லக்ஷ்மி ​வைரமணி

ஓம் சரவணபவ மந்திரம் ஓத மறந்து விட்டேனே? அதனால் வந்த விளைவு தானோ இது? சீக்கிரம் பழனி முருகன் கோவிலுக்குப் போலாம் வா என்றாள் சுனிதா. நீ இறைவனுக்கு தாசனா அம்மா? நீ சொன்னா பெய்யெனப் பெய்யும் மழைன்னு ஆயிடுது. கரி நாக்கு……… வட்டமுகத்துடன் பாப்தலையுடன் உதடைச்சுழித்து மழைத்தூறலில் பிளாஸ்டிக் உறைக்குள் உள்ள குறிப்பை மழையில் படித்தபடி இருந்த மாதங்கி கேட்டாள்.

யாருக்கு யார் தாசனாய் இருப்பது? எல்லோருமே இறைவனுக்கு தாசன்கள்தானம்மா……………….தனக்கு இறைவனிடம் கேட்காமல் பிறருக்காக இறைவனிடம் யாசிக்கும் எவருக்கும் கேட்டது கிடைக்கும்னு படிச்சதில்ல.  புக்கை மூடு….மழைல படிச்சது போதும். விழுந்தா எலும்பு கூடத் தேறாது.

உயிரைக் காப்பாற்றியவர் கடவுளுக்கு ஒப்பானவர்கள். அந்த இறைவனை நமக்குப் பிடித்த உருவத்தில் வழிபடுவது இயற்கை அவ்வளவுதான். மடிசார் உடுத்திட்டுதான் பகவானை சேவிக்கணும்னு இல்ல. கவுனை மாட்டிட்டு சர்ச்ல இருக்கணும்னு கட்டாயம் இல்ல. மசூதில போய் மண்டியிடணும்னு அவசியமும் இல்ல. பிற உயிருக்குக் கெடுதல் பண்ணாம, முடிஞ்சா நல்லது செய்யணும். இல்லன்னா அடுத்தவங்களக் கெடுக்காமலயாவது இருக்கணும். அவங்க பக்கத்துல கடவுள் கூடவே இருப்பாருன்னு உங்க ஆசிரியர் உனக்கு சொல்லலயா மாதங்கி…………..

எல்லாரும் அவங்கஅவங்க பொண்ணுக்காக பக்கத்துல வந்தாச்சு…… நீமட்டும் ஹாஸ்டல்ல  ஏம்மா இருக்க…..அப்பாவோடு வந்துடு……ஒண்ணா இருப்போம்.

ஒண்ணா சேந்து போங்க……..அப்பிடின்னா ஒண்ணு செய்யணும்…

பசங்கள நாங்க செய்யுற மாதிரி……நிறைய பாடம் இருக்கு…..நீங்க படிச்சுடுங்க. பிரின்சிபால் அப்பிடித்தான் ராட்சசன் என்று சொன்னால் அவன் படிப்பான். அங்க போய் நீங்க கண்டுக்காதீங்க படிக்கறதுக்காகக் குழந்தைக்குப் பேய் வருதுன்னு பயம் காட்டுற மாதிரி ஆசிரியர் நாங்க உங்களக் காட்டுவோம்.கண்டுக்காதீங்கன்னு சொல்வோம். அவ படிச்சுடுவான். அவன் அறிவு அவ்வளவுதான்….ஆனா பசங்க ஒண்ணொண்னும் பாசமாத்தான் இருக்கும் ஆசிரியர்மேலே……….வாழ்க்கைன்னா மாணவனுக்கு இன்னங்கறது ஒரு சிலருக்கு மட்டும்தான் புரியும். புரிஞ்சவன் மேல போறான். புரியாதவன் இப்படித்தான்.அந்த தியாக மனப்பான்மை இருக்கறதுக்காக நான் ஹாஸ்டல்ல இருக்கேன்.சுயநலம் வந்துடக்கூடாது பாரு. கடமைக்காக உன்னை வளர்த்து விட்டேன். பள்ளியே கதின்னு வந்துட்டேன் ஆச்சு இதோ பதினொரு வருட அனுபவம். அதோ நிக்குது பார் மரம். அது இன்னைக்கு தலை விரிச்சுக்கிட்டு பழத்தை எல்லாத்துக்குத் தருது…நான் ஏன் தரணும்னு அந்த மரம் நினைச்சிருந்தா வெயிலடிக்கிறப்ப அது கீழே அந்தக் குழந்தை விளையாட முடியுமா பாரு……அப்ப நீயும் மரமா அம்மா! கிட்டதட்ட அப்படித்தான்….

காந்தி மாதிரி, காமராஜ்,கக்கன் இவங்கள மாதிரி இந்தக் காலத்துல வாழ்ந்தா பைத்தியம் அப்பிடின்னு சொல்வான். மரத்தையும் வெட்டாத ஆளா பாத்துத் தேடுறேன். நிழலா இருக்கும்னு….கிடைக்க மாட்டேங்குது……..

சோ…..நிழல் தேடிட்டிருக்கற மரம்…..அப்பிடித்தானே………..

தனியா உட்கார்ந்துட்டு இருந்தா நிறைய சாதிக்கலாம். தண்டமா பொழுது போக்காம…பேசாமல் இருந்தால் நிறைய வேலை செய்யலாம். அதனால் தான் உன்னையும் சொல்றேன்.

இப்பத்தான் புரியுது…அம்மா ஏன் தனியா நிக்கறான்னு. ஆனா உங்க பசங்களப்பாத்தா மட்டும் குஷி வந்துடுது…..

பசங்கன்னாலே ஜாலி தான். அது ஒரு அழகிய காலமப்பா….சந்தோஷமா வாழ்ந்த காலங்கள் அது……நீயும் சேந்து இருன்னு இனிமேலும் சொல்லுவியா!

எனக்கு அப்படி உங்கள சொல்ல முடியாது. அப்ப அவங்களோட சேர்ந்து சிரிக்கலாம். உள்ள ஒண்ணு! வெளில ஒண்ணுன்னு பேச முடியாது………. அனுபவம் பேசுதப்பா……………..சிரித்தாள் மாதங்கி. அம்மா சித்தப்பா எங்கே அம்மா? அவர் மாணவர்களை உருவாக்கும் பணில முழுமையா இருக்காரம்மா………. சதுரங்கத்திற்கு 64 கட்டங்கள் தான். ஆனால் சில பேருடைய வாழ்க்கையிலும் ஆய கலைகள் 64 போலத் திருட்டுத்தனம் நிறைய உண்டு. யாரை வெட்டுனா யாரு மேல போலாம்னு. தனக்கும் ஒரு பொண்ணு இருக்குன்னு நினைக்கறதில்ல. க்ளாஸ் டோருக்குள்ள அப்பாவும், வெளில பொண்ணுமா இருக்கணும். அப்ப தெரியும் சில பேருக்கு  வேதனைன்னா என்னன்னு? பூஜைக்கு வர்ற ஆளுங்க விபூதி எதுக்கு பூசிக்கிறாங்க! தேங்காய எதுக்கு உடைக்கறாங்கன்னே தெரியாம கலந்துக்கறாங்க! அதெல்லாம் தெரிஞ்சா ஏம்மா அனாவசியமா பேசுவாங்க…

அம்மா…..இதெல்லாம் உனக்கு யாரும்மா சொல்லிக் கொடுத்தாங்க……..பழைய பேப்பர்கடை புத்தகங்கள் தாம்மா என் அறிவை வளர்த்த அறிவு இயந்திரங்கள்.

இராஜாவை வெட்டுனா ஆட்டமே க்ளோஸ் என்று தெரிவதில்லை. ஏற்கனவே நிறைய கோளாறுகள்.

சாமிய நல்லா கும்பிட்டுக்க………..மாதங்கி…..போலாம்………

தான் என்ற ஆளுமை நிறைய வளர்ந்து விட்ட நிலையில் பிள்ளையார் தான் எங்கும் முழுமுதற்பொருளாய் நிற்கின்றார். ஆனால் இங்கு அவர் ஏன் வர மறந்தார் எனப் பல முறை சிந்தித்தேன். நான் இங்கு வரக் காரணமே அதுதானோ? சுனிதா பல முறை யோசித்தாள். பிள்ளையார் விளக்கு வாங்கி வரச் சொல்லி வாங்கிய நேரம் வைக்க இடத்தைத் தேட யோசித்துக் கொண்டே இருந்தாள். வழி இல்லாமலா போய்விடும் என்று விரைந்தாள் பள்ளியை நோக்கி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *