பி.தமிழ்முகில் நீலமேகம்

 

ஏடெடுத்து எழுதி வைக்க

எத்துனையோ நினைவுகளுண்டு !!!

நினைவுகளை எல்லாம்

வண்ண மலர்ச்சரமாக்கி

அம்மலர்களின் சுகந்த நறுமணத்தில்

இலயித்திருக்க பொழுதேது ???

 

 

காற்றினில் கலந்து வந்து

நாசியில் படிந்திடும் – மலரின்

நறுமணம் போல்

நினைவலைகளில் கலந்து வந்து

நெஞ்சமதில் இனித்திடும்

இனிய  இன்ப நினைவுகள் !!!

 

 

கதிரவனின் ஒளி பட்டு

மெல்ல விலகி   ஓடும்

பனித்திரை என – உள்ளமதில்

படிந்த  துன்பச் சுவடுகளை

துடைத்தெறியும் பேரலையென

மகிழ்வான தருணங்களின் நினைவலைகள் !!!

 

 

மலரும்  நினைவுகளால்

மனதினில் உருவாகுமோர்

மகிழ்ச்சி ஊற்று !  – அது

இதழின் ஓரத்தில்

கொண்டு  வருமே

அழகானதோர்  புன்னகை கீற்று !!!

 

 

நினைவுகள் – அவை தாம்

ஆகுமே உள்ளக் காயங்கட்கு

நல்லதோர் அருமருந்தாய் !!

அவையும் தான் வருடுமே

துடித்த தவித்த உள்ளங்களை

மென்மையான மயிலிறகாய் !!!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.