பயணம் !
இதில் ஏறி வெற்றிக் கொள்வது
எப்படி என்பது இன்று வரை புதிர்தான்!
எதிர்பாராமல் திறக்கும் முத்தப்பொந்தும்,
இடை தழுவும் கொடியும் உன்மத்தம் ஏற்றும்.
கால் வைத்து ஏற ஆங்காங்கே கவிதைப்படிகளும்,
கண்ணீர் உப்பால் கெட்டித்துப்போன பாறையும் உண்டு.
அமைதியாய் இருப்பதாய் எண்ணுகையில்
அதை முறிப்பதற்கே விழுந்து தெறிக்கும்
கூரான கோபச் சில்லுகள் எங்கும்.
கண்ணில் பட்டவரும், காவியங்களும்
சொன்ன கதையில் மயங்கி ஓர் ஆர்வம்
கொழுந்து விட்டது மெல்லவே. இதோ
யவனக் கயிறை பலமாய் பிடித்தபடி
யுவனும், யுவதியும் தங்கள் பயணத்தை
ஆரம்பிக்கிறார்கள், காதல் என்னும்
வழுக்குப் பாறையின் மீது!
படத்திற்கு நன்றி
http://www.bigbasin.org/trailssequoia.html