செண்பக ஜெகதீசன்
இதயத்தைக் கோவிலாக்கி
அன்பை மதமாக்க வந்தான்
இறைவன்..
இந்த மனிதர்கள்,
இதயத்தைக் கல்லாக்கி
கல்லை இறைவனாக்கி
கோவிலாக்கி,
கல்லால் அடித்துக்கொள்கிறார்களே
இறைவனுக்காக-
தங்களுக்குள்…!
படத்துக்கு நன்றி
http://www.demotix.com/news/1580134/thousands-worship-serpent-gods-during-ayilyam-festival
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…