்தைச் சாட்டையால் விளாசிக் கொண்டிருந்தார் ‘கூர் வாள்” பத்திரிக்கையின் ஆசிரியர் துரைஜீவானந்தம்.

    ‘சார் இந்த வருடத்தின் சிறந்த புலனாய்வுப் பத்திரிக்கையாக உங்கள் ‘கூர் வாள்” தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு காரணம் உங்களோட தைரியமான எழுத்துக்களா?…இல்லை உங்களோட சமூக கண்ணோட்டமா?” ஒரு பெண் நிருபர் தன் நீண்ட கேள்வியை வைக்க,சக நிருபர்கள் முகம் சுளித்தனர்.

    ‘ரெண்டுமேதாம்மா சமூக கண்ணோட்டம்தான் அவலங்களைக் கண்டு கொதிப்படைய வைக்குது எழுத வைக்குது அப்படி எழுதும் போது தைரியமும் தானாகவே வந்திடுது..”

    ‘உங்க எழுத்துக்கள் மூலம் இந்த சமூகத்தைத் திருத்திட முடியும்னு நெனைக்கறீங்களா சார்?,”

    ‘ம்ம் முற்றிலுமா திருத்த முடியாவிட்டாலும் ஓரளவுக்கு மாற்ற முடியும்னு நினைக்கறேன்ம்மா..உதாரணத்துக்கு என்னோட பத்திரிக்கையைப் படிக்கற பாமரன் தெரிஞ்சோ தெரியாமலோ தன் அளவுல செய்யற சின்னச் சின்ன தவறுகளைத் திருத்திக் கொள்வானல்லவா?”

    ‘அது போதுமா சார்?”

    ‘தாராளமா…ஒவ்வொரு மனுசனும் தான் செய்யற தவறுகளை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொண்டால் போதும் இந்தச் சமூகமே திருந்திடும் ஏன்னா சமூகம் என்பது என்ன?..தனி மனிதர்களின் கூட்டுதானே?”

    ‘சரி சார்..பெரிய பெரிய அரசியல் திமிங்கலங்களை என்ன செய்யப் போறீங்க?” ஒரு ஆண் நிருபர் தன் பங்குக்கு கேள்வி ஒன்றை வீச,

    ‘சமூகத்தைத் திருத்தி ஒரு சமூக விழிப்பணர்வை பரவலா ஏற்படுத்திட்டாப் போதும் .அந்த வேள்வித் தீயிலே அரசியல் திமிங்கலங்கள் எரிஞ்சு சாம்பலாயிடும்”

    அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த பேட்டி முடிவடைய காரில் ஏறிப் பறந்தார் ‘கூர் வாள்” ஆசிரியர் துரைஜீவானந்தம்.

    மறுநாள் காலை.

    ‘ஏங்க நீங்க குளிச்சிட்டிருந்தப்ப உங்க சப்-எடிட்டர் போன் பண்ணினார்” துரைஜீவானந்தத்தின் மனைவி சிவகாமி சொல்லியபடியே சமையலறையை நோக்கிச் சென்றாள்.

    மொபைலை எடுத்து எண்களை நசுக்கினார்.

    ‘என்ன ராமு என்ன விஷயம்?”

    ‘சார்..அந்த லெதர் பேக்டரி மேட்டரை இந்த வார இஷ்யூல போட்டுடலாமா சார்?” சப்-எடிட்டர் ராமு கேட்க

    ‘ம்ம் அந்த லெதர் பேக்டரி முதலாளி அதுக்கப்புறம் கூப்பிடவேயில்லையா?” ‘இல்லை சார்”

    ‘ராஸ்கல் வெறும் அஞ்சு லட்சம்தான் கேட்டேன் அதைக் குடுக்கவே கஞ்சத்தனப்படறான் ..ஓ.கே ஓ.கே அவனோட லெதர் பேக்டரி கழிவுகள் எந்தெந்த எடத்துல ஆத்தோட கலக்குது அதனால என்னென்ன பாதிப்புக்கள் ஏற்படுதுங்கற ஆர்ட்டிக்கிளை இந்த வார இஷ்யூலேயே பொட்டுடு இதுக்கு மேல் வெய்ட் பண்ண முடியாது ஹூம்..அஞ்சு லட்சத்தை மிச்சம் பண்ணப் போய் மொத்த பாக்டரியையும் இழுத்து மூடப் போறான்” சிரித்தபடி போனை அணைத்தார்.

    சமையலறையிலிருந்து கலவர முகத்துடன் கைகளைப் பிசைந்தபடி வந்த சிவகாமி ‘ஏங்க கேஸ் தீர்ந்து போச்சுங்க”

    ‘அதான் ரெண்டு சிலிண்டர் இருக்குதல்ல?”

    ‘இல்லை” கொஞ்சம் லேட்டா புக் பண்ணினதால வர லேட்டாகுதுங்க அப்பவும் புக் பண்ணும் போதே அவன் சொன்னான் ரொம்ப டிமாண்டா இருக்கறதினால இந்தத் தடவ லேட்டாத்தான் வரும்னு.”

    ‘சரி சரி அதுக்கு ஏன் இந்தப் பொலம்பு பொலம்பறே” என்றவர் சில விநாடிகள் யோசித்து விட்டு ‘சரி..நம்ம ஏரியாவுக்கு சிலிண்டர் போடறவனோட பேரையும் மொபைல்  நம்பரையும் குடு”

    ‘பேரு சந்திர சேகர். நெம்பரு.” என்று இழுத்தவள் காலண்டர் அருகே சென்று அதில் குறித்து வைத்திருந்த நம்பரைச் சொல்லச் சொல்ல,

    துரைஜீவானந்தம் அழைத்தார்.

    ‘யாருப்பா,..சந்திரசேகரா?…நான் சாந்தி நகர்ல இருந்து பேசறேன் பத்திரிக்கைக்காரர்!…தெரியுதா? சரி..சரி.சிலிண்டர் ஒண்ணு உடனே வேணுமப்பா!…..என்னது புக் பண்ணனுமா?….அதெல்லாம் தெரியும்ப்பா நான் பண்ணிடறேன் நீ மொதல்ல ஒரு சிலிண்டரைக் கொண்டு வா!….யோவ் வேற யாருக்காவது வந்த சிலிண்டரை இங்க தள்ளிட்டு எங்களுக்கு வரும் போது அதை அங்க தள்ளிடு..இதெல்லாம் கூட சொல்லித் தரணுமா..என்ன?..,அது தப்பா?…அதெல்லாம் ஒண்ணும் தப்பில்லை ஒரு சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் என்ன செய்ய மாட்டியா?..” என்றவர் குரலை சற்றுத் தாழ்த்தி ‘ஒரு நூத்தம்பது ரூபா எக்ஸ்ட்ரா தர்றேன் வாங்கிக்க சரி..இருநூறே வாங்கிக்க! ஓ.கே இன்னிக்கே வந்திடுமல்ல?..சாரி..சாரி வெச்சிடு”

    ‘சிவகாமி இன்னும் அரை மணி நேரத்துல அவன் சிலிண்டர் கொண்டாந்திடுவான் அவனுக்கு எப்பவும் குடுக்கற பணத்தோட இருநூறு ரூபா சேர்த்துக் குடுத்துடு..என்ன?”

    ‘என்னங்க நீங்க?..யாருக்கோ வர்றதை நாம் இப்படி அதிகப் பணம் குடுத்து வாங்கிட்டா அவங்க என்னங்க பண்ணுவாங்க?…..பாவம் அவங்களும் நம்மை மாதிரிதானே?…சிரமப்படுவாங்கல்ல?”

    ‘ச்சீய் வாயை மூடிட்டு சொன்னதைச் செய்டி பெருசா பேச வந்திட்டா பொம்பளை காந்தி” திட்டியபடியே நகர்ந்தார்.

    மாலை ஆறு மணியிருக்கும், போர்ட்டிகோவில் அமர்ந்து அடுத்த வார இதழின் ப்ரூப் திருத்திக் கொண்டிருந்தார் துரைஜீவானந்தம்.  தெருவில் யாரோ இரண்டு பேர் கையில் ஒரு ஃபைலோடு தன் வீட்டின் முன் நின்று பேசிக் கொண்டிருக்க யோசனையுடன் எழுந்து கேட்டைத் திறந்து வெளியே வந்து விசாரித்தார்.

    ‘நாங்க எலக்ட்ரிசிட்டி டிபார்ட்மெண்ட் இந்த தெருவிற்கு சோடியம் வேப்பர் விளக்கு போட அனுமதியாகியிருக்கு .அதான் எங்கெங்கே விளக்குக் கம்பம் வரும்னு அளந்திட்டிருக்கோம்”

    தொடர்ந்து அவர்கள் பேசிய பேச்சிலிருந்து தன் வீட்டிற்கு மிகவும் தள்ளியே விளக்குக் கம்பம் அமைகின்றது என்பதைப் புரிந்து கொண்டவர் ‘என்ன சார் நீங்க பேசறதை வெச்சுப் பார்த்தா என் வீட்டுப் பக்கம் வெளிச்சமே வராது போலிருக்கே”

    ‘என்ன சார் பண்றது? ஒரு கம்பத்துக்கும் இன்னொரு கம்பத்துக்கும் இவ்வளவுதான் இடைவெளி விடணும்னு ரூல்ஸ் இருக்கே”

    ‘ரூல்ஸ் என்ன சார் ரூல்ஸ் உங்களை மாதிரி அதிகாரிங்க நெனச்சா அதை மாத்த முடியாதா என்ன?” சொல்லிவிட்டு அசிங்கமாய்ச் சிரித்தார் துரைஜீவானந்தம்.

    அந்தச் சிரிப்பின் உள்ளர்த்தம் புரிந்து கொண்ட அந்த நபர்களும் ‘மாத்தலாம்தான் ஆனா அதுக்குக் கொஞ்சம் ஹிஹிஹிஹி”

    வியாபாரம் பேசப்பட்டு பத்தே நிமிடத்தில் பேரம் படிய துரைஜீவானந்தத்தின் வீட்டு வாசலிலேயே ஒரு விளக்குக் கம்பம் வருவதற்கான ஏற்பாடு உடன்பாடானது.

    இரவு

    ‘ஏய் சிவகாமி வா..வா டி.வி.லே என்னோட பேட்டி போட்டிருக்கான் வந்து பாரு” சமையலறையை நோக்கிக் கத்தினார் துரைஜீவானந்தம்.

    சுவாரஸியமேயில்லாமல் நிதானமாய் வந்தாள் அவள்.

    ‘ஒவ்வொரு மனுசனும் தான் செய்யற தவறுகளை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொண்டால் போதும் இந்தச் சமூகமே திருந்திடும்”

    சிவகாமி திரும்பி கணவனை முறைத்தாள்.

    ‘சமூகத்தைத் திருத்தி ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திட்டாப் போதும் .அந்த வேள்வித் தீயிலே அரசியல் திமிங்கலங்கள் எரிஞ்சு சாம்பலாயிடும்”

    சிவகாமி சமையலறையை நோக்கித் திரும்பினாள்.

    “என்னோட பத்திரிக்கையைப் படிக்கற பாமரன் தெரிஞ்சோ தெரியாமலோ தான் தன் அளவுல செய்யுற சின்னச் சின்ன தவறுகளைத் திருத்திக் கொள்வானல்லவா,”

    சிவகாமி சமையலறையை நோக்கி நடந்தாள்.

    பாதியிலேயே போகும் அவளை கோபத்துடன் பார்த்தார் துரைஜீவானந்தம்.

    Share
  • விழுதுக்குள் வேர்

    முகில் தினகரன்

     

    “டெய்லர் ப்ளவுஸ் தைச்சிருப்பான்…ஈவினிங் வரும் போது மறக்காம வாங்கிட்டு வந்திடுங்க!”  டிபன் காரியரை நீட்டியபடியே சொன்னாள் சுசீலா.

     

    “ஏண்டி இதையெல்லாம் என்கிட்ட சொல்றே!…ஆபீஸ் டென்ஷன்ல மறந்தாலும் மறந்துடுவேன்..” சலித்துக் கொண்டான் ஜெயபால்.

     

    “அதெப்படி பொண்டாட்டி சொன்னது மட்டும் மறந்து போகுமா?..அப்ப யார் சொன்னா மறக்காது?” இடக்காய் கேள்வி கேட்டாள்.

     

    “அய்யோ காலங் காத்தால எனக்கு இது தேவையா? சரி..வாங்கிட்டு வந்துடறேன்..ஆளை விடு!”

     

    ஜெயபால் திரும்பி நடக்க, “டேய் கொஞ்சம் இருடா!” தாயின் குரல் கேட்டது.

     

    நின்றான்.

     

    தள்ளாட்டமாய் நடந்து வந்த அவனுடைய தாய், “டேய்..மூணு நாளா முதுகு வலி விட மாட்டேங்குதுடா..சாயந்திரம் வரும் போது ஒரு அயோடெக்ஸ் பாட்டில் வாங்கிட்டு வாடா!”

     

    “ம்..ம்..” என்று சொல்லி விட்டு தன் பைக்கில் ஏறிப் பறந்தான்.

     

    இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பினான் ஜெயபால்.

     

    “ஹய்யா..அப்பா வந்தாச்சு” என்று கத்தியபடி வந்து கால்களைக் கட்டிக் கொண்ட ஆறு வயது மகன் பாபுவை, “ச்சூ..போடா அந்தப்பக்கம்” என விரட்டினான்.

     

    ஒன்பது மணி வாக்கில் சாப்பிட்டு முடித்தவன் ஏதோவொரு புத்தகத்தை எடுத்து அதில் மூழ்கினான்.

     

    “ப்ளவுஸ் வாங்கினீங்களா?” அருகில் வந்து சுசீலா மெல்லக் கேட்டாள்.

     

    “ஓ…வாங்கிட்டு வந்திட்டேனே!” வேகமாய் ஒடிச் சென்று தன் பைக்கின் பாக்ஸிலிருந்து அதை எடுத்து வந்து கொடுத்தான்.

     

    அப்போதுதான் சடாரென்று அம்மா கேட்ட அயோடெக்ஸ் ஞாபகம் வந்தது. “அடாடா..அம்மா கேட்ட அயோடெக்ஸ் மறந்திட்டேனே” தலையில் குட்டிக் கொண்டான்.

     

    “அதுக்கென்ன பண்றது…மனுஷன் டென்ஷன்ல மறக்கறது சகஜம்தானே?… “மறந்துட்டேன்”ன்னு போய்ச் சொல்லுங்க!” சுசீலா ‘வெடுக்’கென்று சொன்னாள்.

     

    “உஷ்…மெதுவாப் பேசுடி..அம்மா காதுல விழுந்திடப் போவுது!”

     

    அப்போது அறை வாசலில் நிழலாட திரும்பிப் பார்த்தான் ஜெயபால்.

     

    பாபு நின்றிருந்தான். அவன் கையில் அயோடெக்ஸ் பாட்டில்.

     

    “அட..ஏதுடா இது?” சுசீலா ஆச்சரியமாகக் கேட்க,

     

    “நாந்தான் ஸ்கூல் பக்கத்துல இருக்கற கடைல வாங்கினேன்…காலைல அப்பாகிட்ட நீ ப்ளவுஸ் வாங்கிட்டு வரச் சொன்னே…பாட்டி அயொடெக்ஸ் கேட்டாங்க!…அப்பவே எனக்குத் தெரியும்…அப்பா அயொடெக்ஸை மட்டும் மறந்திட்டு வந்திடுவாங்கன்னு…அதான் நான் சேர்த்து வெச்சிருந்த காசுல இதை வாங்கிட்டு வந்தேன்…அப்பா..இதை நீ வாங்கிட்டு வந்ததா சொல்லி பாட்டிகிட்டே குடுத்திடு…இல்லைன்னா பாட்டி ரொம்ப வருத்தப்படும்” என்றான் அந்த ஆறு வயது சிறுவன்.

     

    உச்சந்தலை மயிரை யாரோ கொத்தாகப் பற்றி, முகத்தில் “பளார்..பளார்” என்று அறை விட்ட மாதிரி இருந்தது ஜெயபாலுக்கு.

     

     

     

     

     

    Share
  • குழந்தையும் தெய்வமும்

    முகில் தினகரன்

    “டேய் ரகு…பாவம்டா அந்தப் பொண்ணு…குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி…தூக்கித் தூக்கிப் போடுதாம்..ஆம்பளை இல்லாத வீடு..ஆஸ்பத்திரி வரைக்கும் துணைக்குப் போயிட்டு வாடா..”

    “போம்மா…ஃபுட் பால் மேட்சுக்கு டிக்கெட் வாங்கியிருக்கேன்…என் நண்பர்களெல்லாம் எனக்காக காத்திட்டிருப்பாங்க…நான் போயே ஆகணும்..என்னால் முடியாது..தயவு செய்து வற்புறுத்தாதே!”

    “டேய்..அந்த குழந்தை உயிரை விட உனக்கு புட் பால் மேட்சுதான் முக்கியமாக்; போச்சா?” அம்மா கத்தினாள்.

    எவ்வளவோ மறுத்தும் அம்மா பிடிவாதமாய் நின்று என்னை விரட்டிட, மேட்ச் ஆசையை ஒரங்கட்டி விட்டு, அரை மனதுடன் முணுமுணுத்துக் கொண்டே கால் டாக்ஸி பிடித்து, அந்தப் பெண்ணையும் அவள் குழந்தையையும் அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு பறந்தேன்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை மாலை வரை இழுத்தது.

    “நல்லவேளை  சரியான நேரத்துல கொண்டு  வந்தீங்க… அதனால குழந்தை பிழைச்சது… இல்லாட்டி நீங்க  உங்க குழந்தையை இழந்திருப்பீங்க!”

    டாக்டர்…சொல்லிக்  கொண்டிருக்கும் போது… வரவேற்பறையில் இருந்த டி.வி.யில் அந்த  ஃப்ளாஷ் நியூஸ் ஒடியது.

    “சற்று முன் வந்த செய்தி….நேரு  ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஃபுட்பால் மேட்சின் போது காலரி இடிந்து விழுந்து ஸ்தலத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர்.”

    தொடர்ந்து காட்டப்பட்ட வீடியோ காட்சியில் என் நண்பர்கள் மூவரும் பிணமாய்….

    என் குழந்தை உசுரு போக இருந்தது….நீங்க தெய்வம் தம்பி” பக்கத்து வீட்டுப் பெண் கையெடுத்துக் கும்பிட்டாள்.

    “இல்லம்மா….உங்க குழந்தைதான்  என் உசுரைக் காப்பாத்தியிருக்கு”

    அப்பெண் எதுவும் புரியாமல்  என்னை ஊடுருவிப் பார்க்க,

    நான் குழந்தையைப் பார்க்க  வார்டுக்குள் ஓடினேன்.

    (முற்றும்)

    Share
  • அவசரப் புத்தி

    முகில் தினகரன்

    நரசிம்மன் சொன்ன அந்த தகவல் திவாகரனை லேசாக அதிரச் செய்தாலும், அதை வெளிக் காட்டி கொள்ளாமல் வெகு இயல்பாக பேசி விட்டுக் கிளம்பினான்.

    பஸ்சில் வரும் போது கூட நரசிம்மன் பேசிய வார்த்தைகளே திரும்ப திரும்ப ஞாபகத்தில் வந்து போயின. “ஹல்லோ மிஸ்டர் திவாகரன்…எப்படி இருக்கீங்க?…ம்…உங்களுக்கென்ன?…மனைவி பெரிய கம்பெனில மேனேஜர் ஆயிட்டாங்க!…பதினஞ்சாயிரம் சம்பளம் வரும்!…நாங்களும் அந்தக் கம்பெனிலதான் வேலை பார்க்கறோம்…என்ன பிரயொஜனம்?…நானூறு ரூபா இன்கிரிமெண்ட் வாங்கறதுக்குள்ள நாக்குத் தள்ளிடுது…உங்க மனைவிக்கு..ஒரே ஹைக்குலே ஏழாயிரத்துக்கும் மேல இன்கிரீஸ்…ஹும் நீங்க பெரிய அதிர்ஷ்டசாலி சார்!…பின்னெ..சும்மாவா சொன்னாங்க..மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு!”

    “என்னது…சுமதி மேனேஜராயிட்டாளா?…சம்பளம் பதினைஞ்சாயிரமா?…என்கிட்ட சொல்லவேயில்லையே அவள்!” வாய் வரை வந்து விட்ட வார்த்தைகளை தொண்டைக் குழியிலேயே அழுத்திப் புதைத்து விட்டு, சிறிது நேரம் வேறு எதேதோ விஷயங்களை பேசி விட்டு, இறுதியாக கிளம்பும் போது நாசூக்காக கேட்டுத் தெரிந்து கொண்டான், சுமதி மேனேஜராகி ஆறு மாதங்களாகி விட்டதென்று.

     

    “சம்பளம் பதினைந்தாயிரம்னு இந்த நரசிம்மன் சொல்றான் ஆனா ஆறு மாசமா சுமதி என்கிட்டே வெறும் எட்டாயிரம் மட்டும்தானே கொடுக்கறா..மீதி ஏழாயிரம் என்னாச்சு?…எங்க போச்சு?” மண்டைக்குள் சிந்தனைச் சிலந்தி தாறுமாறாக எண்ணக்கூடு கட்ட, குழப்பமானான்.

    அந்தக் குழப்பம் சிறிது நேரத்தில் சந்தேகமாக நிறம் மாற, “ஒரு வேளை..அவ அம்மா வீட்டுக்கு அனுப்பிடறாளா?…இல்லை ஏதாவது கள்ளக் காதல்…கீதல்…! சேச்சே!…சுமதி அப்படிப் பட்டவளல்ல!” மனதில் ஆழத்திலிருந்து ஒரு குரல் சுமதிக்கு ஆதரவாக பேசியது.

    “அப்படின்னா…புரமொஷன் கிடைச்சதையும்….சம்பளம் உயர்ந்ததையும் ஆறு மாசமா ஏன் மறைக்கணும்?..” மனதின் வேறொரு மூலையிலிருந்து இன்னொரு குரல் சுமதிக்கு எதிராக கூவியது.

    “அய்யோ என்னை இப்படி குழப்பத்தில் ஆழ்த்திட்டாளே…ஒவ்வொரு மாசமும்…சம்பள தினத்தன்னிக்கு ரெண்டு பேரும் ஒண்ணா உக்காந்து அவ சம்பளத்தையும் என் சம்பளத்தையும் ஒண்ணா சேர்த்து கூட்டி அந்த மாசத்துக்கான் செலவு பட்ஜெட் போட்டு, அதன்படி செலவு பண்ணிட்டு, வெளிப்படையாத்தானே இருந்திருக்கோம் இத்தனை நாளா?…இப்ப மட்டும் ஏன் சுமதிக்கு புத்தி இப்படிப் போச்சு?”

    வழி முழுவதும் யோசனை செய்தபடியே வீட்டையடைந்த திவாகரனை வரவேற்றது கதவில் தொங்கிய பூட்டு.  “மணி ஏழாகப் போவுது..இன்னுமா இவ வரலை ஆபீஸிலிருந்து?”

    தன்னிடமிருந்த மாற்றுச்சாவி கொண்டு வீட்டைத் திறந்து உள்ளெ சென்ற திவாகரன் ஹால் ஷோபாவில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

    “என்னங்க…என்னாச்சு…தலை வலியா?” கேட்டபடியே சுமதி அவள் நெற்றியைத் தொட, கண் விழித்தவன் அவளையே ஊடுருவிப் பார்த்து விட்டு, சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட சுமதி, “ஏன் லேட்டுன்னு கேட்க வ்ர்றீங்க?..அதானே?…இருங்க…இருங்க சொல்றேன்…அதுக்கு முந்தி ஒரு கப் காபி போட்டுக் கொண்டாரேன்” என்றபடி சமையலறையை நோக்கி நடந்தாள்.

    சுமதி கொண்டு வந்து நீட்டிய காபியை கையால் வாங்காமல் டீப்பாயின் மேல் வைக்கச் சொல்லி ஜாடை காட்டினான்.  அவன் முக பாவத்தை கொண்டே அவன் ஏதோ கோபத்திலிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட சுமதி. “மகாராஜா ஏதோ கோபத்திலிருக்கிறார் போல் தெரிகிறதே!..என்ன காரணமோ?…யார் மேல் கோபமோ?…இந்த அபலையிடம் சொல்லலாமே!” அவனை சமாதானப் படுத்தும் விதமாய் தமாஷ் பேசினாள்.

    “அபலையா?…யார்  நீயா…?” வாய் விட்டு சிரித்து விட்டு “நானும் அப்படித்தான் இத்தனை நாளும் நினைச்சிட்டு இருந்தேன்”

    “என்னங்க…என்னாச்சு உங்களுக்கு?..ஏன் ஒரு மாதிரியாப் பேசறிங்க?”

    ஒரு நிமிடம் அவளையே கூர்ந்து பார்த்தவன், “நீ..மேனேஜராயிட்டியாமே!..சம்பளம் கூட பதினஞ்சாயிரமாமே!…கேள்விப் பட்டேன்”

    “அது வந்து…ஆமாங்க!..நானே உங்க கிட்டே சொல்லலாம்னு இருந்தேன்…அதுக்குள்ளார நீங்களே கேட்டுட்டீங்க!” சமாளித்தாள்.

    “என்னது…என்கிட்ட சொல்லலாம்னு இருந்தியா?…ஓ…ஆறு மாசமா அதுக்கு நேரமே கிடைக்கலை அப்படித்தானே?”

    முழு உண்மையும் அவனுக்குத் தெரிந்து விட்டதென்பதைப் புரிந்து கொண்ட சுமதி, “ஆமாங்க..நீங்க கேள்விப்பட்டதெல்லாம்…உண்மைதான்…எனக்கு மேனேஜராப் புரமோஷனும்…கூட இன்கிரிமெண்ட்டும் கிடைச்சு..ஆறு மாசமாச்சு…அனாலும் அந்த விஷயத்தை உங்க கிட்ட சொல்லாம மறைச்சேன்”

    “பரவாயில்லை…நல்லாவே சமாளிக்கறே”

    சடாரென்று தலையைத் தூக்கி அவனுக்கு பதில் சொல்ல முனைந்தவளைக் கையமர்த்திய திவாகரன், “ஆறு மாசமா பதினஞ்சாயிரம் சம்பளம் வாங்கிட்டு என்கிட்டே  வெறும் எட்டாயிரத்தை மட்டும் குடுத்துட்டு மீதி ஏழாயிரத்தை எங்க…எவனுக்கு அனுப்பிச்சே?..இப்ப இந்த நிமிஷம் எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்!” தாவி வந்து அவள் தோள்களைப் பற்றி உலுக்கியவனை நாசூக்காக விலக்கிய சுமதி, கண்களைத் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

    “ஆறு மாசத்துக்கு முன்பு கிடைச்ச புரமொஷனும்…சம்பள உயர்வும் என்னைப் பொருத்தவரையில் ஒரு மகிழ்ச்சியான விஷயமே அல்ல!…உண்மையில் அதைக் கேட்டதும் எனக்கு முதல்ல சந்தொஷத்துக்கு பதிலா அதிர்ச்சியாகத்தான் இருந்தது.  ஏன்னா…என்னொட சம்பளம் ஒன்பதாயிரமாகவும் உங்களோட சம்பளம் பனிரெண்டாயிரமாகவும் இருந்தாத்தான் இந்த குடும்பம் ஒரு இனிமையான குடும்பமாக இருக்கும்!…என்னொட சம்பளம் உங்களொடதை விட அதிகம்னு ஆயிட்டா…என்னதான் நீங்க பக்குவப்பட்ட ஆணாயிருந்தாலும் நிச்சயம் ஒரு கட்டத்துல உங்க மனசுல சின்ன வருத்தம் வரும்….முடியாதுங்க…என்னால நீங்க சின்ன வருத்தப்படறதைக் கூட தாங்க முடியாதுங்க!…”

    திவாகர் அவளை விழியிமைக்காமல் பார்த்தபடியே நிற்க.

    “அது மட்டுமில்லைங்க…உங்களுக்குள்ளார ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து…அது உங்க உடல் நிலையைப் பாதிச்சிடுமோன்னு நான் ரொம்ப பயந்துட்டேங்க!…அந்த அக்கறைலதான் நான் உங்க கிட்ட எல்லாத்தையும் மறைச்சேன்!”

    சொல்லிக் கொண்டேயிருந்தவள் திடீரென்று உள் அறையை நோக்கி நடந்தாள். அடுத்த நிமிடமே திரும்பி வந்தவள் கையில் தபால் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு புத்தகம்.

    “கேட்டீங்கல்ல?…அந்த ஏழாயிரம் ரூபா மாசமாசம் எங்க போச்சுன்னு?…இந்தாங்க உங்க பேர்ல தபால் ஆபீஸ்ல பத்திரமா இருக்கு”

    அவள் நீட்டிய அந்த பாஸ் புத்தகங்களை வாங்கிப் பார்த்த திவாகரன் நெகிழ்ந்து போனான்.  “ச்சே!..என்னோட மனசு நோகக் கூடாதுன்னு தன்னோட சந்தோஷத்தைக் கூட மூடி வெச்சுக்கிட்டு ஆறு மாசமா அமைதியா நடமாடிய இந்தப் பொன்னான மனசை புண்ணாக்கிட்டேனே! எனக்கு ஏன் இப்படியொரு அவசரப் புத்தி”

    “போதுமா…சந்தேகம் தீர்ந்ததா?…அடுத்தது இன்னிக்கு லேட்டா வந்ததுக்கான காரணத்தையும் சொல்லிடறேன் கேட்டுக்கங்க!…வர்ற வழில லேடி டாக்டர்கிட்ட போய்ட்டுத்தான் வந்தேன்…உறுதிப் படுத்திட்டாங்க…நான் உண்டாயிருக்கேன்!”

    “அய்யோ ஸாரி சுமதி…என்னை மன்னிச்சிடு…இந்த நேரத்துல உன்னைய…”

    தன் கைகளைப் பற்றிக் கொண்டு கெஞ்சலாய்க் கேட்ட கணவனின் மார்பில் அழுகையுடன் புதைந்தாள்.

    அவன் மார்பில் பட்டுத் தெறித்த கண்ணீர்த்துளிகள் அவன் மனதில் இருந்த சந்தேகக் கறையை சுத்தமாக அழித்து விட்டுத்தான் காய்ந்தன.

     

     

     

     

    Share
  • ரத்தப் பிச்சை

     

    முகில் தினகரன்

    அந்த ஆஸ்பத்திரி வராண்டாவில் திரும்பிய திசையெல்லாம் கரை வேட்டி மனிதர்கள் குவிந்திருந்தனர். கல்லூரியில் படிக்கும் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகன் பைக் விபத்தில் ஏகமாய் அடிபட்டு எமர்ஜென்ஸியில் உயிருக்குப் போராடியபடி கிடக்க அவனது அரிய வகை ரத்தம் தேடி கட்சித் தொண்டர்கள் நாலாத்திசையிலும் அலையோ அலையென்று அலைந்து கொண்டிருந்தார்.

    ‘த பாருங்கப்பா…எம்.எல்.ஏ.வர்றதுக்கு எப்படியும் மதியம் ஆய்டும்…அதுக்குள்ளார எப்படியாவது ரத்தம் ஏற்பாடு பண்ணியாகணும்!” சற்று சீனியரான ஒரு கறை வேட்டி சொல்ல

    ‘ப்ச்…பசங்க காத்தால இருந்தே அதுக்காகத்தான் அலைஞ்சிட்டிருக்காங்க…கெடைக்கவே மாட்டேங்குது!”

    திடீரென்று கூட்டத்தில் சலசலப்பு.

    ‘என்னடாது…தலைவர் இப்பவே வந்துட்டாரா?” கேட்டபடி சீனியர் கரை வேட்டி திரும்ப

    எங்கிருந்தோ ஓடி வந்த ஒருவன் ‘அண்ணே….அதே குரூப் ரத்தத்தோட ஒரு ஆள் வந்திருக்கான்..தம்பிக்கு ரத்தம் தரச் சம்மதம்னு சொல்லுறான்!…ஆனா….”

    ‘என்னடா ஆனா?…பணம் கிணம் நெறைய எதிர் பார்க்கறானா?”

    ‘அதில்லைண்ணே….அவனைப் பார்த்தா ஆள் பரதேசி மாதிரி இருக்கான்…அவன் போய் நம்ம தலைவர் பையனுக்கு…..ஜீரணிக்க முடியலைண்ணே!”

    அப்போது அங்கு வந்த மூத்த டாக்டர் ‘இங்க பாருங்கப்பா…வீ ஆர் டாக்டர்ஸ்…எங்களுக்கு உயிரைக் காப்பாத்தணும்கற கடமையிருக்கு….அதனால…நீங்க ‘யெஸ்…ஆர்  நோ” சொல்லுற வரைக்கெல்லாம் நாங்க காத்திட்டிருக்க வேண்டிய அவசியமில்லை…பேஷண்ட் கன்டிஷன் ரொம்ப சீரியஸாகிட்டிருக்கு!…ஸோ…நாங்க வந்திருக்கற அந்த நபரைச் செக் பண்ணப் போறோம்….ரத்தம் ஓ.கே.ன்னா…இம்மீடியட்டா ஆபரேஷனை ஸ்டார்ட் பண்ணப் போறோம்!”

     

    கண்டிப்புடன் சொல்லி விட்டு நகர்ந்தார் டாக்டர்.  கரை வேட்டிகள் குழப்பத்தில் செய்வதறியாது நின்றன.

     

    ‘ரத்தம் பொருந்திடுச்சாம்….ஆபரேஷன் ஆரம்பிச்சிட்டாங்க!”

     

    ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ‘ஆபரேஷன் சக்ஸஸ்…பையன் பொழைச்சிட்டான்” என்கிற தகவல் அங்கிருந்தோரையெல்லாம் மகிழ்ச்சி வௌ;ளத்தில் ஆழ்த்திய போது எம்.எல்.ஏ.வந்து சேர்ந்தார்.

    வந்தவுடன் பிரத்யேக அனுமதி பெற்று தான் மட்டும் சென்று மகனைப் பார்த்து விட்டுத் திரும்பினார்.  நடந்தவற்றை டாக்டர் வாயிலாகவும் கட்சித் தொண்டர்கள் மூலமாகவும் தெரிந்து கொண்ட எம்.எல்.ஏ. ‘எங்கே அந்த மனிதர்?…நான் அவரை உடனே பார்க்க வேண்டும்!…என் மகனின் உயிரைக் காப்பாற்றிய அந்த மாமனிதரைப் பார்த்து ஏதாவது செய்யணும்!…என் குலக் கொழுந்தைக் காலனிடமிருந்து மீட்ட அந்தக் கோமகனுக்கு கோவில் கட்டா விட்டாலும்…கோமேதகத்தைக் கொட்டிக் கொடுக்கா விட்டாலும் குன்றி மணியளவு நன்றி காட்ட ஏதாவது செய்தாகணும்!” அரசியல்வாதி என்பதைத் தன் பேச்சில் அவர் நிரூபித்தார்.

    ‘அய்யா…அதோ அந்த மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்திட்டிருக்கார் பாருங்க?…அவர்தான்!’ சீனியர் கரை வேட்டி தன் சின்ஸியாரிட்டியைக் காட்டியது.

    ‘அடப்பாவிகளா…உதிரம் தந்து உதவிய உத்தமரை உதாசீனப்படுத்தி உச்சி வெயிலில் உட்கார வைத்து விட்டீர்களே இது நியாயமா?” கேட்டபடியே அந்த மரத்தடிக்கு விரைந்து அந்த மனிதரை நெருங்கி அவர் முகத்தைப் பார்த்த எம்.எல்.ஏ.வின் முகம் சட்டென்று மாறியது.

     

    ‘நீ…நீ…உன்னைய இதுக்கு முன்னாடி எங்கியோ பார்த்திருக்கேனே!”

     

    ‘என்ன எம்.எல்.ஏ.அதுக்குள்ளார மறந்திட்டியா?…சாலையோரமா நடந்து பள்ளிக்கூடம் போய்க்கிட்டிருந்த என் பத்து வயது மகனை வேகமா பைக்குல வந்து உன் மகன் இடிச்சுக் கொன்னப்ப….என்கிட்ட ‘கேசெல்லாம் வேண்டாம்…ஆயிரம் தர்றேன்…லட்சம் தர்றேன்”னு பேரம் பேசினியே?…மறந்திட்டியா?”

     

    தன் கட்சித் தொண்டர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த பொது மக்கள் எதிரில் அந்த மனிதர் அப்படிப் பேசியதில் கோபமுற்ற எம்.எல்.ஏ. ‘என்னப்பா வம்பு பண்ணணும்னு வந்திருக்கியா?”

     

    ‘ம்ஹூம்….பிச்சை போட வந்தேன்…போட்டுட்டேன்…கௌம்பறேன்”

     

    அவன் பேச்சு புரியாத எம்.எல்.ஏ. அவனை ஊடுருவிப் பார;க்க,

     

    ‘என் மகனைக் கொன்ன பயலுக்கு ரத்தப் பிச்சை போட வந்தேன்…போட்டுட்டேன்”

     

    கரை வேட்டிகள் கோரஸாய் ‘டா….ய்!” எனக் கத்த

    ‘ச்சூ….கத்தாதீங்கய்யா….இனிமே உங்க தலைவரு பையன் வாழுற வாழ்க்கையே நான் போட்ட பிச்சைதான்…இது போதும்…காலம் பூராவும் உங்க எம்.எல்.ஏ. நொந்து சாக…”

    சொல்லிவிட்டு நகர்ந்தவனை அவமானமாய்ப் பார்த்தார் எம்.எல்.ஏ.

    (முற்றும்)

    Share
  • விதி செய்வோம்

     

    முகில் தினகரன்

    ‘அய்யோ…என்னால முடியலையே…ப்ளீஸ்….என்னை வெளிய விடுங்க…நான் எங்காவது போயிடறேன்….இப்படி என்னைய அடைச்சு வெச்சுக் கொல்லறீங்களே…என்னால முடியலை…என்னால முடியலை…அய்யோ!” விஸ்வத்தின் ஆக்ரோஷமான அடித் தொண்டை அலறலில் அறைக்கு வெளியே ஷோபாவில் அமர்ந்திருந்த கீர்த்தனா நடுநடுங்கிப் போனாள்.

    திடீரென்று விஸ்வம் அறைக்கதவை உடைத்து விடுவதைப் போல் பிசாசுத்தனமாய்த் தட்ட

    ‘கடவுளே…நான் என்ன பண்ணுவேன்?…இந்த நேரம் பார்த்து அம்மாவும் அப்பாவும் வெளிய போயிட்டாங்களே!…இவனோட ஆவேசத்தைப் பார்த்தா கதவையே உடைத்தெடுத்து விடுவான் போலல்லவா இருக்கு!”

    போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிப் போன தங்கள் மகன் விஸ்வத்தை டாக்டரின் அறிவுரைப்படி சிகிச்சைக்காக அறைக்குள் அடைத்து வைத்து விட்டு அதற்குக் காவலாய் தங்கள் மகள் கீர்த்தனாவை அமர வைத்து விட்டு டாக்டரைச் சந்தித்து வரச் சென்றிருந்தனர் அவனது பெற்றோர்.

    ‘ஏய்…கீர்த்தனா!…ப்ளீஸ்…கதவைத் திறந்து விடுடி…ப்ளீஸ்….ப்ளீஸ்…!” தங்கையிடம் ஒரு பிச்சைக்காரனைப் போல் கெஞ்சினான்.

    சில நிமிடங்களிலேயே அந்தக் கெஞ்சல் அழுகையாக மாறியது.

    மெல்ல எழுந்து வந்து அவன் இருந்த அறையின் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தாள் கீர;த்தனா. தரையில் அமர்ந்து சிறு குழந்தையைப் போல் கையைக் காலை உதறிக் கொண்டு அண்ணன் அழுவதைப் பார்த்து பரிதாபப் பட்டது அந்தத் தங்கையின் மனசு.  ‘கடவுளே…நீதான் இவனைக் காப்பாத்தனும்….அந்தப் பாழும் போதைப் பழக்கத்திலிருந்து நீதான் இவனை மீட்டுத் தரணும்!”

    ஜன்னலில் தெரிந்த தங்கையின் முகத்தைப் பார்த்ததும் அவன் அதிகமாய் அழ கீர்த்தனாவிற்கும் அழுகை தானாகவே வந்தது.  தனக்காக அவள் கண்ணீர் சிந்துவதைக் கண்ட விஸ்வம் மெல்ல தன் கோரிக்கையை நாசூக்காக வைத்தான்.

    ‘கீர்த்தனா…ப்ளீஸ்….எனக்கொரு ஹெல்ப் பண்ணுவியா?” அவன் அழுதவாறே கேட்க

    ‘ம்…சொல்லுண்ணா”

    ‘அம்பது ரூபா எடுத்துக்கோ…நேரா பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துல இருக்கற பெட்டிக்கடைக்குப் போ….அங்க…கடைல இஸ்மாயில்னு ஒருத்தன் இருப்பான்…அவன்கிட்ட என் பேரைச் சொல்லி அம்பது ரூபாயைக் கொடு….அவன் ஒரு பொட்டலம் தருவான் …அதை வாங்கிட்டு வந்து என் கிட்டக் குடு…சரியா?”

    அவள் யோசனையாய்ப் பார்க்க சட்டென்று அவள் கைகளைப் பிடித்து கெஞ்சலானான் அவன்.

    அவனது அந்தச் செயலில் மனமுருகிப் போன கீர்த்தனா உடனே புறப்பட்டாள்.

    தங்கை வருவாள்…தனக்குப் பொட்டலம் தருவாள்….என்கிற எதிர்பார்;ப்புடன் ஜன்னலையே பார்;த்தபடி அறைக்குள் அமர்;ந்திருந்த விஸ்வம் தலைவிரி கோலமாய் கத்தியபடி ஓடி வந்த தங்கையைப் பார்த்து அதிர்ச்சியானான்.

    ‘அய்யோ….அண்ணா….அண்ணா…” கத்தியவாறே ஷோபாவில் குப்புற விழுந்து குலுங்கியவளை ஏதும் புரியாமல் பார்த்தபடி நின்றான் விஸ்வம்.

          அப்போது அவசர அவசரமாய் வீட்டிற்குள் நுழைந்த அவனது தாய் நேரே அந்த ஜன்னலுக்கு வந்து ‘அடப்பாவி…நீயெல்லாம் ஒரு மனுசனா?….நீ கெட்டுத் தொலைஞ்சது போதாதுன்னு கூடப் பொறந்தவளையும் கெட்டுப் போக வெச்சிட்டியேடா”

    பின்னாடியே வந்த அவனது தந்தை ‘ஏண்டா அறிவு கெட்டவனே….அந்த மாதிரி எடத்துக்கெல்லாம் வயசுப் பொண்ணை யாராச்சும் அனுப்புவாங்களாடா?…நீ என்னோட போதைக்காக உன் தங்கச்சிய அனுப்பினே…அவன் தன்னோட போதைக்காக அவளையே எடுத்துக்கிட்டான்!…அய்யோ…ஆண்டவா…இந்தக் கர்மத்தையெல்லாம் பார்க்கவா என்னை இன்னும் உசுரோட வெச்சிருக்கே?” மேலே பார்த்துக் கூவினார்.

    அப்போதுதான் தன் தவறு விஸ்வத்திற்கு உறைத்தது. ‘அடப்பாவமே…இஸ்மாயிலும்…அவனோட ஆட்களும் ரொம்ப ரொம்ப மோசமானவங்களாச்சே….அவங்க கைல என் தங்கைய நானே வாரிக் குடுத்துட்டேனே…!  ச்சை…என்னோட இந்தப் பழக்கத்தினால குடும்பத்துல மத்தவங்களுக்கு எத்தனை பிரச்சினை…எத்தனை வேதனை…எத்தனை கவலை!  இப்படியொரு பேரிழப்பு ஏற்பட்ட பிறகும் எனக்கு அந்தப் பழக்கம் தேவைதானா?”

    மூலையில் அமர்;ந்து தீர;க்கமாய் யோசித்தவன் திடீரென்னு ஞானோதயம் ஏற்பட்டது போல் ‘விருட்‘டென எழுந்து ஜன்னலுக்கு வந்து ‘அம்மா….கதவைத் திறங்க” என்றான்.

    சற்று வித்தியாசமாக ஒலித்த அந்தக் குரலிலிருந்த கம்பீரமும் பொறுப்புணர்வும் அவன் தாயின் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த அவள் கணவனைப் பார்த்தாள்.

    அவர் ‘சரி‘யெனத் தலையாட்ட கதவைத் திறந்து விட்டாள்.

    வெளியே வந்த விஸ்வம் நேரே தங்கையிடம் சென்று அவள் தோளைத் தொட்டு ‘என்னை மன்னிச்சுடு கீர்த்தனா…என்னாலதான்…என்னோட போதைப் பழக்கத்தினாலதான் உனக்கு இப்படியொரு களங்கம் ஏற்பட்டிடுச்சு…இப்பவே போய் அவனுகளை…..” பற்களை ‘நற…நற‘வென்றுகடித்தபடி வேகமாய் எழுந்தவனை அடக்கினாள் அவனுடைய தாய்.

    ‘டேய்…டேய்…கொஞ்சம் பொறுமையாய் இருடா…நீ மறுபடியும் அங்க போய்…அவனுகளோட சண்டை போட்டு இந்த விஷயத்தைப் பெரிசாக்கினா…பாதிப்பு அவனுகளுக்கில்லை…நம்ம பொண்ணுக்குத்தான்..!…வேண்டாம்…இதை இத்தோட விட்டுடு…!…அவ விதிப்படி ஆகிறது ஆகட்டும்!…” சொல்லியவாறே கீh;த்தனாவின் கையிலிருந்த பொட்டலத்தை வாங்கி விஸ்வத்திடம் நீட்டி ‘இந்தா உன் தேவை இதுதானே?..வாங்கிக்கோ…நீயாவது சந்தோஷமா…உன்னிஷ்டப்படி இரு” என்றாள்.

    அந்தப் பொட்டலத்தை ‘வெடுக்‘கென்று வாங்கிய விஸ்வம் ஏதோ தொடக் கூடாத ஒரு பொருளைத் தொட்டு விட்டது போல துhர எறிந்து விட்டு ‘இல்லைம்மா…இனிமே இந்தச் சனியனைத் தொடவே மாட்டேன்மா!…என் தங்கையோட வாழ்க்கையே சீரழியக் காரணமாயிருந்த இந்தப் பழக்கத்தை நான் இன்னையோட விட்டுட்டேன்மா…” ஆணித்தரமாய்ச் சொன்னான்.

    அவன் கண்களில் அவன் உறுதியின் தீவிரம் நிமிர்ந்து நின்றது.

    தாங்கள் நடத்திய நாடகத்தின் முடிவு ”சுபம்” என்றானதில் உள்ளுர மகிழ்ந்தன மூன்று உள்ளங்கள்.

     

    (முற்றும்)

     

    Share
  • ஒரு புறம் வேடன்…மறு புறம் நாகம்!

     

    முகில் தினகரன்

    அந்த பங்களா வீட்டின் முன் வெள்ளிங்கிரி வாத்தியார்; வந்து நின்ற போது அதிகாலை ஐந்து மணி.  பக்கத்துத் தெரு கோவிலிலிருந்து சுப்ரபாதம் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது.  இருட்டு விலகாத அந்தத் தெரு வெறுமையாயிருந்தது.  அவ்வப்போது ஒன்றிரண்டு பால்காரர்கள் மட்டும் சைக்கிள் மணியை ஒலித்தபடி கடந்து சென்றனர்.

    “கவுன்சிலரய்யா எந்திரிச்சுட்டாரா?” கேட்டிலிருந்த வாட்ச்மேனிடம் சன்னமான குரலில் கேட்டார் வெள்ளிங்கிரி வாத்தியார்.

    “ம்…ம்…எந்திரிச்சுட்டார்…ஆனா…ஏழு மணிக்கு மேலதான் ஜனங்களைப் பார்ப்பாரு…அப்படிப் போய் ஓரமா நில்லுங்க…அவரு ஆபீஸ் ரூமுக்கு வந்ததும் நானே கூப்புடறேன்!” அந்த நேரத்தில் கூட அவன் வாயில் பீடி.

    “ஹூம்…கவுன்சிலர் வீட்டு வாட்ச்மேனுக்குக் கூட மனசுல கலெக்டர்ன்னு நெனப்பு!” தனக்குள் சொல்லிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து காம்பெளண்ட் சுவரோரம் ஒண்டி நின்று கொண்டார்.

    பொழுது ‘பல…பல”வென விடிந்து தெருவில் ஜன நடமாட்டம் ஆரம்பித்ததும் மறுபடியும் வாட்ச்மேனிடம் வந்தார் வாத்தியார் “அய்யா…ஆபீஸ் ரூமுக்கு வந்துட்டாரா?”

    “யோவ் பெருசு!…அதான் சொன்னேனில்ல?..ஏழு மணிக்கு மேலதான்னு…சும்மா வந்து எதுக்கு தொண தொணக்கறே?” எரிந்து விழுந்தான் வாட்ச்மேன்.

    “அப்படியா சார்?…கொஞ்சம் கையைத் தூக்கி மணியைப் பாருங்க சார்!” வாத்தியார் கிண்டலாய்ச் சொல்ல

    வாட்ச்மேன் சட்டென்று மணியைப் பார்த்தான்.  7.20.

    “அது வந்து…இப்ப வந்துடுவார்…நீங்க இப்படியே நேராப் போயி…அதோ அந்த  போர்ட்டிகோவுக்கு இடது பக்கம் ஒரு ரூம் தெரியுது பாருங்க?…அங்க வெய்ட் பண்ணுங்க!”

    மெலிதாய்ச் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்த வாத்தியார் அவன் காட்டிய அறையைத் தொட்டு அதன் வாசலில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார்.

    உள்ளே கவுன்சிலர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தது இங்கே கேட்டது.

    தன்னைப் பார்த்தும் பார்க்காதது போல் நடந்து சென்ற வேலைக்காரனை வலிய அழைத்துச் சிரித்தார் வௌளிங்கிரி வாத்தியார்  அவனும் வேண்டா வெறுப்பாய் ஒரு சிரிப்பை எறிந்து விட்டுச் சென்றான்.

    அறைக்குள் சென்ற அந்த வேலைக்காரன் “அய்யா…அந்த வாத்தியார் வந்திருக்காரு?” என்றான் கவுன்சிலரிடம்.

    “யாரு?…அந்த ஸ்ட்ரீட் லைட் சிகாமணியா?” கேட்டு விட்டு வாய் விட்டுச் சிரித்தார் கவுன்சிலர்.

    தான் குடியிருக்கும் தெருவுக்கு தெரு விளக்கு கோரி தினமும் நடையாய் நடப்பதால் அவருக்கு அந்தப் பெயரை வைத்திருந்தார் கவுன்சிலர்

    “ஆமாங்கய்யா…அதே வாத்தியார்தான்!” சொன்ன வேலைக்காரன் முகத்திலும் ஒரு இளக்காரப் புன்னகை.

    “நான் இல்லேன்னு சொல்லிடுப்பா!”

    “அப்படிச் சொல்ல முடியாதுங்கய்யா…ஏன்னா உங்க பேச்சுக்குரல் அதுவரைக்கு நல்லாவே கேட்குதுங்கய்யா!”

    “ப்ச்…அட என்னய்யா?…”சலித்துக் கொண்டவர் “சரி…வரச் சொல்லு!” என்றார்.

    “வணக்கம்” தன் கணீர் குரலில் சொல்லியபடியே உள்ளே வந்த வௌளிங்கிரியை அமரச் சொன்னார் கவுன்சிலர்.

    அமர்ந்தவர் “தெரு விளக்கு கேட்டு மனு கொடுத்திருந்தேன்…கிட்டத்தட்ட மூணு மாசமாச்சு…ஒரு பதிலும் இல்லை..கெணத்துல போட்ட கல்லாட்டமிருக்கு!”

    “பெரியவரே…நீங்க இன்னும் உங்க காலத்துலேயே இருக்கீங்க!…உங்களுக்குப் பிறகு மனு குடுத்தவங்கெல்லாம் தெரு விளக்கு வாங்கிட்டாங்க தெரியுமா?”

    ‘தெரியும்….அது தெரிஞ்சுதான் கேக்கறேன்”

    “இங்க பாருங்க பெரியவரே!….நானே கவுன்சிலர்ன்னுதான் பேரு!…எனக்கு எந்தப் பவருமே கெடையாது!…நீங்க குடுக்கற மனுவை உங்க சார்புல கொண்டு போய் கார்ப்பரேஷன்ல கொடுக்கறேன்!…அவங்க சாங்ஷன் பண்ணிக் குடுத்தா வாங்கிட்டு வந்து தர்றேன்!…அவ்வளவுதான்!”

    “அப்ப மத்தவங்களுக்கு சாங்ஷன் பண்ணின கார்ப்பரேஷன் எங்களுக்கு ஏன் பண்ண மாட்டேங்குது?”

    “நீங்க செய்ய வேண்டிய ஃபார்மாலிட்டீஸ் செய்யலை…அதான்!”

    “அதென்ன ஃபார்மாலிட்டீஸ்?” அப்பாவியாய்க் கேட்டார் வௌளிங்கிரி வாத்தியார்.

    “என்ன பெரியவரே….தெரியாத மாதிரி கேக்கறீங்க?….சம்திங்  வெட்டணும் தலைவா!.அப்பத்தான் காரியம் ஆவும்!…ஈஸ்வரன் கோயில் வீதிக்காரங்க வீட்டுக்கு அம்பது…நூறுன்னு வசூல் பண்ணி என் கிட்டக் குடுத்தாங்க!…அதைக் கொண்டுதான் நான் அவங்களுக்கு சாங்ஷன் வாங்கினேன்!”

    “அப்ப லஞ்சம் குடுத்தாத்தான்..காரியமாகும்!…அப்படித்தானே?” வெள்ளிங்கிரி வாத்தியார் முகத்தில் எரிமலை உக்கிரம்.

    “அதுல துளிக்கூட சந்தேகமில்லை!”

    “தேவைதான்…உனக்கு ஓட்டுப் போட்டு உன்னைய கவுன்சிலராக்கினோம் பாரு!…எங்களுக்கு இதுவும் தேவைதான்…இன்னமும் தேவைதான்!”

    “ஹலோ…நல்லாப் புரிஞ்சுக்கங்க…நீங்க எத்தனை மாசம் நடையா நடந்தாலும்..காசு குடுக்காம அங்க காரியம் நடக்காது…வீணா எதுக்கு நேரத்தையும் எனர்ஜியையும் வேஸ்ட் பண்ணறீங்க!”

    “பாக்கறீங்களா…அஞ்சு பைசா கூடக் குடுக்காம தெரு விளக்கு போட்டுக் காட்டறேன் பாக்கறீங்களா?” சொல்லி விட்டு வேகமாய் எழுந்தார் வௌளிங்கிரி வாத்தியார்.

    “அடடே…சவாலா?” கவுன்சிலர் முகத்தில் சிரிப்பு.

    “அப்படியே வெச்சுக்கங்க!” விருட்டென வெளியேறினார்.

    ****

    அடுத்த வாரத்தில் ஒரு நாள்

    விஸ்கியின் உபயத்தால் அரை மயக்கத்திலிருந்த கவுன்சிலரை போன் தொந்தரவு செய்தது. “ச்சை!” சலித்துக் கொண்டே எழுந்து “ஹ…ல்…லோ…வ்!” என்றார் குழறலாய்.

    மறுமுனையில் மேயர்.

    “சார்…வணக்கம் சார்!…சொல்லுங்க சார்!”

    “என்ன ரகுபதி…உங்க வார்டுல என்ன பிரச்சினை?”

    “பிரச்சினையா?…ஒண்ணுமில்லையே!”

     
    “என்னய்யா…ஒண்ணுமில்லைன்னு வெகு சாவகாசமாச் சொல்லுறே…அங்க ஒரு பெருசு….நாலஞ்சு நாளா உண்ணாவிரதமிருந்து இப்பவோ…அப்பவோன்னு கெடக்குதாம்”

    “அது…வந்து சார்…நான் அஞ்சாறு நாளா ஊர்ல இல்லை…இன்னிக்கு காலைலதான் வந்தேன்…அதான் விபரம் தெரியலை…விசாரிக்கறேன் சார்!”

    “நீயொண்ணும் விசாரிக்க வேண்டாம்…நானே விசாரிச்சிட்டேன்…யாரோ ஒரு வாத்தியாராம்…தெரு விளக்கு கேட்டு மனு கொடுத்தாராம்… இழுத்தடிச்சிருக்கீங்களாம்…ஏன்?”

    “ஆமாம் சார்…வர வேண்டியதெல்லாம் வரலை…அதான்…

    “வேண்டாம்யா…விஷயம் பெரிசாயிருச்சு…பிரஸ்காரங்களும்…லோக்கல் டி.வி.க்காரங்களும்…. அந்தாளைப் பத்தி செய்தி போட்டு அவனை ஹீரோவாக்கிட்டாங்க!…. ஜனங்களும் ஓரளவுக்கு விஷயம் புரிஞ்சுக்கிட்டாங்க…இனி பைசாவை எதிர்பார்த்தா விஷயம் கோட்;டை வரை கூடப் போய்டும்..அதனால விட்டுடு!…”

    “சார்…கார்ப்பரேஷன்ல…கமிஷனர்கிட்ட….”

    “அவங்ககிட்டயெல்லாம்…நான் சொல்லிக்கறேன்…நீ உடனே புறப்பட்டு வா!…நாம ரெண்டு பேருமே போயி அந்தப் பெரிசைப் பார்த்துப் பேசி…உண்ணாவிரதத்தை முடிக்கச் சொல்லிடலாம்!”

    “சரி சார்!..நான் இப்ப வந்துடறேன் சார்!”

    மேயரும் கவுன்சிலரும் நேரில் வந்து ஒரே வாரத்தில் தெருக்கு விளக்குப் போட்டுக் கொடுப்பதாக உறுதியளித்த பின்னரே தன் உண்ணாவிரதத்தைக் கை விட்டார் வௌளிங்கிரி வாத்தியார்.
     
    இது நம்ம நாடுதானா?” என்று எல்லோருமே வியக்கும் வண்ணம் மறுநாளே தெருவிளக்குப் போடும் பணி ஆரம்பமாக வௌளிங்கிரி வாத்தியாரின் புகழ் நாலாப்புறமும் பரவியது.  மீடியாக்கள் அவரை எவரெஸ்டில் கொண்டு போய் அமர்த்தி வைத்தன.

    ****

    வெயிலுக்கு குடை பிடித்தபடி நின்று மேற் பார்வை பார்த்துக் கொண்டிருந்த கார்ப்பரேஷன் அதிகாரியை கண் ஜாடை காட்டி அழைத்தான் தியாகு. வெள்ளிங்கிரி வாத்தியாரின் ஒரே மகன்.

    தயங்கியபடியே வந்த அந்த நபர் “என்ன சார்?..என்ன விஷயம்?”

    “அது…வந்து…உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்!”

    “பரவாயில்லை இங்கியே சொல்லுங்க!”

    “வந்து…நம்ப வீட்டு வாசலை ஒட்டி ஒரு தெரு விளக்கு போடணும்….நீங்க மனசு வெச்சா முடியும்!…ஹி…ஹி..” அசிங்கமாய்ச் சிரித்த அவனை அருவருப்பாய்ப் பார்த்த அந்த அதிகாரி.

    “எது…உங்க வீடு?” கேட்டார்.

    “அதோ…அதுதான்!”

    தியாகு காட்டிய வீட்டைத் திரும்பிப் பார்த்த அதிகாரி கண்களால் அளந்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். “ம்ஹூம்….அந்த இடத்துல வராது!….கொஞ்சம் தள்ளித்தான் வரும்!…” என்றார்.

    “தெரியும் சார்…அது தெரிஞ்சுதான் உங்ககிட்ட வந்திருக்கேன்!…ஹி…ஹி”

    “சரி..இப்ப நான் என்ன பண்ணனும்கறே?”

    “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும்”

    “புரியலை”

    “நீங்க எதையும் கண்டுக்காம…நம்ம வீட்டு வாசல்ல ஒரு விளக்குக் கம்பத்தைப் போடுங்க!…நான் வேணா உங்களைத் தனியா கவனிக்கறேன்….ஹி…ஹி”

    அதுவரையில் உறுதியாயிருந்த அந்த அதிகாரி மெல்ல மெல்ல நிறம் மாறத் துவங்கினார்.

    “அது…வந்து எனக்கு மேலதிகாரி ஒருத்தர் இருக்கார்…அவரு இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட்டுல “ஓ.கே!”ன்னு கையெழுத்துப் போடணும்…அதுக்கு அவரையும் சரிக் கட்டணும்!”

    “அதென்ன…பண்ணிட்டாப் போச்சு!” வௌ;ளிங்கிரி வாத்தியார் மகன் அசிங்கமாய்ச் சிரித்தபடி சொன்னான்

    “சரி..சரி..ஆளுங்க பார்க்கறாங்க…நாம பேசிட்டு நிக்கறதைப் பார்த்தா சந்தேகப்படுவாங்க…நீங்க நகருங்க…நான் பார;த்துக்கறேன்!” அந்த அதிகாரி பணத்தாசை வசமாகிச் சொல்ல

    நகர்ந்தான் வௌளிங்கிரி வாத்தியார் மகன் தியாகு.

    ****

    சோடியம் வேப்பர் ஒளியில் அந்தத் தெரு கெஜ்ஜோதியாகக் காட்சியளித்தது.

    லேசான மழைத் தூறலும் இதமான குளிர் காற்றும் அந்த அழகுக்கு இனிமை சேர்த்துக் கொண்டிருக்க,

    நடந்து கொண்டிருந்த வௌளிங்கிரி ஆசிரியரின் நெஞ்சம் நிறைந்திருந்தது. “ஆஹா….எத்தனை வருஷக் கனவு…இன்னிக்கு நிறைவேறியிருக்கு….. ஹூம்…இதை நிறைவேத்தறதுக்குள்ளாரதான் எத்தனை தடைகள்…எத்தனை தடங்கல்கள!”

    தன் வீட்டு வாசலை அடைந்தவர் அங்கு நின்று கொண்டிருந்த மகனிடம் “பாத்தியாடா…நம்ம தெருவை?…”

    “ம்..ம்..பார்த்தேன்..பார்த்தேன்…”

    “இந்தத் தெருவுக்கு தெரு விளக்கு கெடைச்சதுகூட எனக்கு பெரிய சந்தோஷமில்லை….ஒரு பைசா கூட லஞ்சம் குடுக்காம இதை வாங்கினேன் பாரு அதுதாண்டா பெரிய சந்தோஷமாயிருக்கு!….….அதாவது…மக்கள் நெனச்சா…மக்கள் மனசு வெச்சு உறுதியா எதிர்த்து நின்னா இந்த நாட்டுல எல்லா இடத்திலுமே புரையோடிக் கெடக்கற லஞ்சம்ங்கற புற்று நோயை கண்டிப்பா அழிச்சிடலாம்னு தெரியுது…என்ன நான் சொல்றது…?” அப்பாவியாய்க் கேட்டார் வௌ;ளிங்கிரி வாத்தியார்.

    தர்ம சங்கடமாய் விழித்த அவர் மகன் தியாகு “அது…வந்து…ஆமாம்…ஆமாம்ப்பா!” என்றான் திக்கித் திணறி.  அப்போது அவன் பார்;வை அவனையுமறியாமல் தன் வீட்டு வாசலில் ஒளி வீசிக் கொண்டிருந்த அந்த சோடியம் வேப்பா; மின் விளக்கு அண்ணாந்து பார்த்தது.

    (முற்றும்)

     

    Share
  • நன்மையே தீமையாய்!

     

    முகில் தினகரன்

    நான் ஆசை ஆசையாய் வாங்கி வந்து நீட்டிய அந்த புடவைப் பார்சலை முகம் மலர வாங்கி, விழிகளில் ஆவலைத் தேக்கி, இதழ்களில் புன்முறுவலைக் காட்டி, விரல்களில் பரபரப்பைக் கொட்டி, வேக வேகமாய்ப் பிரித்த அமுதா அப்புடவையை வெளியே எடுத்து பிரித்துப் பார்த்ததும் முகம் மாறினாள்.

    “அடப்பாவமே!…பிடிக்கலை போலிருக்கே!

    ம்…ம்…ம்…எப்படி?….இவளுக்குப் பிடித்த ஸ்கை ப்ளு கலர்ல்தானே எடுத்திருக்கேன்…அப்புறம் ஏன்…?”

    சுவாரசியமேயில்லாமல் அதை மடித்து மீண்டும் அதே அட்டைப் பெட்டிக்குள் திணித்தவாறே கேட்டாள். “என்ன விலை?”

    “ம்ம்ம்….ஆயிரத்தி இருநூறு!” அதிகமென்று திட்டுவாளோ… இல்லை…குறைவு என்று பாராட்டுவாளோ…என்பது புரியாமல் திக்கித் திணறி சொன்னேன்.

    “ப்ச்….வேஸ்ட்” என்றாள் ஒற்றை வார்த்தையில்.

    “ஏன் அமுதா…ஏன் அப்படிச் சொல்லுறே?…நான் ஆசைப்பட்டு…நானே செலக்ட் பண்ணிட்டு வந்ததை இப்படி “பொசுக்”ன்னு ‘வேஸ்ட்’ன்னுட்டியே…” பரிதாபமாய்க் கேட்டேன்.

    “ஸாரிங்க….நான் அப்படிச் சொன்னதுக்கான காரணத்தை நானா சொல்லுறதை விட நீங்களே உணருவீங்க!…எப்ப?…நாளைக்கு நான் இதைக் கட்டிட்டு ஆபீஸூக்குக் கிளம்பும் போது!”

    நான் குழப்பமாய்ப் பார்த்தேன்.

    என் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டவள், “கோவிச்சுக்காதீங்க டியர்!” எனக் கொஞ்சலாய் என் கன்னத்தைச் செல்லத் தட்டு தட்டி விட்டுச் சென்றாள்.

    மறுநாள் காலை.

    நானும் அமுதாவும் ஆளுக்கொரு பக்கம் பரபரப்பாய் ஆபீஸூக்குக் கிளம்பிக் கொண்டிருந்தோம்.

    “ஏங்க…டைனிங் டேபிள்ல டிபனெல்லாம் எடுத்து வெச்சிட்டேன்…நீங்களே எடுத்து சாப்பிட்டுக்கங்க!” என்று சொல்லி விட்டு குளியலறைக்குள் புகுந்தாள் அவள்.

    அவசர அவசரமாய் டிபனை அள்ளி விழுங்கி விட்டு, வாசலருகே இருந்த ஸ்டூலில் அமர்ந்து ஷூ அணிந்து கொண்டே, உள் அறையை நோக்கிக் கத்தினேன். “அமுதா…ஆச்சா?…லேட்டாகுதும்மா!”

    “இதோ வந்திட்டேன்!” என்றபடி வந்து நின்றவளைப் பார்த்து முகம் சுளித்தேன்.

    “இதென்னடி புடவை?…..சருகாட்டம் இவ்வளவு லேசாயிருக்கு!…இடுப்புப் பகுதியில் உள் பாவாடை சுருக்கங்கள் எல்லாம் அப்படியே வெளிய தெரியுது!”

    “ம்…இதுதான் நீங்க நேத்திக்கு எடுத்திட்டு வந்த சேலையோட லட்சணம்!”

      என் தப்பும், நேத்திக்கு அமுதாவின் முகம் மாறியதற்கான காரணமும் எனக்கு இப்போதுதான் புரிந்தது.

    “ச்சே!…இதுக்குத்தான் இந்த மாதிரி வேலைகளிலெல்லாம் ஆம்பளைங்க மூக்கை நுழைக்கக் கூடாதுங்கறது!…இதுவே…நீயாயிருந்தா வாங்கும் போதே இதைக் கவனிச்சிருப்பே இல்ல?…ஹூம்…நான் கலரையும்…வெலையையும் மட்டும்தான் கவனிச்சேன்…இந்த மாதிரியெல்லாம் பார்க்கணும்னு தோணக் கூட இல்லை!…” நான் மிகவும் வருத்தப்பட்டுச் சொன்னேன்.

    “அதனாலென்ன பரவாயில்லை விடுங்க…நீங்க ஆசையா எனக்கு எடுத்திட்டு வந்து குடுத்தீங்க பாரு?…அதுவே சந்தோஷம் எனக்கு!…அதைக் கட்டித்தான் சந்தோஷப்படணுமா என்ன?”

    சொல்லியவாறே மீண்டும் உள்ளறைக்குச் சென்று, வேறு புடவையை மாற்றிக் கொண்டு வந்தவளை என் பைக்கில் ஏற்றிச் சென்று, அவள் அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு என் அலுவலகம் நோக்கிப் பறந்தேன்.

    அன்று முழுவதும் என் மனம் மிகவும் சங்கடத்தில் உழன்றது.  “ச்சே!…பாவம் அவளை அநியாயத்திற்கு ஏமாத்திட்டேன்!… ஆனாலும் அந்த ஏமாற்றத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் என்கிட்ட வெகு சகஜமாப் பேசினாளே…ரியலி கிரேட்!”

    அடுத்த மாதத்தில் ஒரு நாள்

    சோப்புத் தூள் விற்க வந்திருந்த ஒரு இளம் பெண்ணுடன் அமுதா பேசிக் கொண்டிருந்தது உள் அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த என் காதுகளில் விழுந்தது.

    “அடப்பாவமே!…காலையிலிருந்து சாயங்காலம் வரை விற்றாலும் ஒரு நாளைக்குக் கமிஷன் நூறு ரூபாய்தானா?” அமுதா அங்கலாய்க்க,

    “ப்;ச்…என்ன மேடம் பண்றது?…கூலி வேலைக்குப் போனாக்கூட இதை விட அதிகம் கிடைக்கும் …ஆனா…போக முடியாதபடி குடும்ப கௌரவம் இடிக்குதே!”

    “அது செரி…கமிஷன் இல்லாம வேற ஏதாவது அலவன்ஸ் மாதிரி குடுக்கறாங்களா?”

    “ம்ஹூம்…நாலு தெரு போறதினால நல்லபடியா உடை உடுத்த வேண்டியிருக்கு!…தெனமும் ஒரு புடவை கட்டக்கூட வக்கில்லாம ஒண்ணு ரெண்டு புடவை மட்டுமே வெச்சுக்கிட்டு….அதையே துவைச்சுத் துவைச்சுக் கட்ட வேண்டியிருக்கு!” தன் நிலையை பரிதாபமாகச் சொன்னாள் அந்த இளம்பெண்.

    “ம்ம்ம்…ஏம்மா…நான் ஒண்ணு கேட்டா…சங்கடப்பட மாட்டியே?” அமுதா கேட்டாள்.

    “என்ன மேடம் சொல்லுங்க!”

    “என்கிட்ட ஒரு புதுப்புடவை இருக்கு…ஒரு தடவை கூடக் கட்டலை!….அப்படியே வாங்கிட்டு வந்த அட்டைப் பெட்டியிலேயே இருக்கு…நீ சங்கடப்படலைன்னா….அதை உனக்குத் தறேன்…பணமெல்லாம் எதுவும் வேண்டாம்…சும்மாவே வெச்சுக்க!”

    “இதுல சங்கடப்படறதுக்கு என்ன மேடம் இருக்கு?…புதுசுங்கறீங்க…ஒரு தடவை கூடக் கட்டலைங்கறீங்க…அப்புறமென்ன?… என் அக்காகிட்ட வாங்கற மாதிரி நெனச்சு வாங்கிக்கறேன்!”

    அப்பெண் சம்மதம் சொன்னதும், அமுதா எழுந்து உள்ளறைக்குள் வந்தாள்.

    “என்ன அமுதா அந்தப் புடவையை அந்தப் பெண்ணுக்குத் தரப் போறியா?” கேட்டேன்.

    “ஆமாம்…அது வேஸ்ட்டாத்தானே கிடக்கு!”

    “சும்மா கிடந்தாலும் பரவாயில்லை… அதைத் தர வேண்டாம்!” கண்டிப்பாகச் சொன்னேன்.

    “என்னங்க…நான் தறதாச் சொல்லிட்டேனே!”

    “ம்…என் வீட்டுக்காரர் தர வேண்டாம்னு சொல்லிட்டார்ன்னு என் மேல பழிய போட்டுடு”

    “ப்ச்…என்னங்க நீங்க…!” அவள் கையைப் பிசைந்து கொண்டு நிற்க, நான் நெருப்பாய் முறைத்தேன்.

    என் முறைப்பின் சூடு தாளாமல் உடனே வெளியேறி, எதையெதையோ சொல்லிச் சமாளித்து அப்பெண்ணை அனுப்பியே விட்டாள்.
     
    இரவு.

    மறுபக்கம் திரும்பிப் படுத்திருந்தவளின் முதுகைத் தொட்டுத் திருப்பினேன்.

    திரும்பியவள் முகத்தில் தார் சாலை இறுக்கம்.

    “அமுதா…நீ ஏன் கோபமா இருக்கேன்னு எனக்குத் தெரியும்!…நான் காரணமில்லாமல் அப்படிச் சொல்லலை… காரணத்தோடதான் சொன்னேன்!”

    அவள் குழப்பமாய் என்னைப் பார்க்க,

    “அந்தப் பொண்ணு சின்ன வயசுப் பொண்ணு!…பார்க்க “தள…தள”ன்னு நல்லா வாளிப்பா வேற இருக்கா!…அப்படியிருக்கற பொண்ணுக்கு உள்ளே இருக்கறதெல்லாம் தெளிவா வெளிய தெரியற மாதிரியான ஒரு சேலையைக் கொடுத்து அவ வாழ்க்கை கெட்டுப் போக நாம காரணமாகலாமா?”

    “என்ன சொல்றீங்க?…அதெப்படி அவ வாழ்க்கைய நாம கெடுக்குற மாதிரி ஆகும்?”

    “பின்னே?…அவ வேலையே தெருத் தெருவா…வீடு வீடாப் போயி சோப்புத் தூள் விக்கறது!…அப்படிப் போகிற சமயத்துல அவ எத்தனையோ விதமான ஆம்பளைங்களைச் சந்திக்க வேண்டி வரும்!…அவ சந்திக்கற எல்லா ஆம்பளைங்களுமே நல்லவங்களா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது!…இப்ப இந்தச் சருகுச் சேலையக் கட்டிட்டு கவர்ச்சியாப் போனா…அந்த மோசமான ஆளுங்களை இவளே தூண்டி விடற மாதிரியும்…அழைப்பு விடற மாதிரியும் இருக்கும்!…”

    “அட…ஆமாங்க!”

    “அவ்வளவு ஏன்?…நல்ல ஆம்பளைங்களைக் கூட புத்தி தடுமாற வெச்சிடும் அந்தச் சேலையோட லட்சணம்!…கடைசில அது ஏதாவதொரு விபரீதத்துலதான் போய் முடியும்!….தேவையா?…நீயொரு நன்மை செய்யப் போக அதுவே அவளுக்கொரு தீமையா ஆகணுமா?…சொல்லு அமுதா!”

    நான் சொல்லச் சொல்ல என்னை….என் எண்ணத்தை முழுவதுமாய்ப் புரிந்து கொண்ட அமுதா “விருட்”டென்று என் முகத்தை தன் நெஞ்சில் பொதித்துக் கொண்டாள்.

    (முற்றும்)

     

    Share
  • எங்க வீட்டு சர்வெண்ட்

     

    முகில் தினகரன்

    காய்கறி மார்க்கெட்.

    ‘அய்ய்யோ…சதீஷ் வேற வர்றானே!…இப்ப என்ன பண்றது?…இந்த மாதிரி ஒரு அம்மாவோட…இத்தனை பைகளைத் தூக்கிட்டு…நான் போறதைப் பார;த்துட்டான்னா…அவ்வளவுதான்… என்னோட ஃபிரெண்ட்ஷிப்பையே கட் பண்ணிக்குவான்!…அது மட்டுமா?…காலேஜ்ல எல்லார; முன்னாடியும் வெச்சு…இதைச் சொல்லிச் சொல்லிக் கிண்டல் பண்ணியே என்னை சாகடிச்சிடுவான்!…” குமார். அந்தப் பணக்காரத் தோழனின் கண் பார்வையில் பட்டு விடாமல் நழுவும் எண்ணத்தில் சுற்றும் முற்றும் வழி தேடினான்.

    அதற்குள் அந்த சதீஷ் அவனைப் பார்த்து விட, ‘போச்சுடா… பார்த்துட்டான்….இனி தப்பவே முடியாது!” தனக்குத் தானே புலம்பிக் கொண்டு உடன் வரும் அம்மாவைப் பார்த்தான்.  ‘அய்யோ…இந்த அம்மாவைப் பார்த்தால் எனக்கே ஒரு மாதிரியிருக்கு…எண்ணை காணாத நரைத் தலையும்…வெளுக்குப் போன நூல் புடவையும்…”எங்கம்மா”ன்னு அறிமுகப் படுத்தினா நிச்சயம் என்னைத்தான் கேவலமா நினைப்பான்.”

    தன்னுடைய ஹூண்டாய் காரை பார;க் செய்து விட்டு குமாரை நோக்கி படு ஸ்டைலாக வந்தான் அந்த சதீஷ்.

    குமார; தன் கைகளிலிருந்த காய்கறிப் பைகளை அவசர அவசரமாய் அம்மாவின் கைகளில் திணித்து விட்டு, முக பாவனையைச் சற்று இறுக்கமாய் மாற்றிக் கொண்டு, சதீஷை சற்றுத் தள்ளியே நிறுத்தி விடும் நோக்கத்தில் அவனைப் பார்த்துக் கையசைத்தபடி வேகமாக முன்னால் வந்தான்.

      ‘ஹாய் குமார;!…எங்கே இந்தப் பக்கம்?….ஹூ ஈஸ் தட் ஓல்டு லேடி?” கூலிங் கிளாஸைக் கழற்றிச் சுழற்றியவாறே அவன் கேட்டான். அவன் அணிந்திருந்த உயர;தர டீ-ஷர;ட்டும்….ஜீன்ஸ் பேண்ட்டும் அந்தக் கூட்டத்தில் அவனைத் தனியே காட்ட, அவன் மீதிருந்த வீசிய காஸ்ட்லி செண்ட்டின் நறுமணம் அங்கிருந்த அனைவரின் நாசியையும் நளினமாய்த் தடவிச் சென்றது.

    ‘நோ யா…சும்மா டைம் பாஸிங்க்காக வந்தேன்!….ச்சை…வெரி டர;ட்டி ப்ளேஸ்…இஸிட்?” செயற்கைத்தனமான பகட்டுடன் பேசினான் குமார்.

    ‘யா…நானும் கூடத்தான் சும்மாத்தான் வந்தேன்!…ம்ம்…அது யாருன்னு நீ சொல்லலியே!” குமாரின் தாயாரை சுட்டிக் காட்டி அந்த சதீஷ் விடாமல் கேட்க. குமார் நெளிந்தான்.

    ‘ஓ…தட் ஓல்டு லேடி?…அவங்க எங்க வீட்டு சர;வெண்ட்!” மனங் கூசாமல் பெற்ற தாயை வேலைக்காரி என்று அறிமுகப்படுத்தினான். மேலும் அவனுடனான உரையாடலைத் தொடர;ந்தால் பொய்க்கு மேல் பொய்யாய் அடுக்க வேண்டி வரும் என்பதை உணர;ந்த குமார;, “ஓ.கே.டா..நான் கௌம்பறேன்…வீட்ல கெஸ்ட் வருவாங்க!” இன்னொரு பொய்யை வீசி விட்டு நகர்ந்தான்.

    தூரத்தில் நின்று கொண்டிருந்த அம்மாவை நெருங்கியவன், “வாம்மா கௌம்பலாம்…மீதியெல்லாம் நாளைக்கு வாங்கிக்கலாம்!”என்றான் ஒரு வித பதட்டத்துடன்.

    “அட..என்னடா நீ?…இன்னும் பாதி சாமான்கூட வாங்கலை… அதுக்குள்ளார போலாம்கறே?” அவனது அவஸ்தை புரியாத அவள் அப்பாவியாய் கூறினாள்.

    “அய்யோ…உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?” எரிந்து விழுந்தான்.

    “சரிடா…ரெண்டு..மூணு முக்கிய சாமான்களையாவது வாங்கிட்டு வந்திடறேனே!” கெஞ்சலாய்க் கேட்டாள்.

    “ம்.ம்.ம்..சரி…சரி…நீயே மட்டும் போய் வாங்கிட்டு வந்து சேரு…நான் மார்க்கெட் வாசல்ல நிக்கறேன்!” சொல்லி விட்டு வேக வேகமாய் ஓடினான்.

    மார்க்கெட் வாசலில் ‘கச..கச’வென்று நின்று கொண்டிருந்த கார்களுக்கு மத்தியில் தன்னை மறைத்தவாறு நின்று, தாயின் வருகைக்காக காத்திருக்கலானான் அவன்.

    ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, இயற்கை உந்துதலைத் தவிர்க்க மாட்டாமல் நாலைந்து கார்களைத் தாண்டி மறைவிடம் தேடிப் போனான்.

    ஒரு வெண்ணிற மாருதி காரைத் தாண்டும் போது, அந்த சதீஷ் அங்கு நின்று யாரோ ஒரு டீன் ஏஜ் ஏஞ்சலிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், சட்டென்று நின்றான்.

    “அடப்பாவி…இங்கேயும் வந்துட்டானா?” ஒளிந்தபடியே நகர;ந்த அவன் காதுகளில் அவர;களின் சம்பாஷனை விழஇ கூர;ந்து கேட்டான்.

     

    “ஹேய்…சதீஷ்….மார;க்கெட்டுக்குள்ளார நின்னு யாரோடவோ பேசிட்டிருந்தியே…யார; அது?…உன்னோட ஃப்ரெண்டா?” ஒரு வித முகச் சுளிப்புடன் அந்த ஏஞ்சல் குரலில் பியானோ இசைத்தது.

    “வாட் தட் ஃபெலோ?…மை ஃபிரெண்ட்?…நோ…நோ…அவன் என் வீட்டு சர்வெண்ட்…அவனைப் போய் என் ஃபிரெண்டுன்னு…ச்சே!…ஜஸ்ட்…என்னென்ன வெஜிடபிள்ஸ் வாங்கனும்னு அவனுக்கு சொல்லிட்டிருந்தேன்!” என்றான் சதீஷ் படு கேஷூவலாக.

    முகத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது குமாருக்கு.  வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

    பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்த அம்மாவிடமிருந்து காய்கறிக் கூடைகளை தானே வாங்கிக் கொண்டு நிதானமாய் நடந்தான்.

    (முற்றும்)

    Share
  • தீக்கொழுந்தில் ஒரு பனித்துளி (19)

     

    முகில் தினகரன்

    அத்தியாயம்  – 19

    மதியம் மூன்று மணியிருக்கும்,

    மாலையில் மகன் வந்ததும் அவனிடம் எப்படிப் பேசுவது….எதைச் சொல்லி அவனைச் சரிக்கட்டி, தேவியின் கணவனுக்கு கிட்னி தானம் செய்யச் சொல்வது, என்று தனக்குள் ஒத்திகை பார்த்தபடி அமர;ந்திருந்தாள் லட்சுமி.

    அப்போது கதவு ‘பட..பட”வெனத் தட்டப்பட,

    ஓடிப் போய்த் திறந்தாள்.

    சுந்தர் பணி புரியும் தறிக் கூடத்து சிப்பந்தியொருவன் நின்று கொண்டிருந்தான்.  அவன் முகத்தில் கலவரம். எதையோ சொல்ல துடிக்கும் உதடுகள். கண்களில் பீதியின் வெளிப்பாடு.

    ‘என்னப்பா…இந்த நேரத்துல?”

    ‘அ…ம்…..மா…!  வந்து…வந்து…தறிக் கூடத்துல தீப்பிடிச்சிடுச்சம்மா!”

    ‘அய்யய்யோ….என்னாச்சு…என் பையனுக்கு என்னாச்சு?” பதறினாள் லட்சுமி.

    ‘ஆளுங்களுக்கெல்லாம் ஒண்ணுமில்லை….ரெண்டு மூணு பேருக்குத்தான்…கொஞ்சம் தீக்காயம்!” அவன் எதையோ மறைக்கிறான் என்பதை அவன் தயக்கத்திலிருந்தே புரிந்து கொண்ட லட்சுமி,

    ‘தம்பி…சாமி சத்தியமா உண்மையச் சொல்லுப்பா..என் மகன் எப்படியிருக்கான்?’ லட்சுமி அவனை நெருங்கி வந்து அவன் தாடையைத் தொட்டுத் திருப்பிக் கேட்டாள்.
     

    ‘ஆமாம்மா…சுந்தருக்கு கொஞ்சம் அதிகப்படியாவே தீக்காயம் ஏற்பட்டிடுச்சும்மா!…ஈரோடு ஜி.ஹெச்.சுக்குத்தான் கொண்டு போயிருக்காங்க!”

    ‘அய்யோ…சுந்தர்;!” அலறியபடியே அவள் சாய,

    வந்தவன் செய்வதறியாது திகைத்து நின்று, பிறகு சட்டென்று சுதாரித்துக் கொண்டு, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தான்.
    —–

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி.

    உடல் முழுதும் தீக்காயங்கள் வாங்கி, தலை முடிகள் முற்றிலுமாய் கருகி, முகம் கோரமாகி, குற்றுயிரும் குலையுயிருமாய் அவசர சிகிச்சைப் பிரிவில் கிடந்தான் சுந்தர்.

    முதல் கட்ட சிகிச்சையை முடித்து விட்டு, அடுத்த கட்ட சிகிச்சைக்குப் போகும் முன், அவன் மயக்கம் தெளியக் காத்திருந்தார; டாக்டா;.

    ‘எக்ஸ்க்யு+ஸ் மீ டாக்டர;!” என்றபடி உள்ளே நுழைந்த ஒரு இளம் டாக்டர;, ‘டாக்டர;…இவரோட வந்தவங்க…வெளிய நின்னுட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுத் துளைச்செடுக்கறாங்க டாக்டர்;…பேஸண்டடோட கண்டிஷன் என்னன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா அதை அவங்களுக்கு கன்வே பண்ணி லேசா அவங்களை ஆஃப் பண்ணிடுவேன்!”

    ‘ம்ஹூம்….பேஸண்ட் இன்னும் சுயநினைவுக்கு வரலை…வந்தாத்தான் எதுவும் சொல்ல முடியும்!…ஓ.கே!…’இன்னும் அபாய கட்டத்துலதான் இருக்கார்;”ன்னு சொல்லி வைங்க!” என்றார; சீப் டாக்டர்.

    ‘டாக்டர்…இப்ப நான் தெரிஞ்சுக்க கேட்கறேன்…சொல்லுங்க…பேஸண்டோட உண்மையான நிலமை என்ன?” அந்த இளம் டாக்டர; சற்று தாழ்வான குரலில் கேட்க,

    ‘ப்ச்!..”என்றவாறு உதட்டைப் பிதுக்கிய  சீப் டாக்டர்;, ‘ம்ஹூம்…தேறாது!” எனறார்…ஒரே வார்த்தையில்.

    ‘மை காட்!” என்றபடி அந்த இளம் டாக்டர் வெளியேறினார்.

    அவர் வெளியேறிய சில நிமிடங்களில் அந்த அறைக்குள் முனகல் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தார; சீப் டாக்டர்.

    சுந்தர்தான்.

    கண்களைத் திறந்து விழிகளை மட்டும் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நகர்த்தி எதையோ பார;வையால் தேடிக் கொண்டிருந்தான்.

    அவனை நெருங்கி நின்று கூர்ந்து கவனித்தார; டாக்டர்;.

    ரணங்களின் வேதனை அவன் கண்களில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

    அவன் எதையோ சொல்லத் தவிப்பது உதடுகளின் துடிப்பில் தெரிய,

    டாக்டர; குனிந்து அவன் காதருகில் சென்று, ‘மிஸ்டர், சுந்தர்;….பயப்படாதீங்க!…உங்களுக்கு பெரிசா ஒண்ணுமில்லை…ஒன்றிரண்டு சிறிய தீக்காயங்கள்தான்!”

    ‘டா…க்…ட…ர்!…. டா…க்…ட…ர்;!” மூச்சு விடவே சிரமப்பட்டான்.

    ‘ம்..சொல்லுங்க…”

    ‘டா…க்…ட…ர்!…நான் பொழைக்க….மாட்டேன்!….எ…ன…க்…கு…த்  தெரியும்!…’மிகவும் கஷ்டப்பட்டுப் பேசினான்.

    ‘யார; சொன்னது?…நிச்சயம் நீங்க பொழைச்சுக்குவீங்க!”

    ‘இல்ல….டாக்டா;….நீ…நீங்க….அந்த…டாக்டர்கிட்ட…பேசிட்டிருந்ததை…நான் கேட்டேன்!”

    திணறிப் போன டாக்டர்;, ‘அது…அது வந்து…சும்மா…” சமாளிக்கப் பார;த்தார்.

    ‘இ…ல்….ல   டா…க்…ட…ர்! எப்படியும்…நான்…சாகத்தான்…போறன்!… அதுக்கு முன்னாடி…. என்னோட… என்னோட கிட்னிய…எடுத்து…சிவா மருத்துவமனைல…இருக்கற…ரத்ன…வேலுவுக்கு…குடுத்திடுங்க!’ சொல்லிட்டு டாக்டரையே ஊடுருவிப் பார;த்தான்.  அந்தப் பார்வையில் ஒரு கெஞ்சல் தெரிந்தது. வாழ்க்கையின் விளிம்பில்…மரணத்தில் வாசலில் இருந்து கொண்டு கெஞ்சும் அந்த ஜீவனின் இறுதி ஆசை டாக்டரை நெகிழச் செய்தது.

    ‘இப்படியும் ஒரு மனுசனா?…தான் சாகப் போறோம்னு தெரிஞ்சதும்…’எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க டாக்டர்” ன்னு கேட்காம எங்கியோ..ஏதோ ஒரு ஆஸ்பத்திரில இருக்கற யாரோ ஒருத்தனுக்கு தன்னோட கிட்னிய எடுத்துக் குடுத்திடுங்கன்னு சொல்றானே!”

    ;டாக்டர; யோசிக்காதீங்க டாக்டர்!…நான் சாகறதுக்கு முன்னாடி ஆபரேஷன் பண்ணி என்னோட கிட்னிய எடுத்திடுங்க டாக்டர்!” அவன் கண்களில் அவசரம் தெரிந்தது.

    டாக்டருக்கும் அவன் எண்ணம் சரியெனவே பட்டது.

    நீண்ட யோசனைக்குப் பிறகு, நர;ஸை அழைத்து சுந்தரின் மெடிக்கல் ரிப்போர்ட் பைல்களை எடுத்து வரச் சொன்னார்.

    அவனது ஸ்கேன் ரிப்போர;ட்டை காஷுவலாகப் பார;த்த டாக்டர; அதிர்ந்தார்;.

     

    Share
  • திருத்தப்பட்ட தீர்ப்புகள்

     

    முகில் தினகரன்

    பிரசவ வார்டின் முன்பகுதியில் கேட்டுக் கொண்டிருந்த அந்தக் கத்தல்களும்…களேபரங்களும் சீஃப் டாக்டர்  நந்தினி வர சட்டென்று அடங்கிப் போயின.

    “என்ன…என்ன இங்க சத்தம்?…இதென்ன பிரசவ வார்டா இல்ல மீன் கடையா?” குரலில் இருந்த கம்பீரம் எல்லோரையும் ஸ்தம்பித்து நிற்கச் செய்ய சற்று தைரியமான ஒரு நர்ஸ் மட்டும் முன் வந்து பதில் சொன்னாள்.

    “டாக்டா;…ஒரு சிக்கலான பிரசவ கேஸ் அட்மிட் ஆகியிருக்கு, இவங்கெல்லாம் அந்தப் பொண்ணோட உறவுக்காரங்க..”

    “இருக்கட்டும்…அதுக்காக சத்தம் எதுக்குப் போடணும்?”

    “இல்ல டாக்டா;…அந்தப் பொண்ணு…சொன்ன பேச்சுக் கேட்காம இந்த நிலைல டூவீலர் ஓட்டிப் பழகப் போயி கீழ விழுந்திருக்கு…வயத்துல எக்கச்சக்கமா அடிபட்டிருக்கு… அதான் சொந்தக்காரங்கெல்லாம் …அதோட புருஷன் உட்பட அந்தப் பொண்ணைத் திட்டித் தீர்த்துட்டிருக்காங்க”

    “வாட் நான்சென்ஸ்?..எதுக்கு அந்தப் பொண்ணைத் திட்டணும்?…அவளைத் திட்டிட்டா எல்லாம் சரியாய்டுமா?…இந்தக் கூட்டத்துல அந்தப் பொண்ணோட புருஷன் யாரு காட்டு… நான் கேட்கறேன்..” சீஃப் டாக்டர் நந்தினி கடுப்பாகி நோக்க,

    சற்று மாநிறமாய்…அகன்ற முகத்துடன்…குள்ளமாய்…குண்டாய் இருந்த ஒருவனை நர்ஸ் முன்னுக்கு அழைத்தாள்.

    வந்தவனிடம் பேச சீஃப் டாக்டர் நந்தினி வாயெடுக்கும் முன் அவனே முந்திக் கொண்டு,

    “த பாரு டாக்டர்…நானும் எங்காத்தாவும் இந்தச் சனியன் புடிச்சவகிட்ட படிச்சுப் படிச்சுச் சொன்னோம்… “வாயும் வயிறுமாய் இருக்கறே..வண்டிய எடுக்காதே”ன்னு…கேட்டாளா?…இப்ப வந்திடுச்சல்ல…கேடு வந்திடுச்சல்ல?…அதான் சொல்லிப் போட்டோம்.. அதோட வயத்துல இருக்கறது எங்க வம்சத்தோட வாரிசு… அதுக்கு மட்டும் ஏதாச்சும் ஆகியிருக்கட்டும்… மவளே.. அப்புறம் கவனிச்சுக்கறோம் அவளை…”

    “எங்க குல விளக்கு மட்டும் உசுரோட பொறக்கலே….இந்தச் சிறுக்கி மவளுக்கு நானே சங்கு ஊதி…நானே கொள்ளி போட்டுடுவேன்… ”மாமியார்க்காரி போல் தெரிந்த ஒருத்தி சாமியாடினாள்.

    டென்ஷனாகிப் போன சீஃப் டாக்டர் நந்தினி, “இங்க பாருங்க…இதெல்லாம் எதிர்பாராம நடக்கற விபத்துக்கள்…யாரும் வேணுமின்னு எதுவும் செய்யறதில்லை…”

    “நீ…என்ன வேணா சொல்லு டாக்டரம்மா..எங்க வம்ச விளக்கு மட்டும் நல்லபடியா வரலை… இங்க நடக்கறதே வேற…”

    சொல்லித் திருத்த முடியாத இந்த ஜென்மங்களிடம் தொடர்ந்து பேசுவதில் சிறிதும் பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்த சீஃப் டாக்டா; பிரசவ அறையை நோக்கி வேகவேகமாக நடக்க,

    கத்தல்களும்… களேபரங்களும் மறுபடியம் மெல்லமாய்த் தலை தூக்க ஆரம்பித்தன.

    பிரசவ அறை.

    கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகப் போராடிய சீஃப் டாக்டர் நந்தினியால் பெரிய உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

    “எங்க குல விளக்கு மட்டும் உசுரோட பொறக்கல….இந்தச் சிறுக்கி மவளுக்கு நானே சங்கு ஊதி…நானே கொள்ளி போட்டுடுவேன்…” என்ற மாமியாரின் மிரட்டலும்

    “எங்க வம்ச விளக்கு மட்டும் நல்லபடியா வரலை…இங்க நடக்கறதே வேற…” என்ற புருஷனின் அதட்டலும்,  சீஃப் டாக்டா; நந்தினியின் காதுகளில் திரும்பத் திரும்ப எதிரொலிக்க, குழம்பிப் போனார்.

    “இப்ப என்ன செய்யறது…எப்படி சமாளிக்கறது…இந்தச் சூழ்நிலைல வெளிய நிக்கற கூட்டத்துக்கு தகவல் தெரிஞ்சுது அவ்வளவுதான்…இந்தப் பொண்ணோட கதி அதோ கதிதான்”

    “டாக்டா;…இப்ப என்ன பண்றது?” அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா கேட்க,

    நெற்றியைத் தடவிக் கொண்டு யோசித்த சீஃப் டாக்டா; நந்தினி, திடிரென ஒரு முடிவுக்கு வந்தவராய் “கரெக்ட்…அதுதான் ஒரே வழி” எனத் தனக்குள் சொல்லிக் கொள்ள,

    “டாக்டா;…?”

    “ம்ம்ம்…மிஸ்.விமலா..ஆறாவது வார்டுல இன்னிக்குக் காலைல ஒரு பெண்ணுக்கு பிரசவம் ஆச்சே..பெண் குழந்தை பிறந்ததே?…,”

    “ஆமாம் டாக்டர்”

    “அந்தப் பொண்ணு மயக்கம் தெளிஞ்சு எழுந்தாச்சா?”

    “இல்ல டாக்டா;…இன்னும் தெளியலை” என்ற அசிஸ்டெண்ட் சர்ஜன் “ஏன் டாக்டர்?..எதுக்குக் கேட்கறீங்க?”

    “அந்தப் பொண்ணு நேத்திக்கு என்கிட்ட ஒரு வேண்டுகோள் வெச்சுது”

    “என்ன வேண்டுகோள் டாக்டர;?”

    “ஏற்கனவே அவளுக்கு மூணு பெண் குழந்தைகளாம்..நாலாவதா ஒண்ணு போன வருஷம் பொறந்திச்சாம்… அதுவும் பொண்ணாப் போயிட்டதால அவளோட புருஷனும் மாமியார்காரியும் சேர்ந்து அந்தப் பெண் குழந்தையை கள்ளிப் பாலுக்கு பலியாக்கிட்டாங்களாம்… இப்ப ஐந்தாவதா பொறக்கப் போறதும் ஒரு வேளை பொண்ணாயிருந்திட்டா அவ மயக்கம் தெளியறதுக்கு முன்னாடியே அதை நான் அழிச்சிடனுமாம்… இல்லென்னா எங்காவது கொண்டு போய் அனாதை ஆசிரமத்துல சேர்த்துடனுமாம், ஏன்னா… எப்படியும் வீட்டுக்குப் போனதும் அவ புருஷனும் மாமியாரும் அந்தக் குழந்தையைக் கொல்லத்தான் போறாங்களாம்.. ஹூம்…ஒரு டாக்டரான நான் உயிர்களை காப்பாற்ற மட்டுமே செய்வேன் எந்தச் சூழ்நிலையிலும் அதை அழிக்க முற்பட மாட்டேன்னு பாவம் அந்தப் பொண்ணுக்குத் தெரியலை”

    “டாக்டர் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை” அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா புருவத்தைச் சுருக்கிக் கொண்டு கேட்க,

    “அந்தப் பெண் மயக்கம் தெளியறதுக்கு முன்னாடி அந்தக் குழந்தையை எடுத்திட்டு வந்து இங்க போட்டுடு…அதே மாதிரி இறந்து பிறந்த இந்தக் குழந்தையைக் கொண்டு போய் அங்க போட்டுடு”

    “டாக்டா;…..”

    “யோசிக்கவே வேண்டாம்…எப்படியும் அந்தப் பெண் குழந்தை வீட்டுக்குப் போனதும் கள்ளிப் பாலுக்கு இரையாகத்தான் போகின்றது.. எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டாத அந்த ஜென்மங்க கிட்டயிருந்து இந்தப் பெண் குழந்தையைக் காப்பாத்த ஒரே வழி இதுதான்”

    “டாக்டர் …நீங்க சொல்றதெல்லாம் சரிதான்…ஆனாலும்…இது…”

    “மிஸ்.விமலா அப்படியே இந்தப் பக்கமும் கொஞ்சம் பாருங்க… “குழந்தை மட்டும் செத்துப் பிறக்கட்டும் உன்னையக் கவனிச்சுக்கறேன்”னு கட்டினவனும் அவளோட உறவுக்காரங்களும் குமுறிக்கிட்டிருக்கற இந்த நெலைல நாம போய் “குழந்தை இறந்துதான் பிறந்தது”ன்னு சொன்னா என்ன நடக்கும்?….யோசிச்சுப் பாரு”

    “அய்யோ டாக்டர், அந்தக் கும்பல் அந்தப் பொண்ணை இங்கியெ வெச்சுக் கொன்னாலும் கொன்னு போட்டுடுவாங்க” சொல்லும் போதே அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலாவின் உடல் லேசாக நடுங்கியது.

    “புரியதா?…இப்பப் புரியதா..நான் ஏன் அப்படிச் செய்யச் சொன்னேன்னு?”

    “இருந்தாலும் டாக்டர், இது தப்பில்லையா?”

    “மிஸ்.விமலா…ஆண்டவன் சில சமயம் சில தவறுகளை செய்து விடுகிறான்…அதாவது வேண்டாம்னு நெனைக்கறவங்களுக்கே திரும்பத் திரும்ப நிறையக் குடுக்கறான்…அதே சமயம் “வேணும்…வேணும்”னு  ஏங்கறவங்களுக்கு ‘இல்லை’ன்னு ‘பொசுக்’குன்னு கையை விரிச்சிடறான்…அதான் ஆண்டவனோட இந்தச் சிறிய தவறை நான் திருத்தறேன்… அவ்வளவுதான்… நான் செய்யற இந்தச் செயலினாலே ஒரு குழந்தை இந்த உலகத்துல உயிரோட இருக்கும்…ஒரு தாய் இந்த உலகத்துல சந்தோஷமா வாழ்வா…அது போதும்மா எனக்கு…”

    அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா பதிலேதும் பேசாது அமைதி காக்க,

    “என்னடா இது…அதிகப் பிரசங்கித்தனமா ஆண்டவனையே திருத்தறேன்னு சொல்றாளே அப்படின்னு நீ நினைக்கறது எனக்குப் புரியது மிஸ்.விமலா…அதே நேரம் நீயும் ஒண்ணைப் புரிஞ்சுக்கோ டாக்டர்களுக்கு ஆண்டவனைத் திருத்தற அந்த உரிமை இருக்கு! ஏன்னா… அவங்க ஆண்டவனோட பிரதிநிதிகள்”

    நெகிழ்ந்து போய் சீஃப் டாக்டர் நந்தினியை தலையாட்டலில் பாராட்டிய அந்த அசிஸ்டெண்ட் சர்ஜன் அவர; இட்ட கட்டளையை படு நாசூக்காக யாருக்கும் சிறிதும் சந்தேகம் ஏற்படாத வகையில் செய்து முடித்தாள்.

    ஆறாவது வார்டில்

    “இன்னாது…பொட்டக் கொளந்த செத்துப் பொறந்திச்சா?..ரொம்ப சந்தோஷம்..நமக்கு வேலை மிச்சம்” கல் மனசுக் கணவன் கரகரத்த குரலில் சொல்ல, அவன் தாய் முக மலர்ச்சியுடன் மேலும் கீழுமாய்த் தலையாட்டினாள்.

    அதே நேரம்….பிரசவ வார்டில்…

    “எப்படியோ டாக்டர் எங்க வம்ச வாரிச…மகாலட்சுமிய…உசுரோட பொறக்க வெச்சுக் குடுத்துட்டீங்க… நீங்க நல்லா இருக்கோணும்” புருஷன்காரன் சீஃப் டாக்டர்; நந்தினியைக் கும்பிட,

    அவன் அம்மாக்காரி மருமகளின் தலையைத் தடவிக் குடுத்தபடி சொன்னாள் “பின்னே…எப்பேர்ப்பட்ட வம்சத்துல வந்து உதிச்சிருக்கற குழந்தை இது…இந்த மாதிரியான சின்னச் சின்ன விபத்துக்கெல்லாம் செத்துடுமா என்ன?”

     

    Share
  • வயிறாற நன்றி

    முகில் தினகரன்

    தொலைக்காட்சியில் கார்ட்டுன் பார்த்துக் கொண்டிருந்த பாபு அறையின் வெளிச்சத்தைக் குறைப்பதற்காக வேண்டி எழுந்து ஜன்னலை மூடப் போனான். அங்கே….. ஜன்னலுக்கு வெளியே வேலைக்காரி முனியம்மா தன் மகன் கண்ணனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவனை மடியில் அமர்த்தி வைத்து…விளையாட்டுக் காட்டிக் கொண்டே ஒவ்வொரு கவளமாக அவள் ஊட்ட..ஊட்ட அவன் சிரித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதைப் பார்க்கப் பார்க்க பாபுவின் மனம் ஏங்கியது. ‘ஹூம்..அந்தக் கண்ணனுக்கும் என் வயசுதான்!…இருந்தும் அவனோட அம்மா அவனை மடியில் வெச்சு ஊட்டி விடறாங்க..எங்கம்மாவுந்தான் இருக்காங்க..ஒரு நாள் என் கூட உட்கார்ந்து நான் சாப்பிடறதை பார்த்திருப்பாங்களா?…எப்பப் பார்த்தாலும் லேடீஸ் கிளப்…மீட்டிங்….இதேதான்’

    ‘ம்மா…போதும்மா…வயிறு நெறைஞ்சிடுச்சும்மா’ கண்ணன் முகத்தைத் திருப்ப ‘இந்தா..இந்த வடையாச்சும் சாப்பிடு’ என்றபடி அவள் வடையை நீட்ட, வாங்கிக் கொண்டான்.

    ‘அய்யய்ய…இது நேத்திக்கு காலைல நம்ம வீட்டுல செஞ்ச வடையாச்சே.!.அது கெட்டுப் போச்சுன்னு நான்தானே வேண்டாம்னு எறிஞ்சேன்..அதைய அம்மா இந்த வேலைக்காரிக்குக் குடுத்திருக்கா போலிருக்கே’ தனக்குள் சொல்லிக் கொண்டே தொலைக்காட்சிக்கு முன் வந்து அமர்ந்த பாபுவிற்கு மனசு வலித்தது. ‘ஹூம்…நான் வேண்டாம்ன்னு வீசியெறியறதை சாப்பிடறவங்க கூட சந்தோஷமா இருக்காங்க..மூணு நேரமும் சுடச்சுட..வகைவகையா சாப்பிடற நான்…இஷ்டமேயில்லாம…வேண்டா வெறுப்பா சாப்பிடறேன்’

    மறுநாள் பள்ளி விடுமுறையானதால் வழக்கம் போல தொலைக்காட்சிப் பெட்டி முன்னாலேயே தவம் கிடந்தான் பாபு.

    ‘தம்பி…வாப்பா… சாப்பிடலாம்… மணி ஒம்பதாகப் போகுது…பசிக்கலையா?’ வேலைக்காரி முனியம்மா அன்போடு அழைக்க அதில் தொனித்த தாய்ப்பாசத்திற்குக் கட்டுப்பட்டு மௌனமாய் வந்து அமர்ந்தான் பாபு. போதாதற்கு முனியம்மா பக்கத்திலேயே நின்று கொண்டு ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடுப்பா..இன்னும் கொஞ்சம் சாப்பிடுப்பா’ என்று அன்பொழுக பரிமாற தன்னையுமறியாமல் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டுவிட்டான் பாபு.

    ‘எதுக்கப்பா இந்த ஒரு சப்பாத்தி மட்டும் பாக்கி…இதையும் சாப்பிட்டுடப்பா’ அவள் நீட்ட மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவனாய் அதையும் தீர்த்தான். தாயப்பாசத்திற்கு ஏங்கிய அந்த பிஞ்சு மனசு வேலைக்காரியின் அன்பையே தாய்ப்பாசமாய் ஏற்று மகிழ்ந்தது.

    முற்பகல் பதினோரு மணியிருக்கும், வெளியே முனியம்மாவின் மகன் கண்ணனின் அழுகுரல் கேட்க ஜன்னலில் வந்து எட்டிப் பார்த்தான் பாபு.

    ‘அட..என்னைய என்ன சாமி பண்ணச் சொல்றே..எப்பவும் அரைகுறையாச் சாப்பிடுற அந்தத் தம்பி இன்னிக்குத்தான் பாவம் நல்லா சாப்பிட்டுச்சு…அதான் அந்த சந்தோஷத்துல எல்லா சப்பாத்தியையும் குடுத்து சாப்பிட வெச்சேன்..பரவாயில்லை விடுப்பா…இன்னொரு நாளைக்கு சாப்பிட்டுக்கலாம்’ ஆறுதலாய்க் கூறினாள். எப்படியும் இன்று மீந்து போன சப்பாத்தி கிடைக்கும் என்ற ஆசையில் மண் விழுந்ததைத் தாங்க முடியாத கண்ணன் அழுது கொண்டேயிருந்தான.;

    பாபுவின் மனதில் முனியம்மா மீதிருந்த மரியாதை பன்மடங்கு உயர்ந்தது. ‘ஆஹா…என்ன ஒரு மனசு இந்த தாய்க்கு…இதுவே வேறு யாராவதாயிருந்தால்..வேண்டுமென்றே எனக்குக் குறைவாகப் பரிமாறிவிட்டு மீந்து போனதை தன் மகனுக்குக் கொண்டு போய்க் குடுத்திருப்பாங்க..ஆனா..இந்த முனியம்மா என்னடான்னா…நான் நிறைய சாப்பிடறதைப் பார்த்து சந்தோஷப்பட்டு தம்மகனுக்கு இல்லாட்டியும் பரவாயில்லைன்னு மொத்தத்தையும் எனக்கே ஊட்டி விட்டுட்டாளே…! ஆனா ஒண்ணு நல்லா புரியது..நான் நல்லா சாப்பிட்டா..அந்தப் பையனுக்குக் கிடைக்காது…நான் அரைகுறையாய்ச் சாப்பிட்டு மீதம் வெச்சாத்தான் அவனோட வயிறு நெறையும்!…அப்ப சரி…’

    அன்று பாபுவுக்கு பிறந்த நாள்.

    ‘முனியம்மா..இன்னிக்கு அவனுக்கு பிறந்த நாள்…அவன் என்ன கேக்கறானோ..அதைச் செய்து குடு!….பாபு…உனக்கு இஷ்டமானதைக் கேளு…முனியம்மா சமைச்சுத் தருவாள்…சாப்பிடு..நான் ஒரு மீட்டிங்க்கு போயிட்டு ஈவினிங் வந்திடறேன்’ மேக்கப்பைச் சரி செய்தபடியே அவசரமாய்ச் சொல்லிவிட்டுப் பறந்தது அம்மாக்கிளி.

    அப்பாக்கிளியொ வந்திருந்த வியாபார நண்பர்களுடன் பேசியவாறே சொல்லாமல் கொள்ளாமல் பறந்து போனது.

    பாபு ஆசை தீரப் பட்டியலிட்டான். முனியம்மா மலைத்துப் போனாள். ‘அட என் ராசா…என் கண்ணே பட்டுடும் போலிருக்கே’ சந்தோஷமாய் சமையலில் இறங்கினாள.;

    மதியம். டைனிங் டேபிளில் பாபுவின் விருப்பப்படி சமைக்கப்பட்ட பதார்த்தங்கள் ஏகமாய்க் காத்திருக்க, பாபுவை அழைக்க அவன் அறைக்குள் சென்ற முனியம்மா அதிர்ந்து போனாள்.

    பையன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

    ‘என்னப்பா..என்னாச்சு?’

    ‘வயிறு ரொம்ப வலிக்குது முனியம்மா’ துடித்தான்.

    ‘அய்யய்யோ…பொறந்த நாளும் அதுவுமாய் இப்படிச் சொல்றியே…என்ன சாப்பிட்டே?’

    ‘ஒண்ணுமே சாப்பிடலையே முனியம்மா’

    ‘சரி வா டாக்டர்கிட்ட போய்க் காட்டிட்டு வந்துடலாம்’

    ‘ம்ஹூம் மாட்டேன்..டாக்டர் ஊசி போடுவார் அது இதை விட வலிக்கும்’ அவசரமாய் மறுத்து விட்டு மெத்தையில் குப்புறப் படுத்துக் கொண்டவனை உசுப்பினாள்.

    ‘அதுக்காக சாப்பிடாமப் படுத்தா எப்படி தம்பி..கொஞ்சமாச்சும் சாப்பிடேன்’

    ‘அய்யோ…வயிறு வலிக்குதுன்னு சொல்றேனல்ல?..அப்புறம் ஏன் என்னைய ‘சாப்பிடு…சாப்பிடு’ன்னு உயிரெடுக்கறே..சாயந்திரம் வரைக்கும் நான் படுத்துத் தூங்கப் போறேன்…என்னைய தொந்தரவு பண்ணாதே..போ’ பாபுவின் பேச்சில் திடிரென்று ஏறி;ய கடுமை முனியம்மாவின் வாயை அடைத்துவிட, முக வாட்டத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். ‘பாவம்..பொறந்த நாளன்னைக்கா இந்தப் பாழும் வயித்து வலி பையனுக்கு வரணும்’

    செய்த பலகாரங்கள் அனைத்தும் வீணாகிப் போக, அன்று இரவு அத்தனையையும் தூக்கி முனியம்மாவிடம் கொடுத்து விட்டு மகனை வலுக்கட்டாயமாக டாக்டரிடம் அழைத்துச் சென்றாள் பாபுவின் தாய்.

    மூன்று நாட்களுக்குப் பிறகு ‘ஏம்பா..டாக்டர் எல்லா டெஸ்டும் பண்ணிப் பாத்துட்டு ‘வயித்துல ஒண்ணுமே மிஸ்டெக் இல்லே’ன்னுட்டாராம..பொய்யாப்பா சொன்னெ நீ?’ முனியம்மா பாபுவிடம் ரகசியமாய்க் கேட்க,

    ‘ஆமாம் பொய்தான் சொன்னேன்’

    ‘ஏன்?..எதுக்குப் பொய் சொன்னே?..நீ கேட்டதையெல்லாம்தான் நான் சமைச்சு வெச்சிட்டேனே’

    லேசாய்க் குறுஞ்சிரிப்பு சிரித்த அந்தச் சிறுவன் ‘முனியம்மா நான் அப்படிப் பொய் சொன்னதுனாலதான் மொத்தப் பலகாரமும் கண்ணனுக்குக் கெடைச்சுது…பாவம்…அன்னிக்கு ஒரு சப்பாத்திகூட விடாம சாப்பிட்டு அவனை அழ வெச்சுட்டேனல்ல…அதுக்காகத்தான் அத்தனை பலகாரமும் அவனுக்குக் கெடைக்க இப்படி ஒரு ஏற்பாடு பண்ணினேன்..அது சரி…கண்ணன் நல்லா திருப்தியா சாப்பிட்டானா?’

    பதில் சொல்ல முடியாதபடி தொண்டை அடைக்க கண்களில் ‘குபுக்’கென கண்ணீர் பொங்க மேலும் கீழுமாய்த் தலையாட்டினாள் முனியம்மா.

    (முற்றும்)

     

    Share
  • தீக்கொழுந்தில் பனித்துளி (18)

     

    முகில் தினகரன்

    அத்தியாயம்  – 18

    இரவு.

    தேவியின் வர்த்தைச் சாட்டைகள் அவன் மனதில் ரத்தத் தீற்றல்களை ஏற்படுத்தியிருக்க, உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.

    ‘நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு வந்து நின்னா…பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவுமில்லையா?”

    ‘நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு வந்து நின்னா…பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவுமில்லையா?”

    தேவியின் தேள் கொடுக்குச் சொற்கள் திரும்பத் திரும்ப காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருந்தன.

    ‘தேவி…நான் யாருக்காகம்மா வாழுறேன்?….உனக்காக மட்டும்தாம்மா வாழ்ந்திட்டிருக்கேன்!…உனக்காகத்தாம்மா இந்த உடம்பின் ஒரு முக்கிய உறுப்பையே வித்தேன்… உனக்காகத்தாம்மா என் காதலியையே இழந்தேன்….. உனக்காகத்தாம்மா…இதோ இந்தக் கிறுக்குப் பெண்ணையே கட்டிக்கிட்டேன்?… இப்படி ஒரே வர்த்தைல என்னைய நொறுங்கிப் போக வெச்சிட்டியேம்மா!”

    தலையணையில் முகம் புதைத்துக் கதறினான்.

    ‘தேவி…சத்தியமாச் சொல்றேம்மா…எனக்கு மட்டும் அந்தச் சாமி மூணு கிட்னியக் குடுத்திருந்தா….என்னோட மாப்பிள்ளைக்கு அழகாத் தூக்கிக் குடுத்திருப்பேனேம்மா!..”

    ‘இரவு முழுதும் கொசுக்கடி… அவள் நினைவுகள்’ என்று எழுதிய யாரோ ஒரு கவிஞன் சுந்தரின் நிலையைப் பார்த்திருந்தால் ‘இரவு முழுதும் சவுக்கடி…தங்க வார்த்தைகள்” என்றும் எழுதியிருப்பான்.
     
    பக்கத்தில் வாயைப் பிளந்தபடி கொர்…கொர்…”ரென்று பேய்த்தனமாய்க் குறட்டை விட்டு உறங்கும் ரேணுகாவை வெறுப்பாய்ப் பார்த்தான்.

    விடியற்காலை நேரத்தில் அவனையேயறியாமல் அவன் உறங்கிய போது, கனவில்…

    வெள்ளைச் சேலையுடன் நடந்து வந்த தேவி, ‘அண்ணா…இது உனக்கே நியாயமா?… என் கழுத்துல தாலி ஏறக் காரணமாயிருந்த நீயே…அது இறங்கவும் காரணமாயிட்டியே…சரி… பரவாயில்லை… கோடிச்சேலையாவது குடு…குடுண்ணா..குடு” என்று கேட்டபடி அவன் சட்டையைப் பிடித்து உலுக்க,

    வாரிச்சுருட்டிக் கொண்டு விழித்தவன், கடிகாரத்தைப் பார்த்தான். மணி 6.15.

    ‘அய்யோ…அதிகாலைக் கனவு பலிக்கும்பாங்களே….”நினைக்கும் போதே அவன் உடல் பதறியது.

    ஏழு மணிவாக்கில் தறிக் கூடத்திற்குக் கிளம்பியவன், போகிற போக்கில் தாயிடம், ‘அம்மா…தேவி நேத்திக்கு தறிக் கூடத்திற்கு வந்திருந்தா…அவ புருஷனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு என்னைய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனா…”

    ‘அய்யய்யோ…. என்னடா இவ்வளவு சாவகாசமாச் சொல்றே?…மாப்பிள்ளைக்கு என்னடா உடம்புக்கு?”

    ‘அது…வந்து….”என்று திணறியவன், ‘நீயே போய் விசாரிச்சுக்கம்மா!” என்று அவசரமாய்ச் சொல்லி விட்டு அதே அவசரத்துடன் வெளியேறினான்.

    ‘என்னாச்சு இவனுக்கு?” குழம்பிப் போன லட்சுமி, ‘டேய்..டேய்..எந்த ஆஸ்பத்திரின்னாவது சொல்லிட்டுப் போடா!”

    ‘சிவா ஆஸ்பத்திரி” சொல்லிவிட்டுச் சென்றான்.

    ——

    ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த தாயிடம் தேவி அந்த விஷயத்தைச் சொன்னதும் அதிர்ந்து போனாள் அவள்.

    ‘யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத நல்ல மனுசனுக்கு பகவான் இப்படியொரு நோவக் குடுத்திட்டானே!” மகளுக்காக கண்ணீர் வடித்தாள்.

    நேரம் பார்த்து தேவி தன் அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.

    ‘அம்மா…அண்ணன் நினைச்சா…என் மாங்கல்யத்தைக் காப்பாத்தலாம்மா!…ஆனா…அண்ணன்தான்…மாட்டேன்னு!” அழுகையை முன்னிறுத்தி தன் தேவைக்கான கொக்கியைப் போட்டாள்.

    ‘என்ன..என்னம்மா சொல்றே?…சுந்தர் உனக்காக என்ன வேணாலும் செய்வானாச்சே…அவனா மாட்டேன்கறான்?…என்கிட்டச் சொல்லும்மா…நான் அவன்கிட்டப் பேசறேன்!”

    தான் சுந்தரிடம் கிட்னி கேட்ட விஷயத்தையும், அவன் மறுத்த விஷயத்தையும் தனக்கே உரிய பாணியில் தேவி தன் தாயிடம் விவரிக்க,
     
    ‘என்னம்மா ஆச்சரியமாயிருக்கு!…நீ கேட்டு சுந்தர் மறுத்திட்டானா?…என்னால நம்பவே முடியலையே!”

    ‘அதெல்லாம் அப்ப…இப்ப அண்ணன் மாறிடுச்சு!”

    ‘சரி தேவி..நீ கவலைப்படாதே!…நான் அவன் கிட்டப் பேசி சம்மதிக்க வைக்கிறேன்!… போதுமா!” நம்பிக்கையுடன் சொன்ன லட்சுமியை பார்த்துச் சிரித்தாள் தேவி.

    ‘ஏண்டி சிரிக்கறே?”

    ‘பின்னே சிரிக்காம என்ன பண்ணச் சொல்றே?…நான் கேட்டே தராதவன்   நீ கேட்டா மட்டும் தந்திடவாப் போறான்?” தாயாரைத் தூண்டி விடும் விதமாய் அவள் சொல்ல,

    ‘நீ வேணாப் பாருடி..நான் சொன்னா அவன் கேட்பான்!” என்ற லட்சுமி மாப்பிள்ளையையும் பார்த்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினாள்

    தொடரும்

     

     

    Share