ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தாமரையின் வரிகளில், வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே’ என்ற பாடல், பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது. அதில் இடம்பெற்ற ‘எப்போ வரப்போற? மச்சான், எப்போ வரப்போற? பத்துதல பாம்பா வந்து முத்தம் தரப்போற’ என்ற புதுமையான வரிகள், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ‘பத்து தல’ என்ற தலைப்பிலேயே ஒரு திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் பாடலைச் சென்னை, தாம்பரத்தில் நடைபெற்ற சிறுதானியப் பெருவிழாவில், விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர்ஸ் பாடகியர் அனு, சவுண்டு சவுந்தர்யா ஆகியோர் பாடினர். மனம் வருடும் இந்தப் பாடலைக் கேளுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *