கொடிக்கம்பம்

தேவா

மந்திரிக்கு காத்திருக்கும் ”கொடிக்கம்பம்”’
வாடிப்போன பூக்கள்
சோர்ந்துபோன மாணவர்கள்
வியர்த்து ஒழுகும் ஆசிரியர்கள்
சுதந்திரதினத்தில் சுதந்திரம் இல்லா மனிதர்கள்,

சரித்திரம் படித்தவர்களும்
சரித்திரம் படைத்தவர்களை மறந்துபோனார்கள்
புலம்பும் தியாகியின் கிழிந்த சட்டையில் காந்தியின்
புகைப்படம் ….

மறுநாள்  செய்தித்தாளில்
கொடியெற்றிய மந்திரி
கொடிக்கம்பம் நட்டதில் ஊழலால் கைது ,…

என்ன!!,
ஆங்கிலேயன் நம்மிடம் சுரண்டிச்சென்றானா??..
இவர்களும்,அவர்களும் ,
சுரண்டினார்கள்!
சுரண்டுகிறார்கள்!!
சுரண்டிக்கொண்டிருப்பர்கள்!!!

 

படத்துக்கு நன்றி: http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=8250

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *