துப்புரவில் சாதனை!
பவள சங்கரி
மைசூர் மாநகரத் துப்புரவுப் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து சாதனை படைத்து இன்று நாட்டிற்கே வழிகாட்டிகளாக ஆகியுள்ளனர்! இன்று இந்தியாவிலேயே மைசூர் மாநகரம் மிகவும் சுத்தமான நகராக மாறியுள்ளது மட்டுமல்லாமல் இதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் பல இலட்சங்களை வருமானமாகப் பெற்று வருகின்றனர். நகர் முழுவதையும் பல பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும், ஒரு குழுவை அமைத்து, அவரவர்க்குரிய தேவையான இயந்திரங்களைக்கொண்டு சரியானத் திட்டமிடல், மறுசுழற்சி முறை, தொய்வில்லாத செயல்பாடுகள் மூலமாக சாத்தியமாக்கி சாதனைப் படைத்துள்ளார்கள்! தூய்மைப்பணியில் இரட்டை வருமானம் பார்க்கும் சாதுர்யமான நண்பர்களை உளமாரப் பாராட்டுவோம்!