முனைவர் இராம. இராமமூர்த்தி

முனைவர்.இராம. இராமமூர்த்தி அவர்கள் தமிழில் முனைவர் பட்டமும் (Ph.D.), கல்வியியலில் முதுகலைப் பட்டமும் (M.Ed.) பெற்றவர். முதன்மைக் கல்வி அலுவலராகப் (Chief Educational officer) பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனியார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவருபவர். தமிழ் இலக்கண இலக்கிய நூல்களில் ஆழங்காற்பட்ட புலமையுடைய இவர், 4 நூல்களும், 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதி வெளியிட்டுள்ளார். கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறமை கொண்ட இவர், சைவ சித்தாந்த நெறிகளில் ஆழ்ந்த ஈடுபாடும் புலமையும் உடையவர். வேளாக்குறிச்சி ஆதினப் புலவர் என்ற பட்டமும், சமய போதனா ரத்தினம் என்ற பட்டமும் அண்மையில் பெற்றவர்.