வாழ்வே இதுதான்
ஆர்.எஸ்.மணி
vaazhvE idhudhaan- new
(தேனிசையைக் கேட்டு மகிழ!)
வாழ்வே இதுதான்: சுழலும் உலகம்.
இரவும், பகலும், வருமே மாறியே (வாழ்வே இதுதான்)
காலை ஒளியும், மாலை இருளும்,
உறவும், முறிவும், வருமே மாறியே (வாழ்வே இதுதான்)
சுற்றம் என்ன, சூழல் என்ன,
நிலையானதாகுமோ?
சொந்தம் என்ன, பந்தம் என்ன
செல்லாமலே நில்லுமோ?
ஒருநாள் இன்பம், ஒருநாள் துன்பம்,
மாறாதே இக்கோலம். (வாழ்வே இதுதான்)
கன்னி என்ன, காதல் என்ன,
வண்ணம் எல்லாம் மாறுமே!
பாசம் என்ன, நேசம் என்ன,
வந்து பின்னே போகுமே!
ஒருநாள் இங்கே, ஒருநாள் அங்கே
எங்கே எந்தன் வீடும்! (வாழ்வே இதுதான்)
—ஆர்.எஸ்.மணி
(கேம்ரிஜ், ஆன்டேரியோ, கனடா)
கிஷோர் குமாரின் “ஏ ஜீவன் ஹை” என்னும் ஹிந்தி பாட்டின் மெட்டில் எழுதி,
என் குரலில் பதிவு செய்யப் பட்டது..