ஆளுநர் – இரண்டு சீர்திருத்தங்கள் தேவை

அண்ணாகண்ணன்

இரண்டு முக்கியச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில் இத்தனைப் பேருக்குப் பட்டங்களை ஆளுநர் வழங்கினார் என்கிறார்கள். மாணவர்களும் நாங்கள் ஆளுநரிடமிருந்து பெற்றோம் என்கிறார்கள். உண்மையில் நடப்பது என்ன?

மேடையில் ஏறும்போது யாரோ அலுவலர் ஒருவர், பட்டத்தை மாணவர்கள் கையில் கொடுக்கிறார். மாணவரே அதை ஆளுநரிடம் கொடுக்கிறார். நிழற்படக் கலைஞரைப் பார்க்கிறார்கள். படம் எடுக்கிறார். பட்டத்துடன் மாணவர், மேடையை விட்டு இறங்குகிறார்.

உண்மையில் மாணவருக்குப் பட்டம் அளித்தவர், யாரோ ஒருவர். இதற்கான பெயர் மட்டும் ஆளுநருக்கு. இதை ஆளுநர் அல்லது பட்டம் வழங்குவோர் தம் கையால் மாணவருக்கு வழங்கும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும்.

இதே போல், சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை ஆளும் அரசின் சார்பாக ஒருவர் எழுதுகிறார். அதைத்தான் ஆளுநர் வாசிக்கிறார். பெயர் மட்டும் ஆளுநர் உரை. இதை மாற்றி, ஆளுநர் உரையை ஆளுநரே நிகழ்த்தும் வகையில் நடைமுறையைத் திருத்த வேண்டும்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *